04-06-2006, 02:01 PM
Birundan Wrote:குடி இருப்பவனுக்குதான் காணி என்றால் நிட்சயமாக 90% புலம்பெயர் மக்களுடைய காணிகள் அவருக்கு உரிமையற்றதாக போய்விடும். இது நிட்சயம் புலம்பெயர் தமிழரிடையே பெரும் மாற்றத்தை உருவாக்கும், நான் நினைக்கிறேன் இச்சட்டங்கள், சுதந்திர தமிழ்ழீழத்தில் மேற்கொள்லப்பட வேண்டியவை,சுதந்திரத்தின் பின் திரும்பிவரவிரும்பாதவர்களின் காணிகளை, காணியற்றவர்களுக்கும், அரசும் எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும், ஆனால் சுதந்திரத்துக்கு நாம் இன்னமும் நீண்டதூரம் பயனிக்கவேண்டி இருக்கும், அதற்க்கு புலம்பெயர் தமிழரின் பங்களிப்பு இன்றி அமையாதது, இச்செயல் நிட்சயம் புலம்பெயர் தமிழர் பங்களிப்பில் பெரும் மாற்றம் கொண்டுவரும் என்பதே எனது எண்ணம்,
வந்தசட்டம் வந்தது வந்ததுதான், வருவதை வரும்போது பார்போம். :wink:
ஆமாம். சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலப்பகுதியில் இது சரியானதாகத் தான் இருக்கும். சிறிலங்கா அரசின் சட்டமூலத்தில் 10வருடங்களுக்கு மேல் ஒருவர் குடியிருப்பாராயின் அது அவருக்குச் சொத்துமையாகின்றது என்ற சட்டம் இருப்பதாக அறிகின்றோம். ஆனால் யுத்தப் பிரதேசங்களுக்கு அவை பொருந்தாது. இவ்வாறான சட்டங்கள், இக்காலப்பகுதியில் தேவையற்றது. மக்களின் மனங்களை கசப்புக்களை ஏற்படுத்தக் கூடும்.
சட்டஅமைவாக்கலைச் செய்பவர்கள் இது குறித்து கவனத்தில் எடுப்பது நல்லது.
[size=14] ' '

