03-30-2006, 11:21 PM
Niththila Wrote:நல்ல கதை சாத்ஸ் அங்கிள் முடிவு எதிர்பாராததாய் இருக்கிறது அடுத்த தொடர் எப்ப வரும்
புலத்தில பலர் இப்படித்தான் இதில பெண்கள்மட்டுமல்ல ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
நான் ஒரு பெண் என்பதால இதை எழுதி ஏன் எல்லாப் பெண்களை பற்றியும் தப்பான அபிப்பிராயம் ஏற்படுத்துவான் என நினைச்சன் ஆனால் ஊரில இருந்து புலத்து பெண்களை திருமணம் செய்யும் ஆண்களும் கவனமாகத் தான் இருக்கவேணும்
எனது சீனியர் எடுத்த பழைய வழக்கு ஒன்று (நான் வேலை செய்வது கிரீக் நாட்டவரது நிறுவனம் அதால பழைய வழக்குகள் வாசிக்கும்போது அபுர்வமாக ஒரு தமிழ் பெயர் எண்டவுடன் அதை வாசிக்க வேணும் எண்டு ஆர்வம் வருவது இயல்புதானே )
புலத்து தமிழ் பெண் ஒருவர் பெற்றோர் பேசிய இலங்கை பையனை (இலங்கையில அக்கவுன்டன்ட்) சிங்கப்புரில பதிவு திருமணம்செய்து லண்டன் கூப்பிட்டிருந்தவ இங்கு வந்தாப்பிறகு அவவுக்கு பையன பிடிக்கவில்லை அதுக்கு அவ சொல்லியிருந்த காரணம் (ஸ்டேட்மென்டில சொன்ன காரணம் he was not stylish enough & and he could not speak english properly) ஸ்டேட்மென்டில சொன்னதை அப்படியே போர்மில போட முடியாது என்பதால போர்மில போட்ட காரணம் Unreasonable Behaviour and the marriage broken down irretrievably :roll: :roll: :roll:
எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவருக்கு கனடாவில் சம்பந்தம் வந்தது. சிட்னியில் வசிக்கும் அந்த நண்பர், கல்யாணம் பேசியவர்களிடம் 'பொம்பிளப்பிள்ளை தமிழ் கதைக்குமோ' என்று நண்பர் கேட்டார். அதற்கு அவையள் சொன்னபதில் 'என்ன தம்பி, நீர் லண்டனிலை கனகாலம் இருந்து மேற்படிப்புகள் படித்தனீர். தமிழைப்பற்றிக் கேக்கிறீர்' என்று பதில் அளித்தினம். அதற்கு நண்பன் சொன்னார் ' தமிழ் தெரியாதபிள்ளையினைக் கட்டுகிறதும் ஒரு வெள்ளைக்காரியினைக் கட்டுவது ஒன்று தான்' என்றார். பின்ன அந்தப்பிள்ளையினைக் கட்டி விட்டு எதுக்கெடுத்தாலும் Excuse Me, Please கேக்கவேண்டும். அப்ப எங்கை பாசம் வரும். உங்களது அன்பினை வெளிப்படுத்த சொந்த மொழியினை விட வேறு மொழியில் எவ்வாறு சிறப்பாக விளங்கப்படுத்தலாம்?. அடிமைக்குணம் இன்னும் உவையளுக்கு விட்டுப்போக வில்லை.
எங்கடசனம் உந்த தெழுங்கு கீர்த்தனை, சமயம், பரதனாட்டியம் போன்றவற்றுக்கு செலவளிக்கும் பணத்தில் 10ல் ஒருபகுதியினைக்கூட தமிழுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செலவிடுவதில்லை.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

