04-06-2006, 05:23 PM
Vasampu Wrote:அப்பு பிருந்தன்
ஹிட்லரின் அரசியல் விமர்சிக்கப்படுகின்றதேயொழிய அவரின் தனிப்பட்ட வாழ்க்கையல்ல. இங்கே ஊகங்களின் அடிப்படையில் இறந்தவர்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்கப் படுவதையே நான் வேண்டாமென்றேன்.
இது பொதுவான விடயம் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் விமர்சனத்துக்குட்பட்டவர்கள்தான்.
புஸ்பராசவைபற்றிக்கதைப்பதும் இது போன்றதுதான்,
இது ஊகம் அல்ல புஸ்பராசாவின் காலத்தில் வாழ்பவர்கள் நாம், அவருடன் நெருங்கிபழகியவர்கள், ஒரே ஊர்காரரர்கள், அவரால் பாதிக்கப்பட்டவர்கள், அவர் சார்ந்த இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தைனையோபேர் புலத்தில் இருக்கிறார்கள், களத்தில் இருக்கிறார்கள், யாழ்தளத்தில் இருக்கிறார்கள், அவர்களது அனுபவம் எல்லாம் சும்மா வெறும் ஊகங்கள் அல்ல, புஸ்பராசவை தனிப்பட்டரீதியில் எத்தனை பேருக்கு தெரியும், அவரது ஊர்காரருக்குத்தான் தெரியும், அவர்சார்ந்த அரசியல்காரணமாகத்தான் உலகத்துக்கு தெரியும், அவர் பற்றிய விமர்சனம் அவர்மீதான தனிப்பட்ட தாக்குதல் அல்ல அவர்சார்ந்த அரசியல் மீதான விமர்சனம். இறப்பிற்கு முன்னும் சரி இறப்பிற்கு பின்னும் சரி, பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் விமர்சனத்துக்குட்பட்டவர்களே.
.
.
.

