06-26-2003, 07:12 AM
தமிழ்ச்சோலை வானொலி
கனடா.
ஆனி 24, 2003.
பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு - 2003
'எங்கள் நிலம் எமக்கு வேண்டும். ஆகவே, நீங்கள் உங்கள் நிலத்திற்குச் செல்லுங்கள்" இதுவே யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் முன்வைத்து நடத்தப்படும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வின் பிரதான கோரிக்கையாகும். மிகவும் எளிதான, நடைமுறைச் சாத்தியமான, எவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அன்பான வேண்டுகோளே அது. ஒரு மனிதனின் வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுபவை ஊன், உறையுள், கல்வி, சுகாதாரம். இவை யாவும் கடந்த காலங்களில் எமது மக்களுக்கு மறுக்கப்பட்டு மிருகங்களுக்கும் கேவலமான முறையில் சந்திரிகா அரசாங்கத்தினால் அவலவாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள் எம்மக்கள். பிரதமர் ரணில் அரசு பதவிக்கு வந்ததும் யுத்தம் ஓய்ந்திருப்பது ஏதோ உண்மையெனினும்; எம்மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் விசாரணைக்குட்படுவதும் கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் விசேட அனுமதி பெற்றே கடலுக்குச் செல்லவேண்டி இருப்பதுவும் இன்னும் யாழ்குடாவில் தொடரும அவலங்கள். ஆலயங்களில், பாடசாலைகளில், பட்டினி கிடந்து எம்மக்களால் கட்டப்பட்ட வீடுகளில் இப்போதும் இராணுவப்;படைகள் நிலைகொண்டிருக்கின்றார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இராணும் பொதுஇடங்களை விட்டு அகல வேண்டும் என்று கூறப்பட்டாலும் அவர்கள் அகன்றபாடில்லை. சுருக்கமாகக் கூறின் திறந்த வெளிச் சிறை ஒன்றிற்குள்ளேயே யாழ் குடாநாட்டு மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள்.
எனவே, இராணுவத்தின் இந்த அடாவடித்தனத்தைச் சர்வதேச சமூகத்திற்கு புடம் போட்டுக் காட்டவும், எமது மக்களின் ஒன்றுதிரண்ட சக்தியின் வெளிப்பாடாக ரணில் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கவும் யாழ்பல்கலைக்கழக சமூகம் மற்றும் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை மற்றும் அனைத்து மனிதநேய அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆனி மாதம் 27ந் திகதி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட இருக்கும் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுக்கு, தாய் நிலத்;தை விட்டு அகன்றாலும் புலம் பெயர் நாட்டிலும் தாயக விடுதலையை யாசிக்கும் புலம் பெயர் தமிழ் உறவுகள் சார்பில் தமிழ்ச்சோலை வானொலி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இந்நிகழ்வின் இலட்சியம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
அடங்கி இருந்தால் அழிந்து போவோம்.
பொங்கி எழுந்தால் அவர் அடங்கிப் போவார்.
பொங்கு தமிழும் பொங்கி எழட்டும்.
வெற்றி என்றும் எமதாகட்டும்.
தமிழுக்காய் தலைகொடுத்த தமிழ் மறவர் புகழ் பாடி தரணியெங்கும் தவழ்ந்து வரும் தமிழ்ச்சோலை வானொலி.
கனடா.
ஆனி 24, 2003.
பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு - 2003
'எங்கள் நிலம் எமக்கு வேண்டும். ஆகவே, நீங்கள் உங்கள் நிலத்திற்குச் செல்லுங்கள்" இதுவே யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் முன்வைத்து நடத்தப்படும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வின் பிரதான கோரிக்கையாகும். மிகவும் எளிதான, நடைமுறைச் சாத்தியமான, எவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அன்பான வேண்டுகோளே அது. ஒரு மனிதனின் வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுபவை ஊன், உறையுள், கல்வி, சுகாதாரம். இவை யாவும் கடந்த காலங்களில் எமது மக்களுக்கு மறுக்கப்பட்டு மிருகங்களுக்கும் கேவலமான முறையில் சந்திரிகா அரசாங்கத்தினால் அவலவாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள் எம்மக்கள். பிரதமர் ரணில் அரசு பதவிக்கு வந்ததும் யுத்தம் ஓய்ந்திருப்பது ஏதோ உண்மையெனினும்; எம்மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் விசாரணைக்குட்படுவதும் கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் விசேட அனுமதி பெற்றே கடலுக்குச் செல்லவேண்டி இருப்பதுவும் இன்னும் யாழ்குடாவில் தொடரும அவலங்கள். ஆலயங்களில், பாடசாலைகளில், பட்டினி கிடந்து எம்மக்களால் கட்டப்பட்ட வீடுகளில் இப்போதும் இராணுவப்;படைகள் நிலைகொண்டிருக்கின்றார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இராணும் பொதுஇடங்களை விட்டு அகல வேண்டும் என்று கூறப்பட்டாலும் அவர்கள் அகன்றபாடில்லை. சுருக்கமாகக் கூறின் திறந்த வெளிச் சிறை ஒன்றிற்குள்ளேயே யாழ் குடாநாட்டு மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள்.
எனவே, இராணுவத்தின் இந்த அடாவடித்தனத்தைச் சர்வதேச சமூகத்திற்கு புடம் போட்டுக் காட்டவும், எமது மக்களின் ஒன்றுதிரண்ட சக்தியின் வெளிப்பாடாக ரணில் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கவும் யாழ்பல்கலைக்கழக சமூகம் மற்றும் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை மற்றும் அனைத்து மனிதநேய அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆனி மாதம் 27ந் திகதி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட இருக்கும் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுக்கு, தாய் நிலத்;தை விட்டு அகன்றாலும் புலம் பெயர் நாட்டிலும் தாயக விடுதலையை யாசிக்கும் புலம் பெயர் தமிழ் உறவுகள் சார்பில் தமிழ்ச்சோலை வானொலி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இந்நிகழ்வின் இலட்சியம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
அடங்கி இருந்தால் அழிந்து போவோம்.
பொங்கி எழுந்தால் அவர் அடங்கிப் போவார்.
பொங்கு தமிழும் பொங்கி எழட்டும்.
வெற்றி என்றும் எமதாகட்டும்.
தமிழுக்காய் தலைகொடுத்த தமிழ் மறவர் புகழ் பாடி தரணியெங்கும் தவழ்ந்து வரும் தமிழ்ச்சோலை வானொலி.

