04-06-2006, 10:19 AM
தூயவன் Wrote:sOliyAn Wrote:Quote:கேள்வி: தமிழீழ காணி உரிமம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கை ஏதாவது முன்னெடுக்கப்படுகின்றதா?
பதில்: இது தொடர்பான உரிமம் வழங்குகின்ற நடவடிக்கைகளை தமிழீழ நிர்வாக சேவை காணிப்பகுதி செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவைகள் முதலில் குடியிருந்த காணிகளை வழங்குகின்ற போது தற்காலிக காணிப்பத்திரங்களையும் மீண்டும் அந்த காணிகள் தொடர்ந்தும் பயன்படுத்தி தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்கும் காலப்பகுதியில் அதற்கான நிரந்தர அனுமதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதியினர் செய்துள்ளனர்.
இங்கே குடியிருந்த காணிகள் எங்கிருந்து வரப் போகின்றன.. புலம்பெயர்ந்தவர்களால் விற்கமுடியாத காணிகள்.. அவர்கள் சந்ததியினரால் கவனிக்கமுடியாமல் போகும்பட்சத்திலும் வரலாமமில்லையா.. ஆக, ஒருநாள் புலத்திலும் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும்போது.. புகலிடத்தில் வாழும் சந்ததிகள் வேர்களற்ற அந்தரத்துக்குள் தள்ளப்படும் நிலை உருவாகாது என்பது என்ன நிச்சயம்?!
சோழியன் அண்ணா சொல்வது சரியானது. தொடர்புகள் விடுபடக்கூடாது என்பதற்காக ஒரு பக்கம் சட்டம் ஒன்று கொண்டவரப்பட்ட பின்பு மறுபக்கம் குடியிருந்தவர்களுக்கு காணி சொந்தம் என்ற நிலையை உருவாக்குவது சரியாகப்படவில்லை.
அப்படி ஒரு பிரிவு கொண்டு வரவேண்டும் என்றால் தமிழீழம் கிடைத்த பிற்பாடு ஒரு நிம்மதியான காலப்பகுதியில் கொண்டுவரலாம். ஆனால் யுத்த காலப்பகுதியில் இப்படியான முறைமை ஆதரிக்கத்தக்கதல்ல. இன்று கூட காணியில் குடியிருக்கின்றவர்கள் காணியை கையளிக்க மறுப்பதாக அறிகின்றோம். தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்துகின்றனர். இப்படியான சட்டம் மேலும் அவர்களின் அடாவடித்தனத்தை அதிகரிக்க செய்யும்.
குடி இருப்பவனுக்குதான் காணி என்றால் நிட்சயமாக 90% புலம்பெயர் மக்களுடைய காணிகள் அவருக்கு உரிமையற்றதாக போய்விடும். இது நிட்சயம் புலம்பெயர் தமிழரிடையே பெரும் மாற்றத்தை உருவாக்கும், நான் நினைக்கிறேன் இச்சட்டங்கள், சுதந்திர தமிழ்ழீழத்தில் மேற்கொள்லப்பட வேண்டியவை,சுதந்திரத்தின் பின் திரும்பிவரவிரும்பாதவர்களின் காணிகளை, காணியற்றவர்களுக்கும், அரசும் எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும், ஆனால் சுதந்திரத்துக்கு நாம் இன்னமும் நீண்டதூரம் பயனிக்கவேண்டி இருக்கும், அதற்க்கு புலம்பெயர் தமிழரின் பங்களிப்பு இன்றி அமையாதது, இச்செயல் நிட்சயம் புலம்பெயர் தமிழர் பங்களிப்பில் பெரும் மாற்றம் கொண்டுவரும் என்பதே எனது எண்ணம்,
வந்தசட்டம் வந்தது வந்ததுதான், வருவதை வரும்போது பார்போம். :wink:
.
.
.


