04-12-2006, 01:20 PM
திருகோணமலை நகர் பகுதியில் தமிழ் மக்களிற்கு எதிராக பாரிய வன்செயல்கள் சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வன்செயல்களினால் 11 பேர் கொல்லப்பட்டும், மேலும் 45ற்கும் அதிகமானோர்; படுகாயமடைந்துள்ளனர். தமிழருக்குச் சொந்தமான பெருமளவான கடைகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.
படுகாயமடைந்தோரில் 15 வரையானோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரியவருகிறது.
தற்போது அங்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியவீதியில் சிறீலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒரு படைச்சிப்பாய் உயிரிழந்ததையடுத்து தமிழருக்கு எதிராக பாரியளவில் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமலை மத்தியவீதி, லிங்க நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெருமெடுப்பில் தமிழர்களிற்கு எதிரான வன்முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூப்பதிற்கும் அதிகமான கடைகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.
லிங்கநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் தீ மூட்டி எரிக்கப் பட்டுள்ளது. அந்த நிலையத்திற்கு முன்னால் நின்ற தமிழர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரச் சந்திப்பகுதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரு தமிழர்கள் வெட்டப்பட்டதுடன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 4.15 மணியளவில் மத்தியவீதிப் பகுதியில் உள்ள பலசரக்குக் கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 10பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அக்கடை எரிந்து அழிந்துள்ளது. அதேபோன்று நடைபெற்ற வன்முறைகளில் மேலும் நால்வர் கொல்லப்பட்டும் முப்பது வரையானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேபோன்று நகரில் உள்ள தமிழர்களிற்குச் சொந்தமான பெருமளவான கடைகள் சிங்களக் கடையர்களால் தீமூட்டி எரிக்கப்படுவதுடன், பாரியளவில் கொள்ளையும் இடம்பெறுகிறது. நகரில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி பல்வேறு பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த வன்முறைகளில் சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தகவல்கள் தருகையில் நிலமை தற்போது கட்டுப்பாட்டை மீறியுள்ளது. தாங்கள் தொடர்ந்து கதவுகளிற்குள்ளேயே இரு ப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேவேளை வன்னியி;ல் விடுதலைப் புலிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் திருகோணமலைச் சென்று நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்: சங்கதி
படுகாயமடைந்தோரில் 15 வரையானோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரியவருகிறது.
தற்போது அங்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியவீதியில் சிறீலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒரு படைச்சிப்பாய் உயிரிழந்ததையடுத்து தமிழருக்கு எதிராக பாரியளவில் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமலை மத்தியவீதி, லிங்க நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெருமெடுப்பில் தமிழர்களிற்கு எதிரான வன்முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூப்பதிற்கும் அதிகமான கடைகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.
லிங்கநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் தீ மூட்டி எரிக்கப் பட்டுள்ளது. அந்த நிலையத்திற்கு முன்னால் நின்ற தமிழர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரச் சந்திப்பகுதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரு தமிழர்கள் வெட்டப்பட்டதுடன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 4.15 மணியளவில் மத்தியவீதிப் பகுதியில் உள்ள பலசரக்குக் கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 10பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அக்கடை எரிந்து அழிந்துள்ளது. அதேபோன்று நடைபெற்ற வன்முறைகளில் மேலும் நால்வர் கொல்லப்பட்டும் முப்பது வரையானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேபோன்று நகரில் உள்ள தமிழர்களிற்குச் சொந்தமான பெருமளவான கடைகள் சிங்களக் கடையர்களால் தீமூட்டி எரிக்கப்படுவதுடன், பாரியளவில் கொள்ளையும் இடம்பெறுகிறது. நகரில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி பல்வேறு பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த வன்முறைகளில் சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தகவல்கள் தருகையில் நிலமை தற்போது கட்டுப்பாட்டை மீறியுள்ளது. தாங்கள் தொடர்ந்து கதவுகளிற்குள்ளேயே இரு ப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேவேளை வன்னியி;ல் விடுதலைப் புலிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் திருகோணமலைச் சென்று நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்: சங்கதி
[size=14] ' '

