04-02-2006, 12:55 PM
ஞாயிறு 02-04-2006 17:45 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]
ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில்.
பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டு இருந்த மாணவி ஏனைய மாணவிகளைப் போன்று பரீட்சையெழுதவில்லையெனக் கூறி மாணவியை ஆசிரியை தாக்கியதில் மாணவி யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையின் 15ம் விடுதியில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் கல்விகச் கோட்டத்தில் அமைந்துள்ள ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம் பெற்றுள்ளது.
ஏழாலை மத்தியைச் சேர்ந்த ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் தெய்வேந்திரம் குமுதினி வயது 07 என்பவரே ஆசிரியையினால் தலையை வாங்கில் பிடித்து மோதியதில் கண்களில் பாதிப்பேற்பட்ட நிலையில் வையித்திய சாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளவராவார்.
குறிப்பிட்ட மாணவியின் குடும்பம் கஸ்டமான நிலமையில் உள்ள குடும்பம் என்பதும் இத் துடன் குறிப்பிட்ட மாணவியின் இருண்டு கண்களும் வீக்கம் அடைந்து பார்க்க முடியாத நிலமையில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வையித்திய சாலை வட்டாரங்கள் குறிப்பிட்ட மாணவியின் கண்கள் பாதிப்படைந்துள்ளனவா அல்லது நிரந்தரமாக பாதிப்படைந்துள்ளனவா என்பதனை இன்னும் தெளிவாக குறிப்பிடவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்மாவட்டத்தில் பல சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகள் இடம் பெறுகின்ற போதிலும் சிறுவர் அமைப்புக்கள் என்று கூறிக் கொள்கின்ற பல அரச உத்தியோகத்தர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் அமைப்புக்கள இருக்கின்ற போதிலும் இவைகள் எல்லாம் பெயரவிளவில் தமது சொந்த நன்மையை மையப்படுத்தி செயல்படுகின்றனவே தவிர உண்மையான விழிப்புணர்வுடன் செயல்படுவதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்கள் குறிப்பாக பல விடயங்கள் வெளியில் வரவிடாமலே மறைத்து வருகின்றமை சம்பந்தமாக கூறுகின்ற கருத்து பாதிக்கப்படவரின் எதிர்காலம் எனக்கூறி பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்படவராகவே இருக்க காரணமாக இருந்தவரை பாதுகாப்பதற்காகவே இத்தகைய போலி காரணங்களை கூறிவருகின்றார்கள் எனவும் பாதிக்கப்பட்ட பலர் கூறியுள்ளமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில்.
பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டு இருந்த மாணவி ஏனைய மாணவிகளைப் போன்று பரீட்சையெழுதவில்லையெனக் கூறி மாணவியை ஆசிரியை தாக்கியதில் மாணவி யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையின் 15ம் விடுதியில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் கல்விகச் கோட்டத்தில் அமைந்துள்ள ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம் பெற்றுள்ளது.
ஏழாலை மத்தியைச் சேர்ந்த ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் தெய்வேந்திரம் குமுதினி வயது 07 என்பவரே ஆசிரியையினால் தலையை வாங்கில் பிடித்து மோதியதில் கண்களில் பாதிப்பேற்பட்ட நிலையில் வையித்திய சாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளவராவார்.
குறிப்பிட்ட மாணவியின் குடும்பம் கஸ்டமான நிலமையில் உள்ள குடும்பம் என்பதும் இத் துடன் குறிப்பிட்ட மாணவியின் இருண்டு கண்களும் வீக்கம் அடைந்து பார்க்க முடியாத நிலமையில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வையித்திய சாலை வட்டாரங்கள் குறிப்பிட்ட மாணவியின் கண்கள் பாதிப்படைந்துள்ளனவா அல்லது நிரந்தரமாக பாதிப்படைந்துள்ளனவா என்பதனை இன்னும் தெளிவாக குறிப்பிடவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்மாவட்டத்தில் பல சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகள் இடம் பெறுகின்ற போதிலும் சிறுவர் அமைப்புக்கள் என்று கூறிக் கொள்கின்ற பல அரச உத்தியோகத்தர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் அமைப்புக்கள இருக்கின்ற போதிலும் இவைகள் எல்லாம் பெயரவிளவில் தமது சொந்த நன்மையை மையப்படுத்தி செயல்படுகின்றனவே தவிர உண்மையான விழிப்புணர்வுடன் செயல்படுவதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்கள் குறிப்பாக பல விடயங்கள் வெளியில் வரவிடாமலே மறைத்து வருகின்றமை சம்பந்தமாக கூறுகின்ற கருத்து பாதிக்கப்படவரின் எதிர்காலம் எனக்கூறி பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்படவராகவே இருக்க காரணமாக இருந்தவரை பாதுகாப்பதற்காகவே இத்தகைய போலி காரணங்களை கூறிவருகின்றார்கள் எனவும் பாதிக்கப்பட்ட பலர் கூறியுள்ளமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

