04-06-2006, 06:14 AM
Birundan Wrote:விக்கிறாதால் என்ன பிரச்சினை, அவன் அவன் ரத்தம் சிந்தி சம்பாதிச்ச காணிகளை தன் தேவைக்காக விக்காமல் யாருக்காக வைத்திருக்க வேண்டும், காணி என்பதே ஒரு முதல்தானே, தேள்வைக்கு உதவாத பொருள் இருந்தென்ன விட்டென்ன? சிங்களவனுக்கா விற்கிறார்கள் தமிழனுக்குத்தானே விற்கிறார்கள், எப்படியோ ஒரு தமிழனிடம்தானே அது இருக்கப்போகுது,
பிருந்தன் அவர்களே
வெளிநாட்டில் உள்ளோர் காணியை விற்க முடியாது என்று கொண்டுவந்த சட்டம் என்பது, எம்மக்களை தாயகத்தில் இருந்து தூரவிலகிப் போவதைத் தடுப்பதற்காகத் தான் அப்படி ஒரு சட்டம் வந்திருக்க வேண்டும்.
காணி இருந்தால் கட்டாயம் தாயகத்தோடு தொடர்பைப் போண வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனக் கருதியிருக்கலாம். ஏனென்றால் சிலர் புலம்பெயர்ந்த பின்பு தாயகத்தை மறந்த நிலையில் வாழ்வது தெரிகின்றது. ஏன் தாயகத்தில் உள்ள காணியை விற்கின்றார்கள்?? தங்களுக்கும் தாயகத்துக்கும் தொடர்பை விலத்தி கொள்வதற்கு தானே? அது அனுமதிக்கப்பட வேண்டும் என நம்புகின்றீர்களா??
இச்சட்டம் பலரைப் பாதித்திருக்கலாம். ஆனால் கட்டாயம் அவசியமானது.
[size=14] ' '

