04-01-2006, 11:54 AM
துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை புலிகளே களைந்தால் நிலைமை மோசமாகிவிடும்: ஹக்ரூப் ஹொக்லெண்ட்
[சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2006, 06:16 ஈழம்] [ச.விமலராஜா]
துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் களைய மறுத்து புலிகளே களைந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகும் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
இந்த நாட்டின் அனைத்து நீர்ப் பரப்புகளும் சிறிலங்காவின் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளவை. கடற்புலிகளுக்கு எதுவித உரிமையும் இல்லை. இதை விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
மற்றொரு கடற்படை தொடர்பான சர்வதேச அளவில் நடைமுறைகள் இல்லை. இப்போதுதான் நாம் இது தொடர்பிலான பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறோம். இது தொடர்பில் மேலதிகமாக நான் பேசவிரும்பவில்லை. அது ஆபத்தானதாக அமையும்.
கடற்பிரதேசத்தில் சிறிலங்கா கடற்படையினர் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையிலான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் கவலையளிக்கிறது.
சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்துக்கு தயாராக உள்ளனர். இது இயற்கையானது. ஆனால் அவர்களைக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் அவர்கள் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். டிசம்பர் மற்றும் சனவரி மாத வன்முறைகளின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறியும் என்று நினைத்தேன். ஆனால் அது காப்பாற்றப்பட்டுவிட்டதன் மூலம் இருதரப்பினரும் அமைதி வழித் தீர்வை விரும்புவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கே இராணுவ வழித் தீர்வு ஏற்படாது. ஏப்ரல் பேச்சுக்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
யுத்த நிறுத்தம் என்பது நிரந்தரத் தீர்வு அல்ல. துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை அரசாங்கம் களையாவிட்டால் பாரிய அச்சுறுத்தலாக அமையும்.
இக்குழுவினருக்கு இராணுவம் உதவி செய்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அப்படிச் செய்தால் அது மிகப் பெரிய தவறு. விடுதலைப் புலிகள் தாங்களே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக அறிவித்துவிட்டால் அது மிக மோசமான சூழ்நிலையை உருவாக்கிவிடும் என்று அச்சப்படுகிறேன்.
இருதரப்பு உயர்நிலை சந்திப்பு மிக அவசியமானது. இதை தள்ளிப்போடக் கூடாது. மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இனியும் தாமதித்தால் நிலைமை மேலும் மோசமடையும். இருதரப்பு உயர்நிலை அரசியல் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன். பிரார்த்திக்கிறேன் என்றார் ஹக்ரூப் ஹொக்லெண்ட்.
[சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2006, 06:16 ஈழம்] [ச.விமலராஜா]
துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் களைய மறுத்து புலிகளே களைந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகும் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
இந்த நாட்டின் அனைத்து நீர்ப் பரப்புகளும் சிறிலங்காவின் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளவை. கடற்புலிகளுக்கு எதுவித உரிமையும் இல்லை. இதை விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
மற்றொரு கடற்படை தொடர்பான சர்வதேச அளவில் நடைமுறைகள் இல்லை. இப்போதுதான் நாம் இது தொடர்பிலான பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறோம். இது தொடர்பில் மேலதிகமாக நான் பேசவிரும்பவில்லை. அது ஆபத்தானதாக அமையும்.
கடற்பிரதேசத்தில் சிறிலங்கா கடற்படையினர் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையிலான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் கவலையளிக்கிறது.
சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்துக்கு தயாராக உள்ளனர். இது இயற்கையானது. ஆனால் அவர்களைக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் அவர்கள் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். டிசம்பர் மற்றும் சனவரி மாத வன்முறைகளின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறியும் என்று நினைத்தேன். ஆனால் அது காப்பாற்றப்பட்டுவிட்டதன் மூலம் இருதரப்பினரும் அமைதி வழித் தீர்வை விரும்புவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கே இராணுவ வழித் தீர்வு ஏற்படாது. ஏப்ரல் பேச்சுக்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
யுத்த நிறுத்தம் என்பது நிரந்தரத் தீர்வு அல்ல. துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை அரசாங்கம் களையாவிட்டால் பாரிய அச்சுறுத்தலாக அமையும்.
இக்குழுவினருக்கு இராணுவம் உதவி செய்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அப்படிச் செய்தால் அது மிகப் பெரிய தவறு. விடுதலைப் புலிகள் தாங்களே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக அறிவித்துவிட்டால் அது மிக மோசமான சூழ்நிலையை உருவாக்கிவிடும் என்று அச்சப்படுகிறேன்.
இருதரப்பு உயர்நிலை சந்திப்பு மிக அவசியமானது. இதை தள்ளிப்போடக் கூடாது. மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இனியும் தாமதித்தால் நிலைமை மேலும் மோசமடையும். இருதரப்பு உயர்நிலை அரசியல் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன். பிரார்த்திக்கிறேன் என்றார் ஹக்ரூப் ஹொக்லெண்ட்.

