Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவுக்கு எதிரான சீன - பாகிஸ்தான் கூட்டுச்சதியில் இணைந்த
#1
ஆசியாவின் பெரும் இரும்புத்திரை வல்லரசு நாடான சீனாவும் மிகவும் ஆபத்தான நண்பன் என்று அமெரிக்க உளவுத்துறையால் வர்ணிக்கப்படும் பாகிஸ்தானும் சிறிலங்காவை தமது கிடுக்கிப்பிடிக்குள் இறுக்கிக் கொண்டுள்ளன என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தென் இந்தியாவில் இடம்பெறும் இஸ்லாமிய தீவிர வாத நடவடிக்கைகளுக்கு கொழும் பிலுள்ள பாகிஸ்தான தூதரகம் காரணமா என்ற சந்தேகம் இந்திய புலனாய்வுத்துறை வட்டாரங்களிலும்-

கிழக்கிலங்கையில் ஜிகாத் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைகின்றன என்கிற குரல் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் நிலையில் இஸ்லாமாபாத்தில் முகாமிட்டிருக்கும் சிறிலங்கா தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் பயணம் உற்று நோக்கப்படுகிறது.



பாக்கிஸ்தான் அரசுத் தலைவர் பர்வேஸ் முசாரப்புடன் சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச - (படம்: ரொய்ட்டர்ஸ்)

பொருளாதார வரத்தக அபிவிருத்தி தொடர்பான உயர் மட்ட பேச்சுக்களில் கலந்து கொள்ள சென்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவில் எந்த சம்பந்தமுமில்லத சமூக நலன்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைக்கப்பட்டிருப்பது அரச தூதுக்குழுவின் பயணத்தின் நோக்கம் தொடர்பான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.

இந்த நிiயில் தான் சிறிலங்காவில் பாகிஸ்தான் உளவுத்துறையின் தலையீடுகள் அதிகரித் திருப்பது தொடர்பான பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

பாகிஸ்தான் தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை முடுக்கி விட்டிருப்பதை உறுதி ப்படுத்த இந்திய புலனாய்வுத்துறையும் மும்முரமாக முயன்று வருகின்றது.

தெற்காசியாவில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகளின் முன்னோடியும் சூத்திரதாரியுமாக கருதப்படும் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ தற்போது தெற்காசிய அரங்கிலும் உலக மட்டத்திலும் பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

பாகிஸ்தான் உளவுத்துறையின் மூத்த அதிகாரியும் ஜிகாத் அமைப்புகளுக்கு ஆட்திரட்டி வலுவுூட்டி நெறிப்படுத்தும் விற்பன்னரான கேணல் பஷீர் வலி மொகமது சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக நியமனம் பெற்ற போது இந்த விவகாரம் புதிய பரிமாணம் கொண்டது

யார் இந்த பஷீர் வலி மொகமது?

அதற்கு முன்னதாக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐயின் வலிமை என்ன?

1950களில் பிரித்தானிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கவ்தோமால் தொடக்கி வைத்த ஐஎஸ்ஐ இன்று உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

1960களில் பாகிஸ்தானின் நலன்களை கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலனாய்வுத்தகவல்களை பெற்றுக்கொள்வது - முப்படை யினருக்கும் இடையே புலனாய்வுத்; தகவல்களை பரிமாறிக் கொள்வது - ஊடகங்களின் போக்கை அவதானித்துக் கொள்வது போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டுவந்த ஐஎஸ்ஐ காலப்போக்கில் பாகிஸ்தானின் ஆட்சிக்குள் ஆட்சி நடத்தும் வலுவான கட்டமைப்பாக மாற்றம் கண்டது.

அதிபருக்கோ தலைமை அமைச்சருக்கோ அன்றி எந்தெவொரு தலைமைக்கோ படைத் தரப்புக்கோ பதில் கூறவேண்டிய அவசியமின்றி தன்னிச்சையாக செயற்பட்டுவரும் ஐஎஸ்ஐ கட்டுப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் கிடையாது என்பதே உண்மை.

இது ஐஎஸ்ஐ ஊழல் மோசடியிலும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட வழிவகுத்தது.

ஆப்கானிஸ்தானிலும் இந்தியாவிலும் தாக்குதல் நடவடிக்கைகளை தொடருவதற்கு இவ் வாறான சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பணமே பயன்படுத்தப்படுகிறது.

ஜிக்ஸ் (துஐஓ- துழiவெ ஐவெநடடபைநnஉந ஓ) என்றழைக்கப்படும் ஓ கூட்டு புலனாய்வுப் பணிமனையை தலைமைச் செயலகமாக கொண்டு இயங்கும் ஐஎஸ்ஐயின் பத்து பெரும் பிரிவுகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடமையாற்றுகிறார்கள்.

ஜிப் அல்லது (துஐடீ- துழiவெ ஐவெநடடபைநnஉந டீரசநயர) என்றழைக்கப்படும் பிரிவு ஐஎஸ்ஐயின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவாகும்.

மூன்று முக்கிய உபபிரிவுகளை கொண்டுள்ள இந்த பிரிவானது உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிப்பதுடன் அதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குதலில் கவனம் செலுத்துகிறது.

இந்தியாவின் வடமுனையில் ஜம்மு கஷ்மீர்; பகுதியில் ஊடுருவல் நடத்தி ஆயுதங்கள் விநியோகித்து பரப்புரை மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஜின் எனப்படும் (துஐN - துழiவெ ஐவெநடடபைநnஉநஃழேசவா) பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர வெளிநாடுகளில் உளவு நடவடிக்கையில் ஈடுபடும் பிரிவு, தீவிரவாத நட வடிக்கைகளை மேற்கொள்ளும் ஜிகாத் உறுப்பினர்களுக்கு தகவல்கள் வழங்கி பாதுகாப்பதற்கு என்ற தொடர்பகப்பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளை ஐஎஸ்ஐ கொண்டிருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இரசாயன ஆயுதங்கள் சேகரிப்புக்கும் வெடிமருந்துகள் விநியோகத்திற்கும் தனித்தனி பிரிவுகளை ஐஎஸ்ஐ அமைத்திருக்கிறது.

சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்; மற்றும் முன்னைய சோவியத் ஒன்றியத்தின் முஸ்லீம் நாடுகளில் தீவிரமாக செயற்பட்டுவரும் ஐஎஸ்ஐயின் பிரிவான துஊஐடீ (துழiவெ ஊழரவெநச ஐவெநடடபைநnஉந டீரசநயர) வின் கட்டுப்பாட்டின் கீழ் சிறிலங்கா வீழ்ந்து விட்டதா என்ற சந்தேகம் தற்போது அனைத்துலக பயங்கரவாத தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.



பாக்கிஸ்தான் தலைமை அமைச்சர் சௌகட் அசீசுடன் சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச - படம்: ரொய்ட்டர்ஸ்

பாகிஸ்தானின் நகர்வுகளும் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணி வரும் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ஏற்ற வகையில் சீனாவும் சிறிலங்கா விவகாரத்தில் எழும் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன.

மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரும் அவரது ஆலோசகருமான போதகாய ராஜபக்ஸ மேற் கொண்டிருந்த சீனப்பயணம் தொடர்பான செய்திகளை வெளியிட்ட ஆங்கில ஊடக மொன்றின் ஆசிரியர் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளுடன் நியாயமான பேச்சு நடத்தி நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவ தற்கு மறுத்துவரும் சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தீர்;வையே விரும்புகிறது என்ற உண் மையை நன்கு புரிந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் அதற்கு ஏற்றவகையில் நகர்வுகளை மேற்கொண்டு தனது இலக்கை நெருங்கி வருகிறது.

இந்தியாவின் வடமுனை பகுதியான சச்சரவு மிக்க ஜம்மு கஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு துணைபோவதுடன் அஸாம்,பிகார்;, ஜார்கந்த், நாகலாந்த் மற்றும் சண்டிகார் மாநிலங்களிலும் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவித்துவரும் ஐஎஸ்ஐ அண்டை நாடுகளான பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவிலிருந்தும் நேபாளத் தலைநகரம் கட்மண்டுவிலிருந்தும் இந்திய அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திவந்திருக்கிறது.

இருந்தபோதிலும் இந்தியாவின் தென்முனை நாடான சிறிலங்காவிலும் மையம் கொண்டு இந்தியாவில் தாக்குதலை நெறிப்படுத்துவதே ஐஎஸ்ஐயின் நீண்ட காலதிட்டமாக இருந்து வந்திருக்கிறது.

1991ல் யாழ் குடாநாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றுதற்கு சிறிலங்கா படைத்தரப்புக்கு இறுதி நேர உதவிகளை வழங்கியதன் மூலம் நாட்டை தனது பொறிக்குள் சிக்க வைத்தது.

யாழ். குடாநாட்டை வெற்றி கொள்வதற்கு பாகிஸ்தானே காரணம் என்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்த முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிகா குமாரதுங்க இந்த உதவிக்கு எந்த கைமாறும் செய்யத்தயார் என்று வழங்கிய வாக்குறுதியை பாகிஸ்தான் கெட்டியாக பிடித்துக்கொண்டது.

சிறிலங்காவை பாகிஸ்தான் உளவுத்துறையின் பொறிவலையில் சிக்க வைப்பதில் பெரும் பங்காற்றி வருபவர் அந்த நாட்டுக்கான தூதவராக தற்போது கடமையாற்றி வரும் பஷீர் வலி மொகமது என்பவரே.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான லக்ஷர் ஈ தொய்பா அமைப்புடன் மிக நெருக்கமான தொடர்புகளை பேணிவருவதுடன் ஏனைய ஜிகாத் அமைப்புகளை விரிவு படுத்துவது ஆட்திரட்டுவது நிதி மற்றும் ஆயுதங்கள் வழங்கி நெறிப்படுத்துவதில் நிபுணத்துவமிக்க கேணல் பஷீர் வலி மொகமது 1990களில் கொழும்பு தூதரகத்தின் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த வேளையில் தமிழ்நாட்டில் ஜிகாத் அமைப்பை தோற்றுவிப்பதில் வெற்றிகண்டு அங்கு அல் உம்மா என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தனது முன்னைய பதவிக்காலத்தில் கிழக்கிலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுடன் அக்கறையான தொடர்பை ஏற்படுத்திய பஷீர் வலி மொகமத் வறுமையில் வாடிய முஸ்லீம் இளைஞர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இலங்கை முஸ்லீம்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வந்த பஷீர்

தொடர்ந்து லண்டன் தூதரகத்தில் புலனாய்வு நடவடிக்;கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

லண்டனில் வாழும் இஸ்லாமிய இளைஞர்களை திரட்டுவதில் ஈடுபட்டிருந்த பஷீர் லகஷர் ஈ தொய்பா உட்பட பல இஸ்லாமிய அமைப்புக்கள் பிரித்தானியாவினால் தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து இஸ்லாமாபாத்துக்கு திருப்பி அழைக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் ஜிகாத் அமைப்புகளான ரபிலிகி ஜமாத்(ரிஜே), ஹர்கத்-உல்-முஹைதீன்(எச்யுஎம்), ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி (எச்யுஜேஐ) மற்றும் ஜய்ஷ் இ மொகமத் (ஜெம) ஆகியவற்றை விரிபுபடுத்துவதில் ஈடுபட்டிருந்த பஷீர் வலி மொகமத் சிறிலங்காவில் போர்நிறுத்த ஒப்பந்;தம் கைச்சானதும் புதிய தூதுவராக மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



பாக்கிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் ராவ் சிகன்டர் இக்பாலுடன் சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச - படம்: ஏ.எஃப்.பி

சிறிலங்காத் தூதுவர் பதவியை பஷீர் வலி ஏற்றக் கொண்ட பின்னர் கிழக்கிலங்கையில் திரைமறைவு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதாக இந்திய புலனாய்வுத்தறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தென்னிந்தியாவின் தகவல் தொழில் நுட்ப நகரமான பெங்களுரில் கடந்த டிசம்பர் 28ல் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்த விசாரணைகள் பல புதிய தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன.

ஆந்திர மாநிலத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான லக்ஷர் இ தொய்பா உறுப்பினர்களிடமிருந்து பெற்பட்ட தகவல்களின் பிரகாரம் மத்திய கிழக்கில் துபாய், ஓமான், கட்டார் போன்ற நாடுகளுக்கு தொழில் புரியச் செல்லும் தமிழக கேரள மற்றம் ஆந்திர மாநில இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தும் நடவடிக்கையில் ஐஎஸ்ஐ ஈடுபட்டிருப்பது அறியப்பட்டுள்ளது.

இலங்கையின் முஸ்லீம் சமூகத்தில் மத அமைப்புகளுக்கு ஊடாக ஊடுருவியிருக்கும் பஷீர் வலி முகமது கராச்சியிலுள்ள பைனேரி மதராஸி கல்விக்கூடத்தில் மதக்கல்வி பெறும் தோரணையில் பல நூற்றுகணக்கான கிழக்கிலங்கை இளைஞர்ளை அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இது தவிர கடவுச்சீட்டுகள் இல்லாத நிலையிலும் பல நூற்றுக்கணக்கான இஸ்லா மிய இளைஞர்கள் பாகிஸ்தானின் தேசிய விமான சேவையான பி ஐ ஏ விமானம் மூலம் கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக காஞ்சன் குப்தா என்ற ஆய்வாளர் தெரிவிக்கின்றார்.

தென் இந்தியாவில் உளவு நடவடிக்கைளின் போது பெறப்படும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கும் பரிமாற்ற தளமாக கட்டுநாயக்க விமானத்தளத்தை ஐஎஸ்ஐ பயன்படுத்துவதாகவும் இந்திய உளவுத்துறை சந்தேகம் கொண்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் போர்புரிய எத்தனிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தை வளைத்துப் போட்டிருக்கும் பாகிஸ்தான உளவுத்துறையின் ஆலோசனையின் பேரிலேயே முஸ்லீம்க ளுக்கென்று தனிப்படைப்பிரிவு ஆரம்பிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.

இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பது என்ற போர்வையில் ஜிகாத் அமைப்புகளுக்கு பகிரங்க பயிற்சி வழங்க ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளது என்றும் புலனாய்வு அவதானிகள் வாதிடுகிறார்கள்.

அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இன்னமும் ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவரும் ஐஎஸ்ஐயின் முன்னாள் இயக்குனர் லெப்.ஜெனரல் மொகமத் அகமத் மற்றும் லக்ஷர் இ தொய்பா அமைப்பு உட்பட அனைத்து பாகிஸ்தானிய ஜிகாத் அமைப்புக்களின் விரிவாக்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையவரும் சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக கடமையாற்றுபவருமான பஷீர்;;;;;;; வலி மொகமதுவின் நடவடிக்கைகள் சிறிலங்காவை ஆபத்தான பாதையில் இழுத்துச் செல்கின்றன.

உலக பயங்கரவாதத்தின் மாதிரிகள் என்று பொருள்படும் Pயவவநசளெ ழக புடழடியட வுநசசழசளைஅ என்கிற அமெரிக்க ராஜாங்க அமைச்சு குறிப்பு ஒன்று எவ்வாறு பாகிஸ்தான் உலக பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நெருங்கிய தொடர்புடைய நாடு என்று சுட்டிகாட்டுகின்றதோ அதே போன்று உலக பயங்கரவாதத்திற்கு துணைபோகும் நாடு என்று சிறிலங்காவும் அடையாளம் காணப்படப் போவது நிதர்சனமாகி வருகிறது.

<b>நன்றி: வீரகேசரி</b>


நன்றி: சங்கதி இணையம்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
இந்தியாவுக்கு எதிரான சீன - பாகிஸ்தான் கூட்டுச்சதியில் இணைந்த - by Mathuran - 04-02-2006, 04:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)