04-07-2006, 11:30 AM
<b>பன்னிரண்டு புலித்தலைவர்களின் மறைவு</b>
(யுகசாரதியின் ஈழத்தாய் சபதத்திலிருந்து)
ஆயுதந் தனைக்கொடுத்தே - அந்த
அமைதியைக் கெடுத்திடு;ம் படைகளிடம்
சேய்கள் தம் பணி முடித்தார் - சிலர்
திருமணம் புரிந்து தம் வாழ்வமைத்தார்
ஆயினும் இழி மனத்தோர் - அந்த
அருந்தவப் புதல்வரை பழி முடிக்க
ஆயிரம் சதி புரிந்தார் - அதில்
ஆறிரு வேங்கைகள் உயிர் கொடுத்தார்
வங்கத்துக் கடற் பரப்பில் - அந்த
வரிப்புலிக் குருளைகள்வருகையிலே
சிங்களக் கடற்படையைத் - தம்
சினேகிதரென நினைந்தருகில் வர
இங்கிதம் சிறிதுமிலார் - அந்த
இழி குணத்தோர் தங்கள் பழி முடிக்க
தங்கங்கள் தனைப் பிடித்தார் - தாய்
தமிழவள் கலங்கிட விலங்குமிட்டார்
காடையர் தலைவனவன் - எங்கள்
கண்மணிகள் தனைக் கடத்தித் தன்றன்
நாடதன் தலை நகரில் வதை
நடத்திடு நான்காம் மாடியெனும்
கூடத்தில் கொடுமை செய்ய மனம்
குறித்து விட்டான் இதைக் குறிப்பறிந்தே
தேடினுங் கிடைக்காத - எங்கள்
தேயத்துப் பன்னிரு வன்னியரும்
மாய்வதில் உறுதிகொண்டார் - நச்சு
மருந்தினை அருந்தித்தம் உயிர் துறந்தார்
சேய்களை இழந்து நின்றாள் - அன்னை
திரும்பவும் தலைமுடி அவிழ்த்து நின்றாள்
நாய்தனை நிச்சயித்துத் - தன்றன்
நலன் நிறைவாழ்வுக்குத் தீங்கு செய்த
பேயெனப் பாரதத்தை - அந்தப்
பேதை தன் மனதினில் நினைந்தழுதாள்
(யுகசாரதியின் ஈழத்தாய் சபதத்திலிருந்து)
ஆயுதந் தனைக்கொடுத்தே - அந்த
அமைதியைக் கெடுத்திடு;ம் படைகளிடம்
சேய்கள் தம் பணி முடித்தார் - சிலர்
திருமணம் புரிந்து தம் வாழ்வமைத்தார்
ஆயினும் இழி மனத்தோர் - அந்த
அருந்தவப் புதல்வரை பழி முடிக்க
ஆயிரம் சதி புரிந்தார் - அதில்
ஆறிரு வேங்கைகள் உயிர் கொடுத்தார்
வங்கத்துக் கடற் பரப்பில் - அந்த
வரிப்புலிக் குருளைகள்வருகையிலே
சிங்களக் கடற்படையைத் - தம்
சினேகிதரென நினைந்தருகில் வர
இங்கிதம் சிறிதுமிலார் - அந்த
இழி குணத்தோர் தங்கள் பழி முடிக்க
தங்கங்கள் தனைப் பிடித்தார் - தாய்
தமிழவள் கலங்கிட விலங்குமிட்டார்
காடையர் தலைவனவன் - எங்கள்
கண்மணிகள் தனைக் கடத்தித் தன்றன்
நாடதன் தலை நகரில் வதை
நடத்திடு நான்காம் மாடியெனும்
கூடத்தில் கொடுமை செய்ய மனம்
குறித்து விட்டான் இதைக் குறிப்பறிந்தே
தேடினுங் கிடைக்காத - எங்கள்
தேயத்துப் பன்னிரு வன்னியரும்
மாய்வதில் உறுதிகொண்டார் - நச்சு
மருந்தினை அருந்தித்தம் உயிர் துறந்தார்
சேய்களை இழந்து நின்றாள் - அன்னை
திரும்பவும் தலைமுடி அவிழ்த்து நின்றாள்
நாய்தனை நிச்சயித்துத் - தன்றன்
நலன் நிறைவாழ்வுக்குத் தீங்கு செய்த
பேயெனப் பாரதத்தை - அந்தப்
பேதை தன் மனதினில் நினைந்தழுதாள்
S. K. RAJAH

