03-31-2006, 12:29 AM
<b>அன்பு வணக்கம் கள உறவுகளே...</b>
யாழ் இணையத்தின் 8 ஆவது அகவையை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ இருக்கிறது. உங்கள் அனைவரோடும் - உங்கள் கருத்துக்களோடும் இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி. யாழ் கருத்துக்களத்தில் இடம்பெற்ற பட்டிமன்றங்களில் இது கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு தலைப்பை மூன்று வெவ்வேறு கருத்தியல் நிலைப்பாடுகளிலிருந்து விவாதிக்க மூன்று அணிகளாக - தயாராக இருக்கிறார்கள். இதுவரை நடந்த பட்டிமன்றங்களிலிருந்து அனுபவங்களைப் பெற்று, தொடர்கின்ற இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்கமைப்பதிலும் ஒருங்கமைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
என்னை நடுவராக இணைத்திருக்கிறீர்கள். நேரம் ஒத்துழைக்குமா என்பது சிக்கலான விடயம். எனவே முடிந்தளவு சிறப்பாக உங்கள் கருத்துக்களை வாசித்து தொகுத்தளிக்க முனைகிறேன். தவறுகள் நேர்ந்தால் பொறுத்தருள்க.
சரி. முதலில் - யாழ் இணையத்தின் எட்டாவது அகவையில் யாழ் இணையத்தையும், அதன் நிர்வாகத்தையும், கள உறவுகளையும் மனதாற வாழ்த்துகிறோம். அத்தோடு இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்குபடுத்துவதில் மீண்டும் தனது பங்களிப்பை நல்கிய தோழி இரசிகைக்கும், ஏனையவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
தொடர இருக்கிற இப் பட்டிமன்றத்தின் கருப்பொருளாக அல்லது விவாதப்பொருளாக முன்வைக்கப்பட்டிருக்கிற விடயம்: "பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே உருவாகி, விரிவடைந்து வருகிற இடைவெளி" ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு "இவ் இடைவெளிக்குக் காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா?" என்று மூன்று கருத்தியல் நிலைப்பாடுகளிலிருந்து கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது.
தலைப்பில் எந்தவித எல்லைகளும் விதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே "ஈழத்து மண்ணிலிருந்து புலம்பெயர் ஈழத்து சமூகம்" வரைக்குமாக விவாதத்தை விரித்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன். காலம் காலமாக பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது எமது சமூகமாக இருந்தாலென்ன, ஏனைய சமூகங்களாக இருந்தாலென்ன. ஆனால், இங்கு முன்வைக்கப்பட்டிருக்கிற விடயம் யாதெனின்: இடைவெளி விரிவடைகிறது என்பதுதான். எனவே விவாதத்தில் பங்கேற்கிற கள உறவுகள் இதனையும் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்.
"தொழில்நுட்பப் புரட்சி, யுத்தசூழல், புலம்பெயர் வாழ்வு, கலாசார அதிர்வு, உலகமயமாதல்" போன்ற விடயங்களும் "சமூகத்திலும் அதன் உறவுநிலைகளிலும்" பாரிய மாற்றங்களை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அந்தவகையில் சூழல்தான் இந்த "இடைவெளி விரிவடைவுக்கு" காரணம் என்று வாதாட வந்திருக்கிற அணியினரையும், அவ்வணிக்கு தலைமையேற்றிருக்கும் நிதர்சனையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
"வழிநடத்தல், நெருங்கிப் பழகல், விட்டுக்கொடுப்பு, அன்பு பகிர்தல், குடும்பத் தலைமைத்துவம், சுதந்திரம், வீடு, புரிந்துணர்வு" போன்றவற்றில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்கள். வாழ்வியல் அனுபவங்களூடாக வளர்ந்து வந்தவர்கள். காலத்தின் சுழற்சியில் "பிள்ளைகளின்" வயதுநிலையைத் தாண்டி வந்தவர்கள். அந்தவகையில் "இடைவெளி விரிவடைவில்" ஆதிக்கம் செலுத்துபவர்களாக பெற்றோர்களே இருக்கமுடியும் என்று தமது வாதத்தை முன்வைக்க வந்திருக்கும் அணியினரையும், அவ்வணிக்குத்து தலைமையேற்றிருக்கும் தல அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
"துடிப்பு, வேகம், சுதந்திரம், அனுபவமற்ற தன்மை, நவீனத்துவத்தோடு உறவு, மாற்றம் வேண்டுகிற மனசு, புதிதை விரும்புகிற குணம்" என்று பல்வேறு குணாம்சங்களைக் கொண்டுள்ளவர்களாக - சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறவர்கள் பிள்ளைகள்(இளைஞர்கள்). அந்தவகையில் "பிள்ளைகளே இடைவெளி விரிவடைந்துகொண்டு செல்வதற்கு" காரணமானவர்கள் என்று தமது தரப்பு வாதத்தை வழங்க இணைந்திருக்கிற அணியினரையும், அவ்வணிக்கு தலைமையேற்றிருக்கிற சாத்திரி அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
இவர்கள் அனைவரும ஆக்கபூர்வமான விவாதத்தை நிகழ்த்தப்போகிறார்கள் - நிகழ்த்துவார்கள். எனவே இவர்களுடைய கருத்துக்களை, கருத்தாடல்களை கவனமாக அனைத்து கள உறவுகளும் வாசித்து உற்சாகமளிக்க வேண்டும். ஒவ்வொரு அணியினரும் பட்டிமன்ற சிறப்பு விதிமுறைகளையும் கவனத்தில் கொள்க.
பட்டிமன்றம் தொடங்குகிறது. முதலாவதாக "பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உருவாகி விரிவடைந்து வருகிற இடைவெளிக்கு பிள்ளைகளே காரணம்" என்று தனது அணியின் வாதத்தை முழங்க அணித்தலைவர் சாத்திரி அவர்களை அழைக்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
யாழ் இணையத்தின் 8 ஆவது அகவையை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ இருக்கிறது. உங்கள் அனைவரோடும் - உங்கள் கருத்துக்களோடும் இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி. யாழ் கருத்துக்களத்தில் இடம்பெற்ற பட்டிமன்றங்களில் இது கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு தலைப்பை மூன்று வெவ்வேறு கருத்தியல் நிலைப்பாடுகளிலிருந்து விவாதிக்க மூன்று அணிகளாக - தயாராக இருக்கிறார்கள். இதுவரை நடந்த பட்டிமன்றங்களிலிருந்து அனுபவங்களைப் பெற்று, தொடர்கின்ற இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்கமைப்பதிலும் ஒருங்கமைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
என்னை நடுவராக இணைத்திருக்கிறீர்கள். நேரம் ஒத்துழைக்குமா என்பது சிக்கலான விடயம். எனவே முடிந்தளவு சிறப்பாக உங்கள் கருத்துக்களை வாசித்து தொகுத்தளிக்க முனைகிறேன். தவறுகள் நேர்ந்தால் பொறுத்தருள்க.
சரி. முதலில் - யாழ் இணையத்தின் எட்டாவது அகவையில் யாழ் இணையத்தையும், அதன் நிர்வாகத்தையும், கள உறவுகளையும் மனதாற வாழ்த்துகிறோம். அத்தோடு இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்குபடுத்துவதில் மீண்டும் தனது பங்களிப்பை நல்கிய தோழி இரசிகைக்கும், ஏனையவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
தொடர இருக்கிற இப் பட்டிமன்றத்தின் கருப்பொருளாக அல்லது விவாதப்பொருளாக முன்வைக்கப்பட்டிருக்கிற விடயம்: "பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே உருவாகி, விரிவடைந்து வருகிற இடைவெளி" ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு "இவ் இடைவெளிக்குக் காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா?" என்று மூன்று கருத்தியல் நிலைப்பாடுகளிலிருந்து கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது.
தலைப்பில் எந்தவித எல்லைகளும் விதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே "ஈழத்து மண்ணிலிருந்து புலம்பெயர் ஈழத்து சமூகம்" வரைக்குமாக விவாதத்தை விரித்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன். காலம் காலமாக பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது எமது சமூகமாக இருந்தாலென்ன, ஏனைய சமூகங்களாக இருந்தாலென்ன. ஆனால், இங்கு முன்வைக்கப்பட்டிருக்கிற விடயம் யாதெனின்: இடைவெளி விரிவடைகிறது என்பதுதான். எனவே விவாதத்தில் பங்கேற்கிற கள உறவுகள் இதனையும் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்.
"தொழில்நுட்பப் புரட்சி, யுத்தசூழல், புலம்பெயர் வாழ்வு, கலாசார அதிர்வு, உலகமயமாதல்" போன்ற விடயங்களும் "சமூகத்திலும் அதன் உறவுநிலைகளிலும்" பாரிய மாற்றங்களை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அந்தவகையில் சூழல்தான் இந்த "இடைவெளி விரிவடைவுக்கு" காரணம் என்று வாதாட வந்திருக்கிற அணியினரையும், அவ்வணிக்கு தலைமையேற்றிருக்கும் நிதர்சனையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
"வழிநடத்தல், நெருங்கிப் பழகல், விட்டுக்கொடுப்பு, அன்பு பகிர்தல், குடும்பத் தலைமைத்துவம், சுதந்திரம், வீடு, புரிந்துணர்வு" போன்றவற்றில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்கள். வாழ்வியல் அனுபவங்களூடாக வளர்ந்து வந்தவர்கள். காலத்தின் சுழற்சியில் "பிள்ளைகளின்" வயதுநிலையைத் தாண்டி வந்தவர்கள். அந்தவகையில் "இடைவெளி விரிவடைவில்" ஆதிக்கம் செலுத்துபவர்களாக பெற்றோர்களே இருக்கமுடியும் என்று தமது வாதத்தை முன்வைக்க வந்திருக்கும் அணியினரையும், அவ்வணிக்குத்து தலைமையேற்றிருக்கும் தல அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
"துடிப்பு, வேகம், சுதந்திரம், அனுபவமற்ற தன்மை, நவீனத்துவத்தோடு உறவு, மாற்றம் வேண்டுகிற மனசு, புதிதை விரும்புகிற குணம்" என்று பல்வேறு குணாம்சங்களைக் கொண்டுள்ளவர்களாக - சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறவர்கள் பிள்ளைகள்(இளைஞர்கள்). அந்தவகையில் "பிள்ளைகளே இடைவெளி விரிவடைந்துகொண்டு செல்வதற்கு" காரணமானவர்கள் என்று தமது தரப்பு வாதத்தை வழங்க இணைந்திருக்கிற அணியினரையும், அவ்வணிக்கு தலைமையேற்றிருக்கிற சாத்திரி அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
இவர்கள் அனைவரும ஆக்கபூர்வமான விவாதத்தை நிகழ்த்தப்போகிறார்கள் - நிகழ்த்துவார்கள். எனவே இவர்களுடைய கருத்துக்களை, கருத்தாடல்களை கவனமாக அனைத்து கள உறவுகளும் வாசித்து உற்சாகமளிக்க வேண்டும். ஒவ்வொரு அணியினரும் பட்டிமன்ற சிறப்பு விதிமுறைகளையும் கவனத்தில் கொள்க.
பட்டிமன்றம் தொடங்குகிறது. முதலாவதாக "பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உருவாகி விரிவடைந்து வருகிற இடைவெளிக்கு பிள்ளைகளே காரணம்" என்று தனது அணியின் வாதத்தை முழங்க அணித்தலைவர் சாத்திரி அவர்களை அழைக்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

