04-11-2006, 09:11 AM
லக்கிலுக் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், நான் எந்த கட்சியின் கொள்கைபரப்பு செய்லாலராகவும் நினைத்துக்கொண்டிருக்கவில்லை, எந்த கட்சிக்கும் சார்பானவனும் அல்ல, வைகோ எமக்காக குரல் கொடுக்கிறார், அவரை நேசிக்கிறோம், அவரை நீங்கள் அவமதிக்கும்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கிறோம், அவரது அரசியல் மாற்றங்களை எனது சிந்தனையின் படி வெளியிடுகிறேன், அதில் சரிபிழை இருக்கலாம் முடிந்த முடிவு வைகோவிற்குதான் தெரியும். எனது கருத்தைதான் நான் இங்கு கூருகிறேன், அது உங்களுக்கு ஏற்புடையதாகவும் இருக்கலாம், எதிராகவும் இருக்கலாம். மற்றவன் எம்மோடு எப்படி பழகிறார்களோ அப்படித்தான் நாம் மற்றவருடன் பழகிறோம், காலம்காலமாக ஒடுக்கப்பட்ட நாம் அவற்றை உடைத்தெறியும் போது, அது அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானதாக இருக்கும், சத்தியத்தின்பாற்பட்டதாக இருக்கும், சத்தியத்தின் பக்கமே நாம் நிற்போம், அதற்காகவே நாம்வாதாடுவோம். சரத்குமாருக்கு ஒரு இன்னல் நடந்திருக்கிறது என கட்டுரை கூறுகிறது, கட்டுரையின் உண்மை பொய்களை நீங்கள்தான் ஆராய்ந்து பார்க்கவேண்டும், எம்மை பொறுத்தவரைக்கும் பாடு பட்டவனுக்குதான் பார் சொந்தம், உழைத்தவனுக்குதான் உழைப்பு சொந்தம், கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவனுக்குதான் பதவி கிடைக்கவேண்டும்.
இறுதியில் சத்தியமே ஜெயிக்கவேண்டும், ஈழத்தமிழர் நிச்சயம் ஜெயிப்பார்கள், ஏனெனில் அவர்கள் சத்தியத்தின் பக்கம் நிற்கிறார்கள்.
இறுதியில் சத்தியமே ஜெயிக்கவேண்டும், ஈழத்தமிழர் நிச்சயம் ஜெயிப்பார்கள், ஏனெனில் அவர்கள் சத்தியத்தின் பக்கம் நிற்கிறார்கள்.
.
.
.

