04-08-2006, 09:09 AM
மாற்று, கனவுகள் நிஜமானால் என்ற
திரைப்படங்களை இயக்கி அனுபவம் பெற்ற
புதியவன் இயக்கிய மற்றொரு திரைப்படம்
ஹமண்'. இத்திரைப்படத்தை விமர்சிக்க எனக்கு
ஒன்றுமில்லை. ஒரு வரியில் சொல்வதானால்
"சிறுபிள்ளைத்தனமான ஒரு திரைப்படம்.'
இத்திரைப்படம் பற்றி ஏதும் எழுதத்தான்
வேண்டுமா, எழுதுவதென்றால் என்ன எழுது
வது, எப்படி எழுதுவது, என்றெல்லாம் பொறுப்
பாசிரியரும், ஆசிரியர் குழுவில் மூவரும்
இணைந்து உரையாடினோம். திரைப்படம்
காட்சிப்படுத்தப்பட்ட அந்தத் தினத்து இரவு,
விடிய வரைக்கும் கூட எங்களது கதையாடலில்
இது ஒரு விசயமாக இருந்தது. அந்த விதத்தில்
இது பாதித்திருந்தது. எப்படியென்று
சொல்கின்றேன்.
வன்னியில் கனகராசன் குளத்தில் நடக்கின்ற
கதைதான் இத்திரைப்படம். 83 இனப்
படுகொலையில் மலையகத்திலிருந்து ஒரு
குடும்பம் வன்னிக்கு இடம் பெயர்கின்றது.
"தோட்டக்காட்டார்" என்ற இழிசொல்லுடன் அக்
குடும்பம் படும் அவமானமும் இன்னலும்
ஊடுபாவாக இத்திரைப்படத்தில் ஓடுகிறது.
சேர்ந்தாற் போல மலையக இளம் பெண்ணை
வன்னி இளைஞன் காதலிப்பதும, கர்ப்பமாக்கு
வதும் கைவிட்டு ஓடுவதும் சுமார் 18 வருடங்களின்
பின் (16,18 என்றெல்லாம் எங்களைக் குழப்பு
கிறார்கள்) ஏமாற்றிய வன்னி இளைஞன்
இலண்டனிலிருந்து ஊருக்கு வந்தபோது
அவனது மகனான விடுதலைப் புலி இயக்கப்
போராளியால் சுட்டுக் கொல்லப்படுவதுடன்
திரைப்படம் நிறைவுறுகிறது.
தெளிவற்ற, மிகப் பலவீனமான திரைப்படப்
பிரதி எங்களை நன்றாகவே குழப்பி விடுகிறது.
காட்சி அமைப்புகளும் அப்படியே அமைந்து
விடுகின்றன. சில உதாரணங்களைப் பார்ப்
போமோ வன்னிப் பாடசாலை ஒன்றில் க.பொ.
த. சாதாரண தரம் படிக்கின்ற மாணவ மாணவி
யர் சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர்
ஒன்றாகவே பாடசாலை செல்கின்றார்கள்.
அவர்களுக்குள்ளும் ஆசிரியருடனும் இரட்டை
அர்த்த வசனங்கள் தாராளமாகவே புழங்கு
கின்றன. வன்னி மாணவர்கள் பியர் குடித்து
விட்டு பாடசாலைக்கு வருகிறார்கள். பின்னேரங்
களில் கள்ளு குடிக்கப் போகிறார்கள். "கவிதை
வாசித்து கவிழ்த்து விடப்பட்ட' மலையக
இளம்பெண் திருமணத்திற்கு முன் உடலுறவில்
ஈடுபட்டதற்கு எவ்வித மனக்கிலேசமும்
அடையவில்லை. பனடோல் குடித்தோ பப்பாசிக்
காய் சாப்பிட்டோ கருவைக் கலைத்து விடலாம்
என்கிறாள். ஆனால் கரு உருவானபோது
ஹகுய்யோ முறையோ' என்று குமுறுகிறாள். அந்த
இளைஞனை குற்றம் சாட்டுகிறாள். அரசியலால்
சுூழப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் ஒருவருக்கும்
அரசியல் ஒரு பிரச்சினையாக இல்லை.
காதல்தான் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு
தேசமாக போராளிகளின் நிர்வாகத்தில் வன்னி
வந்த பிறகு, தென்னந்தோப்பில் பகிரங்கமான
இடத்தில், சாராயம் குடித்து ஆண்களும் பெண்
களும் பைலா ஆடுகிறார்கள். அவர்களில்
போராளிகளும் இருக்கின்றனர். விடுங்கள்-
ஆயிரம் குறைகள் இருக்கின்றன. எல்லாவற்றை
யும் அடுக்க இடம் போதாது.
என் கேள்வி வேறொன்று. இப்படித் திரைப்
படங்கள் எடுக்கத்தான் வேண்டுமா? இத்திரைப்
படம் தயாரிப்பதற்கான செலவு நு}றாயிரம்
பவுண்ஸ் என்று இயக்குனர் புதியவன் சொன்ன
தாக ஒருவர் சொன்னார். இவ்வளவு செலவில்
இப்படி ஒரு திரைப்படம் தயாரிப்பது மிகப்
பிழையான முன்னுதாரணம் ஆகி விடாதா?
ஒன்றை இந்த இடத்தில் நாம் உணர
வேண்டும். ஆயிரம் குறைகள் இருந்தாலும,
இப்பொழுதுதானே குழந்தை அது தவழத்தானே
பார்க்கும். அதற்கிடையில் எழும்பி நடக்க
வேண்டும் என்று அவசரப்பட்டால் அது எங்ஙனம்
சாத்தியம் என்று யாரேனும் சொல்வாரானால,
அடியோடு நான் அந்த வாதத்தை மறுப்பேன்.
ஈழத் தமிழர்களால் 60களில் தோட்டக்காரி
சமுதாயம் என்ற திரைப்படங்களில் தொடங்கி
சுமார் அரை நு}ற்றாண்டு ஆகி விடுகின்ற
ஞஉலையில் அது தவμம் தானே என்றால், அந்தக்
குழந்தையில் ஏதோ பிழை இருக்கின்றது. அது
சவலைக் குழந்தை. அப்படித்தான் நினைக்க
வேண்டும்.
ஆனால் அப்படியல்ல. திரைப்படம் என்பது
உன்னதமான கலை என்பது ஒருபுறமிருக்க,
அது பணத்தை அதிகம் கொட்ட வேண்டிய
கலையும் கூட. கொட்டிய பணத்தை திரும்ப
எடுக்க வேண்டும். ஆக, திரைப்படங்களுக்கு
சந்தை நிலவரத்துக்காக சமரசம் செய்வதென்ற
ல்ல, தரமான படைப்பாகப் கொடுக்க வேண்டிய
தேவை உண்டு. எனவே குறைந்த செலவில்
தரமான திரைப்படத்தை உருவாக்குவது பற்றி
நாம் யோசிக்க வேண்டும்.
இது எங்களால் இயலுமா? 1930களில் ஆரம்
பித்த தமிழ் நாட்டுத் திரைப்படம், இப்போதுதான்
சிறந்த திரைப்படங்களைத் தருகின்ற களமாக
ஆகி வருகின்றது. இத்தனைக்கும் சந்தை
நிலவரம் உச்சத்தில் இருக்கின்ற ஒரு களம்
அது. அதற்கே இவ்வளவு காலம் எடுக்கிறது.
இந்தப் பக்கத்தையும் நம் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
இறுதியாக புதியவனுக்கு ஓர் அட்வைஸ்.
அறிவுஜீவியாக புதியவன் இதனைக் கேட்பாரோ
என்னவோ. என்றாலும் சொல்வது எமது கடமை.
திரைப்படப் படைப்பு தொடர்பான உங்கள்
ஆர்வம் எமக்குப் புரிகிறது. தமிழீழத்திலும்
திரைப்படம் ஒரு படைப்பாக நன்கு வளர்கின்
றது. அங்கு செல்ல உங்களுக்குத் தயக்கம்
இருக்கலாம். தமிழ்நாட்டுக்குச் சென்றுஇ ஒரு
திரைப்பட இயக்குனருக்கு உதவியாளராகப்
பணிபுரிந்து இக்கலவையப் பற்றி ஓரளவுக்
காவது கற்று திரைப்படங்களைப் படைக்க
முயலுங்கள். மணிரத்னம்இ பாலா. சேரன.
சீமான, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், தங்கர்
பச்சான், சுசி கணேசன், விக்ஷ்ணுவர்த்தன,
அமீர் போன்றோரை நான் சிபார்சு செய்வேன்.
முயற்சி செய்யுங்கள். பப்பாவில் ஏற்றுபவர்களை
உங்களை விட்டு அகல நிற்கச் செய்யுங்கள்.
-சேயோன்
நன்றி : ஒரு பேப்பர்
திரைப்படங்களை இயக்கி அனுபவம் பெற்ற
புதியவன் இயக்கிய மற்றொரு திரைப்படம்
ஹமண்'. இத்திரைப்படத்தை விமர்சிக்க எனக்கு
ஒன்றுமில்லை. ஒரு வரியில் சொல்வதானால்
"சிறுபிள்ளைத்தனமான ஒரு திரைப்படம்.'
இத்திரைப்படம் பற்றி ஏதும் எழுதத்தான்
வேண்டுமா, எழுதுவதென்றால் என்ன எழுது
வது, எப்படி எழுதுவது, என்றெல்லாம் பொறுப்
பாசிரியரும், ஆசிரியர் குழுவில் மூவரும்
இணைந்து உரையாடினோம். திரைப்படம்
காட்சிப்படுத்தப்பட்ட அந்தத் தினத்து இரவு,
விடிய வரைக்கும் கூட எங்களது கதையாடலில்
இது ஒரு விசயமாக இருந்தது. அந்த விதத்தில்
இது பாதித்திருந்தது. எப்படியென்று
சொல்கின்றேன்.
வன்னியில் கனகராசன் குளத்தில் நடக்கின்ற
கதைதான் இத்திரைப்படம். 83 இனப்
படுகொலையில் மலையகத்திலிருந்து ஒரு
குடும்பம் வன்னிக்கு இடம் பெயர்கின்றது.
"தோட்டக்காட்டார்" என்ற இழிசொல்லுடன் அக்
குடும்பம் படும் அவமானமும் இன்னலும்
ஊடுபாவாக இத்திரைப்படத்தில் ஓடுகிறது.
சேர்ந்தாற் போல மலையக இளம் பெண்ணை
வன்னி இளைஞன் காதலிப்பதும, கர்ப்பமாக்கு
வதும் கைவிட்டு ஓடுவதும் சுமார் 18 வருடங்களின்
பின் (16,18 என்றெல்லாம் எங்களைக் குழப்பு
கிறார்கள்) ஏமாற்றிய வன்னி இளைஞன்
இலண்டனிலிருந்து ஊருக்கு வந்தபோது
அவனது மகனான விடுதலைப் புலி இயக்கப்
போராளியால் சுட்டுக் கொல்லப்படுவதுடன்
திரைப்படம் நிறைவுறுகிறது.
தெளிவற்ற, மிகப் பலவீனமான திரைப்படப்
பிரதி எங்களை நன்றாகவே குழப்பி விடுகிறது.
காட்சி அமைப்புகளும் அப்படியே அமைந்து
விடுகின்றன. சில உதாரணங்களைப் பார்ப்
போமோ வன்னிப் பாடசாலை ஒன்றில் க.பொ.
த. சாதாரண தரம் படிக்கின்ற மாணவ மாணவி
யர் சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர்
ஒன்றாகவே பாடசாலை செல்கின்றார்கள்.
அவர்களுக்குள்ளும் ஆசிரியருடனும் இரட்டை
அர்த்த வசனங்கள் தாராளமாகவே புழங்கு
கின்றன. வன்னி மாணவர்கள் பியர் குடித்து
விட்டு பாடசாலைக்கு வருகிறார்கள். பின்னேரங்
களில் கள்ளு குடிக்கப் போகிறார்கள். "கவிதை
வாசித்து கவிழ்த்து விடப்பட்ட' மலையக
இளம்பெண் திருமணத்திற்கு முன் உடலுறவில்
ஈடுபட்டதற்கு எவ்வித மனக்கிலேசமும்
அடையவில்லை. பனடோல் குடித்தோ பப்பாசிக்
காய் சாப்பிட்டோ கருவைக் கலைத்து விடலாம்
என்கிறாள். ஆனால் கரு உருவானபோது
ஹகுய்யோ முறையோ' என்று குமுறுகிறாள். அந்த
இளைஞனை குற்றம் சாட்டுகிறாள். அரசியலால்
சுூழப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் ஒருவருக்கும்
அரசியல் ஒரு பிரச்சினையாக இல்லை.
காதல்தான் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு
தேசமாக போராளிகளின் நிர்வாகத்தில் வன்னி
வந்த பிறகு, தென்னந்தோப்பில் பகிரங்கமான
இடத்தில், சாராயம் குடித்து ஆண்களும் பெண்
களும் பைலா ஆடுகிறார்கள். அவர்களில்
போராளிகளும் இருக்கின்றனர். விடுங்கள்-
ஆயிரம் குறைகள் இருக்கின்றன. எல்லாவற்றை
யும் அடுக்க இடம் போதாது.
என் கேள்வி வேறொன்று. இப்படித் திரைப்
படங்கள் எடுக்கத்தான் வேண்டுமா? இத்திரைப்
படம் தயாரிப்பதற்கான செலவு நு}றாயிரம்
பவுண்ஸ் என்று இயக்குனர் புதியவன் சொன்ன
தாக ஒருவர் சொன்னார். இவ்வளவு செலவில்
இப்படி ஒரு திரைப்படம் தயாரிப்பது மிகப்
பிழையான முன்னுதாரணம் ஆகி விடாதா?
ஒன்றை இந்த இடத்தில் நாம் உணர
வேண்டும். ஆயிரம் குறைகள் இருந்தாலும,
இப்பொழுதுதானே குழந்தை அது தவழத்தானே
பார்க்கும். அதற்கிடையில் எழும்பி நடக்க
வேண்டும் என்று அவசரப்பட்டால் அது எங்ஙனம்
சாத்தியம் என்று யாரேனும் சொல்வாரானால,
அடியோடு நான் அந்த வாதத்தை மறுப்பேன்.
ஈழத் தமிழர்களால் 60களில் தோட்டக்காரி
சமுதாயம் என்ற திரைப்படங்களில் தொடங்கி
சுமார் அரை நு}ற்றாண்டு ஆகி விடுகின்ற
ஞஉலையில் அது தவμம் தானே என்றால், அந்தக்
குழந்தையில் ஏதோ பிழை இருக்கின்றது. அது
சவலைக் குழந்தை. அப்படித்தான் நினைக்க
வேண்டும்.
ஆனால் அப்படியல்ல. திரைப்படம் என்பது
உன்னதமான கலை என்பது ஒருபுறமிருக்க,
அது பணத்தை அதிகம் கொட்ட வேண்டிய
கலையும் கூட. கொட்டிய பணத்தை திரும்ப
எடுக்க வேண்டும். ஆக, திரைப்படங்களுக்கு
சந்தை நிலவரத்துக்காக சமரசம் செய்வதென்ற
ல்ல, தரமான படைப்பாகப் கொடுக்க வேண்டிய
தேவை உண்டு. எனவே குறைந்த செலவில்
தரமான திரைப்படத்தை உருவாக்குவது பற்றி
நாம் யோசிக்க வேண்டும்.
இது எங்களால் இயலுமா? 1930களில் ஆரம்
பித்த தமிழ் நாட்டுத் திரைப்படம், இப்போதுதான்
சிறந்த திரைப்படங்களைத் தருகின்ற களமாக
ஆகி வருகின்றது. இத்தனைக்கும் சந்தை
நிலவரம் உச்சத்தில் இருக்கின்ற ஒரு களம்
அது. அதற்கே இவ்வளவு காலம் எடுக்கிறது.
இந்தப் பக்கத்தையும் நம் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
இறுதியாக புதியவனுக்கு ஓர் அட்வைஸ்.
அறிவுஜீவியாக புதியவன் இதனைக் கேட்பாரோ
என்னவோ. என்றாலும் சொல்வது எமது கடமை.
திரைப்படப் படைப்பு தொடர்பான உங்கள்
ஆர்வம் எமக்குப் புரிகிறது. தமிழீழத்திலும்
திரைப்படம் ஒரு படைப்பாக நன்கு வளர்கின்
றது. அங்கு செல்ல உங்களுக்குத் தயக்கம்
இருக்கலாம். தமிழ்நாட்டுக்குச் சென்றுஇ ஒரு
திரைப்பட இயக்குனருக்கு உதவியாளராகப்
பணிபுரிந்து இக்கலவையப் பற்றி ஓரளவுக்
காவது கற்று திரைப்படங்களைப் படைக்க
முயலுங்கள். மணிரத்னம்இ பாலா. சேரன.
சீமான, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், தங்கர்
பச்சான், சுசி கணேசன், விக்ஷ்ணுவர்த்தன,
அமீர் போன்றோரை நான் சிபார்சு செய்வேன்.
முயற்சி செய்யுங்கள். பப்பாவில் ஏற்றுபவர்களை
உங்களை விட்டு அகல நிற்கச் செய்யுங்கள்.
-சேயோன்
நன்றி : ஒரு பேப்பர்

