04-07-2006, 03:51 AM
காவடி Wrote:Quote:எமக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் கருத்தே தெரிவிற்கக் கூடாது என்று தடை இருக்கின்றதா என்ன??இப்படித்தான் வேறு சிலரும் தங்களுக்கு புலிகளால் சில பாதிப்பக்கள் எற்பட்ட போது சுட்டிக்காட்டினார்கள்.. விமர்சித்தார்கள்.. அவர்களுக்கெல்லாம் துரோகிப்பட்டம் கட்டியவர்கள் இப்போது தங்கள் கழுத்திலும் கத்தி விழுகின்றதாக உணருகின்ற போது கருத்துச் சொல்ல தடையா என்கிறார்கள்.
ஏனய்யா.. புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் இருப்பது தானே ஒரு தமிழ்த் தெசிய வாதிக்கு அழகு.. அவன் தானே தமிழன்..
கழுத்து இறுகிறது என்று தெரிகிறது. இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.
புலிகள் இந்த நடைமுறையிலிருந்து பின்வாங்க கூடாது. வேண்டுமானால் புலத்தில் உள்ளவர்களிடம் காலவரையறை கேட்கலாம். எப்பொழுது வருவார்கள் என சரியான திகதியை கேட்டு காலவரையறை கொடுக்கலாம்.
தமிழீழம் விரைவில் கிடைத்து விடும்.. இதோ நாளை என்றவர்கள் இப்போது.. சுதந்திரத்துக்கு இன்னும் அதிக நாள் பயணிக்க வேண்டியிருக்கிறது. அது வரை இது கூடாது என்கிறார்கள். புலத்திலுள்ளவர்கள் பற்றி புலிகள் அறிந்து கொள்ள சரியான வாய்ப்பு இது
அண்ணாச்சி!!
எனது கழுத்துக்கு சுறுக்கே விழாது. அது ஏன் என்று களத்தில் உள்ள பல உறுப்பினர்களுக்குத் தெரியும். அது ஏன் என்று வெளிப்படுத்தவும் தேவையில்லை.
இருக்க, நான் அச்சட்டத்துக்கு தடை ஒன்றும் சொல்லவில்லையே!! காணி விற்கப்படக் கூடாது என்பதை வரவேற்கின்றேன்.
ஆனால் யாராவது ஒருவரை குடியேற்றி வைக்கும் போது எவ்வாறான உரிமத்தை குடியேறுபவர் கொண்டிருக்கின்றார் என்பது பற்றியே எனது கேள்வி! ஏனென்றால் இப்போது யாழ்பாணத்தில் பலர் இதே பிரச்சனையை எதிர்கொள்கின்றார்
[size=14] ' '

