04-11-2006, 08:15 PM
புதியவனுக்கும் சண் எனத்தான் அழைக்கப்படுகிறார் என்பதால் ஒரு ஊகத்தில் எழுதினேன். தவறாயிருந்தால் மன்னிக்கவும். புதியவன், சேயோன் என்ற இரண்டு நபர்களையும் தவிர்த்து மண் பற்றி பார்ப்போம். திரும்ப திரும்ப சேயோன் சரியாக படத்தை பார்க்கவில்லை என்பதை விடுத்து அவர் தனது விமர்சனத்தில் முன்வைத்துள்ள கருத்துக்களை படத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி விளக்கியிருக்கலாம்.
இந்தியாவில்; திரையிடவேண்டுமென்பதற்காக சில காட்சிகளை நீக்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள். இது கூட்டுத்தயாரிப்பு என்பது ஆரம்பம் முதலே தெரிந்திருக்கும். அப்படியானால் ஏன் அரசியலை வலிய திணித்தீர்கள்?
தமிழ் நாட்டுகாரர் ஒருவரின் விமர்சனத்துக்கும் இங்கு நிச்சயம் வித்தியாசமிருக்கும். மணிரத்தினத்தின் "கன்னத்தில் முத்தமிட்டாலில்" மாங்குளத்தில் மலை தெரிகிறது. இது பற்றி பெரும்பாலான தமிழ்நாட்டுக்காரர்களுக்கு பிரச்சனையில்லை. ஏனெனில் அவர்களுக்கு எங்கள் தாயகம் பற்றி தெரியாது. இந்தியாவுக்கு போகாத ஒருவருக்கு மரினா கடற்கரைக்கு அருகில் பனி படர்ந்த மலைத்தொடரை காட்டினாலும் அது அவரை பெரிதும் பாதிக்காது. ஆனால் எங்களது நாட்டையே நடைமுறை யதார்த்தத்துக்கு புறமடபாக காட்டினால் என்ன செய்கிறத படம் வியாபாரமாக வேண்டுமே என பொறுத்துக்கொள்ள முடியாமலிருக்கிறது.
ஒரு ஓலெவல் படிக்கிற மாணவன் (கதாநாயகன்) ஒரு பெண்ணுடன் பழகி, அவளை கர்ப்பமாக்கி, திருமணத்துக்கும் நாள் குறித்துவிட்டு தனது தந்தையாருடனும் உறவினனுடன் பஸ் ஒன்றில் ஊரைவிட்டு தப்பி போகிறான். பஸ்சில் அவளை ஏமாற்றியது பற்றி பலமாககூறி சிரித்து சந்தோசப்படுகிறான். என்னை பொறுத்தவரையில் இந்த இடத்தில் இயக்குனர் பெயிலாகி விடுகிறார். இத்தனை குருரமனம் எந்த மாணவனுககும் இருந்தாக நான் இதுவரை கேள்வி;ப்படவில்லை. கற்பனை கதைதான் ஆனால் இந்த படத்தை வெறும் மசாலாப்படமாக பார்க்க மனம் வரவில்லை.
தமிழ் நாட்டில் காட்டவேண்டும் என்பதற்காகவே படம் இவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்றால் அது ஈழத்தமிழரின் மனதில் இடம்பிடிக்கமுடியாது. கடைசியில் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் நடுவில் நிற்கிறத மண்.
1960 களில் சிங்கள திரைப்படத்துறைக்கு இலங்கையில் சவாலாக இருந்தவை அங்கு வெளியிட்ப்பட்ட இந்தி திரைப்படங்கள் என நான் படித்திருக்கிறேன். அந்த வியாபார போடடியில் பொலிவுூட் படங்களை போல சிங்களப்படங்களை தயாரிக்க தொடங்கியிருந்தால். இன்றய சிங்கள சினிமா போல கலைத்திறனுடன் இருந்திருக்காது. மாறாக காலவெள்ளத்தில் அடியுண்டு போயிருக்கும். இலங்கைக்கு ஜோ அபேவிக்கிரம போன்ற தரமான நடிகர்களும், லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் முதற்கொண்டு பிரசன்ன விதானகே வரை கீர்த்திமிக்க இயக்குனர்களகூட கிடைத்திருக்கமாட்டார்கள்.
இந்த விமர்சனங்களை ஆரோக்கியமானதாக ஏற்றுக்கொண்டு புதியவன் முன்னேறவேண்டும் அதுவே எனது அவா. மற்றயபடி இழுத்து விழுத்தி வேடிக்கை பார்க்கும் எண்ணம் துளியும் என்னிடமில்லை.
- மஞ்சு
இந்தியாவில்; திரையிடவேண்டுமென்பதற்காக சில காட்சிகளை நீக்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள். இது கூட்டுத்தயாரிப்பு என்பது ஆரம்பம் முதலே தெரிந்திருக்கும். அப்படியானால் ஏன் அரசியலை வலிய திணித்தீர்கள்?
தமிழ் நாட்டுகாரர் ஒருவரின் விமர்சனத்துக்கும் இங்கு நிச்சயம் வித்தியாசமிருக்கும். மணிரத்தினத்தின் "கன்னத்தில் முத்தமிட்டாலில்" மாங்குளத்தில் மலை தெரிகிறது. இது பற்றி பெரும்பாலான தமிழ்நாட்டுக்காரர்களுக்கு பிரச்சனையில்லை. ஏனெனில் அவர்களுக்கு எங்கள் தாயகம் பற்றி தெரியாது. இந்தியாவுக்கு போகாத ஒருவருக்கு மரினா கடற்கரைக்கு அருகில் பனி படர்ந்த மலைத்தொடரை காட்டினாலும் அது அவரை பெரிதும் பாதிக்காது. ஆனால் எங்களது நாட்டையே நடைமுறை யதார்த்தத்துக்கு புறமடபாக காட்டினால் என்ன செய்கிறத படம் வியாபாரமாக வேண்டுமே என பொறுத்துக்கொள்ள முடியாமலிருக்கிறது.
ஒரு ஓலெவல் படிக்கிற மாணவன் (கதாநாயகன்) ஒரு பெண்ணுடன் பழகி, அவளை கர்ப்பமாக்கி, திருமணத்துக்கும் நாள் குறித்துவிட்டு தனது தந்தையாருடனும் உறவினனுடன் பஸ் ஒன்றில் ஊரைவிட்டு தப்பி போகிறான். பஸ்சில் அவளை ஏமாற்றியது பற்றி பலமாககூறி சிரித்து சந்தோசப்படுகிறான். என்னை பொறுத்தவரையில் இந்த இடத்தில் இயக்குனர் பெயிலாகி விடுகிறார். இத்தனை குருரமனம் எந்த மாணவனுககும் இருந்தாக நான் இதுவரை கேள்வி;ப்படவில்லை. கற்பனை கதைதான் ஆனால் இந்த படத்தை வெறும் மசாலாப்படமாக பார்க்க மனம் வரவில்லை.
தமிழ் நாட்டில் காட்டவேண்டும் என்பதற்காகவே படம் இவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்றால் அது ஈழத்தமிழரின் மனதில் இடம்பிடிக்கமுடியாது. கடைசியில் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் நடுவில் நிற்கிறத மண்.
1960 களில் சிங்கள திரைப்படத்துறைக்கு இலங்கையில் சவாலாக இருந்தவை அங்கு வெளியிட்ப்பட்ட இந்தி திரைப்படங்கள் என நான் படித்திருக்கிறேன். அந்த வியாபார போடடியில் பொலிவுூட் படங்களை போல சிங்களப்படங்களை தயாரிக்க தொடங்கியிருந்தால். இன்றய சிங்கள சினிமா போல கலைத்திறனுடன் இருந்திருக்காது. மாறாக காலவெள்ளத்தில் அடியுண்டு போயிருக்கும். இலங்கைக்கு ஜோ அபேவிக்கிரம போன்ற தரமான நடிகர்களும், லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் முதற்கொண்டு பிரசன்ன விதானகே வரை கீர்த்திமிக்க இயக்குனர்களகூட கிடைத்திருக்கமாட்டார்கள்.
இந்த விமர்சனங்களை ஆரோக்கியமானதாக ஏற்றுக்கொண்டு புதியவன் முன்னேறவேண்டும் அதுவே எனது அவா. மற்றயபடி இழுத்து விழுத்தி வேடிக்கை பார்க்கும் எண்ணம் துளியும் என்னிடமில்லை.
- மஞ்சு

