04-06-2006, 06:13 PM
காவடி Wrote:Quote:எமக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் கருத்தே தெரிவிற்கக் கூடாது என்று தடை இருக்கின்றதா என்ன??இப்படித்தான் வேறு சிலரும் தங்களுக்கு புலிகளால் சில பாதிப்பக்கள் எற்பட்ட போது சுட்டிக்காட்டினார்கள்.. விமர்சித்தார்கள்.. அவர்களுக்கெல்லாம் துரோகிப்பட்டம் கட்டியவர்கள் இப்போது தங்கள் கழுத்திலும் கத்தி விழுகின்றதாக உணருகின்ற போது கருத்துச் சொல்ல தடையா என்கிறார்கள்.
ஏனய்யா.. புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் இருப்பது தானே ஒரு தமிழ்த் தெசிய வாதிக்கு அழகு.. அவன் தானே தமிழன்..
கழுத்து இறுகிறது என்று தெரிகிறது. இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.
புலிகள் இந்த நடைமுறையிலிருந்து பின்வாங்க கூடாது. வேண்டுமானால் புலத்தில் உள்ளவர்களிடம் காலவரையறை கேட்கலாம். எப்பொழுது வருவார்கள் என சரியான திகதியை கேட்டு காலவரையறை கொடுக்கலாம்.
தமிழீழம் விரைவில் கிடைத்து விடும்.. இதோ நாளை என்றவர்கள் இப்போது.. சுதந்திரத்துக்கு இன்னும் அதிக நாள் பயணிக்க வேண்டியிருக்கிறது. அது வரை இது கூடாது என்கிறார்கள். புலத்திலுள்ளவர்கள் பற்றி புலிகள் அறிந்து கொள்ள சரியான வாய்ப்பு இது
தளத்தில் உயிரைக்கொடுப்பவனின் தியாகத்தின் முன், புலத்தில் பங்களிப்பு செய்பவன் ஒன்றும் பெரிதல்ல, ஏனெனில் அதை ஒத்த ஒரு உயிர்தான் புலத்துக்கு வந்து உழைத்து தன்னையும் வழப்படுத்தி, தான் சார்ந்தவர்களையும், வழப்படுத்தி, ஒருபகுதியை நாட்டுக்காகவும் கொடுக்கிறான், ஆனால் தளத்தில் உள்ளவன் தன்னையே கொடுக்குறான், அவர்களோடு ஒப்பிடமுடியாது,
ஆனால் தளத்திலும் புலத்திலும் பங்களிப்பே செய்யாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு கூட்டமும் இருக்கு, அதைவிட பங்களிப்பும் செய்யாமல் ஒதுங்கியும் இராது உபத்திரம் கொடுத்துக்கொண்டு ஒரு கூட்டம் இருக்கு, இவர்களை விட புலத்தில் இருந்து கொண்டு பங்களிப்பு செய்வபன் மேலானவன். அவன் தளத்தில் வைத்திருக்கும் நிலத்தின் பெறுமதி, அவனது இங்கத்திய உழைப்புக்கு ஒரு சொற்பப்பெறுமதி அந்த துண்டு காணிக்காகவும் அங்கிருக்கும் எஞ்சிய உறவுகளுக்காகவும் அவன் வருடம் ஒருதடவை போகிறான் வருகிறான். அந்த காணியின் பெறுமதிக்கு மேலாகவே அவன் இங்கு பங்களிக்கிறான், அந்த துண்டு நிலத்துகாகத்தான் அவன் பங்களிப்பு செய்கிறான் என நினைத்தால் அது நகைப்பிற்கிடமான விடயம், இதை விட காணி இல்லாதவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள், இதற்கெல்லாம் காரணம் என்ன? அவனது நாடு விடுதலை பெறவேண்டும், அவன் சுதந்திர தமிழீழத்தில் வாழமுடியாவிட்டாலும் அவன்பின் வரும் இனமாவது சுதந்திரத்துடன் வாழவேண்டும், எமது முன்னோர் செய்திருந்தால் நாம் வாழ்ந்திருப்போம், நாம் செய்வதால் எமது அடுத்த சந்ததி வாழும், நாமும் செய்யாவிடால் அடுத்த சந்ததியும் போராடிக்கொண்டுதான் இருக்கும், எம்மனதுக்கு பட்டதை சொல்வோம் ஏற்பதும் மறுப்பதும் உம் பாடு.:wink:
.
.
.

