04-10-2006, 09:20 PM
இங்கு சண் என்ற பெயரில் எழுதியுள்ளது இந்த படத்தின் இயக்குனர் சண் அதாவது புதியவன் என நம்புகிறேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்த விமர்சனத்தை இங்கு பதிவு செய்தவன் என்ற வகையிலும் இந்த படத்தை பார்த்தவன் என்ற முறையிலும் சில கருத்துக்களை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.
சேயோனுக்கும் சண்ணுக்கும் (புதியவன்) இடையிலான பிரச்சனைகள பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால் சேயோனின் விமர்சனத்துடன் ஒத்திசைவான கருத்துக்கள் இருந்தமையால்தான் அதனை இங்கு பதிவாக்கினேன்.
புதியகாற்று, பொன்மணி, நான் உங்கள் தோழன், வாடைக்காற்று, கோமாளிகள், ஏமாளிகள், அனுராகம், நாடுபோற்ற வாழக என பல ஈழத்து திரப்படங்களையும் எண்ணற் சிங்கள (தரமான) திரைப்படங்களையும் பார்த்தவன் என்ற வகையில் மண் படம் பெருத்த ஏமாற்றத்தையே தந்தது. இத்தனைக்கும் விருது பெற தகுதியான படம், திரைப்படவிழாவுக்கு போகிறது என மண்ணாங்கடடியை சர்க்கரையாக்கும் கருத்துக்களும் இங்கு முன்பு பதியப்பட்டது.
விடுதலைப்புலிகள் என்ற பெயர் படத்தில் பாவிக்கப்படாவிட்டாலும், 83லிருந்து 18 வருடத்துக்குபிறகு கனகராசன் குளம் யாருடைய ஆழுகைக்குட்பட்டுள்ளது என்பது 7-8 வயது குழந்தைகளுக்கும் தெரிந்த விடயம்.
நான் முன்பு குறிப்பிட்ட ஈழத்து தமிழ்ப்படங்களை பாரக்கும் போதெல்லாம் ஈழத்து திரைப்படம் வளர்ந்து சிங்கள சினிமா போல் திரைப்படவிழாக்களுக்கு தெரிவாகி விருது பெறும் என நம்பியிருந்தேன். மண் மாதிரி படங்கள் தொடர்ந்து தயாரானால். அது இந்த யுகத்தில் நிறைவேறும் மாதிரி தெரியவில்லை. சரி கலைபடம் எடுக்கவில்லை, தென்னிந்தியாவில் திரையிடும்படியா இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது?
மறுபடியம் கூறுகிறேன் எந்த காழ்ப்புணர்ச்சியிலும் இதனை கூறவில்லை. எனது கருத்துக்கள் சரியா தவறா என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக ஒரு தடவையாவது படத்தை பாருங்கள்.
சேயோனுக்கும் சண்ணுக்கும் (புதியவன்) இடையிலான பிரச்சனைகள பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால் சேயோனின் விமர்சனத்துடன் ஒத்திசைவான கருத்துக்கள் இருந்தமையால்தான் அதனை இங்கு பதிவாக்கினேன்.
புதியகாற்று, பொன்மணி, நான் உங்கள் தோழன், வாடைக்காற்று, கோமாளிகள், ஏமாளிகள், அனுராகம், நாடுபோற்ற வாழக என பல ஈழத்து திரப்படங்களையும் எண்ணற் சிங்கள (தரமான) திரைப்படங்களையும் பார்த்தவன் என்ற வகையில் மண் படம் பெருத்த ஏமாற்றத்தையே தந்தது. இத்தனைக்கும் விருது பெற தகுதியான படம், திரைப்படவிழாவுக்கு போகிறது என மண்ணாங்கடடியை சர்க்கரையாக்கும் கருத்துக்களும் இங்கு முன்பு பதியப்பட்டது.
விடுதலைப்புலிகள் என்ற பெயர் படத்தில் பாவிக்கப்படாவிட்டாலும், 83லிருந்து 18 வருடத்துக்குபிறகு கனகராசன் குளம் யாருடைய ஆழுகைக்குட்பட்டுள்ளது என்பது 7-8 வயது குழந்தைகளுக்கும் தெரிந்த விடயம்.
நான் முன்பு குறிப்பிட்ட ஈழத்து தமிழ்ப்படங்களை பாரக்கும் போதெல்லாம் ஈழத்து திரைப்படம் வளர்ந்து சிங்கள சினிமா போல் திரைப்படவிழாக்களுக்கு தெரிவாகி விருது பெறும் என நம்பியிருந்தேன். மண் மாதிரி படங்கள் தொடர்ந்து தயாரானால். அது இந்த யுகத்தில் நிறைவேறும் மாதிரி தெரியவில்லை. சரி கலைபடம் எடுக்கவில்லை, தென்னிந்தியாவில் திரையிடும்படியா இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது?
மறுபடியம் கூறுகிறேன் எந்த காழ்ப்புணர்ச்சியிலும் இதனை கூறவில்லை. எனது கருத்துக்கள் சரியா தவறா என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக ஒரு தடவையாவது படத்தை பாருங்கள்.

