04-02-2006, 09:17 PM
<b>"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே" என முழங்கிச் சென்றார் "பிள்ளைகளே" அணித் தலைவர் சாத்திரி. </b>
யாழிற்கு வயது எட்டு என்று என்றார். யாழைக் குழந்தை என்றார். தாலாட்டி சீராட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு எமதென்றார். பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் யாழுக்கும், அதன் நிர்வாகத்துக்கும் கூறிக்கொண்டு, பட்டிமன்றத்தில் பங்குகொள்வோர்க்கும் ஏனையோர்க்கும் வணக்கங்கள் கூறி தனது வாதத்தை தொடங்கினார்.
பட்டிமன்றத் தலைப்பில் "தாய் நிலத்திலா" அல்லது "புலம்பெயர் நிலத்திலா" என்று எதனையும் வரையறை செய்யாவிட்டாலும், புலம்பெயர் மண்ணை மையமாக வைத்தே தனது கருத்துக்களை சொல்வதாக முன்னறிவித்தார்.
"தலைப்பில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு விடை அனைவருக்கும் தெரியும் - அது: இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே என்பது - இருந்தும் நடுவர் தொடங்கி எதிரணியினரும் குழம்பியிருக்கின்றனர்" எனக் கூறினார்.
தொடர்ந்தவர், நடுவர் தலையையே உருட்டத் தொடங்கிவிட்டார். அடடா, ஐயையோ என்று விழிகளை உருட்டி - "மவுசை" உருட்டிப் பார்த்தால்:
பிள்ளைகளின் தேவைகளை அறிந்து, அவர்கள் கேட்பதை, அவர்கள் விரும்புவதை பூர்த்தி செய்கின்றனர் பெற்றோர். தமது பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்து தம்மால் முடிந்தளவு அவர்களை மகிழ்விக்கின்றனர். ஆனால், சிறுவயதில் "அம்மா நண்பி கொண்டு வந்த பேனா பிடிச்சிருக்கு அது வாங்கித் தாங்கோ" என்று கேட்கத் தெரிந்த பிள்ளைகளுக்கு, இளவயதை அடைந்ததும் பல விடயங்களை ("அம்மா அந்த நண்பியை பிடிச்சிருக்கு சேர்த்து வையுங்கோ" :wink: என்று கேட்கத் தெரியாமல்) மறைக்கத் தொடங்குகிறார்கள். எனவே, முதலில் பிள்ளைகளே இடைவெளியை உருவாக்குகிறார்கள் என்று தனது கருத்தை அற்புதமாக முன்வைத்தார்.
"சேர்த்து வையுங்கோ" என்று கேட்டால் போல சேர்த்து வைத்துவிடப் போகிறார்களா என்று மற்றைய அணிகளில் இருக்கிற பிள்ளைகள் குமுறுவது புரிகிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இளவயதையடைந்ததும் பிள்ளைகள் பெற்றோரிடம் பலவிடயங்களை மறைப்பதற்கு காரணம் என்ன? பயமா? அல்லது அலட்சியமா? - இனி வாதாட வருகிற அணியினர் தான் சொல்லவேண்டும்.
பிள்ளைகளின் மீது நம்பிக்கை வைக்கிற பெற்றோரின் நம்பிக்கையைத் தகர்த்து, மனதில் காயங்கள் உண்டாக்கி, இடைவெளியை உருவாக்குவதோடு நில்லாமல் - கண்டிக்கிற பெற்றோரை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதிர்த்துப் பேசி மேலும் மேலும் இடைவெளியை விரிவடையச் செய்கிறார்கள் என்று விளக்கமாகச் சொன்னார்.
சிறுவயதில் அம்மா அப்பாவில் தங்கியிருந்தவர்கள், இளவயதை அடைந்ததும் போலியான உலகத்தின் போதைகளில் மயங்கி "பெற்றவரையே" தூக்கியெறியத் துணிந்துவிடுகிறார்கள் என்று சில உதாரணங்கள் மூலம் சிறப்பாகச் சொன்னார்.
"பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு" என்கிற முதுமொழி ஞாபகம் வருகிறது. பார்ப்போம், மற்றைய அணியினர் ஏதும் புதுமொழியுடன் வருகிறார்களா என்று. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பெற்றோரை உயர்த்தி உச்சத்தில் வைத்தார் - மெல்ல (தமது)எதிரணி இரண்டையும் நன்றாகவே சாடினார் - "தல" யிலும் கைவத்தார். நவீனம் நவீனம் என்று நவீனம் நோக்கிய பயணத்தில் "பெற்றோரை விட்டு விலகாமல்", பெற்றோருடன் இணைந்து பயணிக்கலாமே என்று நறுக்கென ஒரு கேள்வி எழுப்பினார். :!:
இறுதியாக: (தமது)எதிரணியனரின் வாதங்களையும், நடுவரின் தீர்ப்பையும் கேட்காமலே தமது அணிக்குத்தான் வெற்றி எனக் கூறி நம்பிக்கையோடு விடைபெற்றார்.
சாத்திரியின் கருத்துக்களை வாசித்த "பிள்ளைகள்" எல்லாம் "பொங்கியெழும் பிள்ளைகள் படையாக" புறப்படக் காத்திருக்கிறார்கள். எனவே "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பெற்றோர்களே" என்று வாதாட வந்திருக்கும் அணித் தலைவர் "தல" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம்.
யாழிற்கு வயது எட்டு என்று என்றார். யாழைக் குழந்தை என்றார். தாலாட்டி சீராட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு எமதென்றார். பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் யாழுக்கும், அதன் நிர்வாகத்துக்கும் கூறிக்கொண்டு, பட்டிமன்றத்தில் பங்குகொள்வோர்க்கும் ஏனையோர்க்கும் வணக்கங்கள் கூறி தனது வாதத்தை தொடங்கினார்.
பட்டிமன்றத் தலைப்பில் "தாய் நிலத்திலா" அல்லது "புலம்பெயர் நிலத்திலா" என்று எதனையும் வரையறை செய்யாவிட்டாலும், புலம்பெயர் மண்ணை மையமாக வைத்தே தனது கருத்துக்களை சொல்வதாக முன்னறிவித்தார்.
"தலைப்பில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு விடை அனைவருக்கும் தெரியும் - அது: இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே என்பது - இருந்தும் நடுவர் தொடங்கி எதிரணியினரும் குழம்பியிருக்கின்றனர்" எனக் கூறினார்.
தொடர்ந்தவர், நடுவர் தலையையே உருட்டத் தொடங்கிவிட்டார். அடடா, ஐயையோ என்று விழிகளை உருட்டி - "மவுசை" உருட்டிப் பார்த்தால்:
பிள்ளைகளின் தேவைகளை அறிந்து, அவர்கள் கேட்பதை, அவர்கள் விரும்புவதை பூர்த்தி செய்கின்றனர் பெற்றோர். தமது பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்து தம்மால் முடிந்தளவு அவர்களை மகிழ்விக்கின்றனர். ஆனால், சிறுவயதில் "அம்மா நண்பி கொண்டு வந்த பேனா பிடிச்சிருக்கு அது வாங்கித் தாங்கோ" என்று கேட்கத் தெரிந்த பிள்ளைகளுக்கு, இளவயதை அடைந்ததும் பல விடயங்களை ("அம்மா அந்த நண்பியை பிடிச்சிருக்கு சேர்த்து வையுங்கோ" :wink: என்று கேட்கத் தெரியாமல்) மறைக்கத் தொடங்குகிறார்கள். எனவே, முதலில் பிள்ளைகளே இடைவெளியை உருவாக்குகிறார்கள் என்று தனது கருத்தை அற்புதமாக முன்வைத்தார்.
"சேர்த்து வையுங்கோ" என்று கேட்டால் போல சேர்த்து வைத்துவிடப் போகிறார்களா என்று மற்றைய அணிகளில் இருக்கிற பிள்ளைகள் குமுறுவது புரிகிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இளவயதையடைந்ததும் பிள்ளைகள் பெற்றோரிடம் பலவிடயங்களை மறைப்பதற்கு காரணம் என்ன? பயமா? அல்லது அலட்சியமா? - இனி வாதாட வருகிற அணியினர் தான் சொல்லவேண்டும்.
பிள்ளைகளின் மீது நம்பிக்கை வைக்கிற பெற்றோரின் நம்பிக்கையைத் தகர்த்து, மனதில் காயங்கள் உண்டாக்கி, இடைவெளியை உருவாக்குவதோடு நில்லாமல் - கண்டிக்கிற பெற்றோரை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதிர்த்துப் பேசி மேலும் மேலும் இடைவெளியை விரிவடையச் செய்கிறார்கள் என்று விளக்கமாகச் சொன்னார்.
சிறுவயதில் அம்மா அப்பாவில் தங்கியிருந்தவர்கள், இளவயதை அடைந்ததும் போலியான உலகத்தின் போதைகளில் மயங்கி "பெற்றவரையே" தூக்கியெறியத் துணிந்துவிடுகிறார்கள் என்று சில உதாரணங்கள் மூலம் சிறப்பாகச் சொன்னார்.
"பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு" என்கிற முதுமொழி ஞாபகம் வருகிறது. பார்ப்போம், மற்றைய அணியினர் ஏதும் புதுமொழியுடன் வருகிறார்களா என்று. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பெற்றோரை உயர்த்தி உச்சத்தில் வைத்தார் - மெல்ல (தமது)எதிரணி இரண்டையும் நன்றாகவே சாடினார் - "தல" யிலும் கைவத்தார். நவீனம் நவீனம் என்று நவீனம் நோக்கிய பயணத்தில் "பெற்றோரை விட்டு விலகாமல்", பெற்றோருடன் இணைந்து பயணிக்கலாமே என்று நறுக்கென ஒரு கேள்வி எழுப்பினார். :!:
இறுதியாக: (தமது)எதிரணியனரின் வாதங்களையும், நடுவரின் தீர்ப்பையும் கேட்காமலே தமது அணிக்குத்தான் வெற்றி எனக் கூறி நம்பிக்கையோடு விடைபெற்றார்.
சாத்திரியின் கருத்துக்களை வாசித்த "பிள்ளைகள்" எல்லாம் "பொங்கியெழும் பிள்ளைகள் படையாக" புறப்படக் காத்திருக்கிறார்கள். எனவே "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பெற்றோர்களே" என்று வாதாட வந்திருக்கும் அணித் தலைவர் "தல" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம்.

