03-30-2006, 09:24 PM
[size=18]யாழ் இணையம்
வாழ்த்துக் கவிதை
தாயகத்தை விட்டகன்ற தமிழ் உறவுக்கெல்லாம்
தாய்போன்று வழிகாட்டும் ஓர் இணையம்
சேய்போன்று சேர்ந்துவரும் உறவுகளை எல்லாம்
வாயார வாழ்த்தி வரவேற்கும் இணையம்
ஓயாது எழுதுகின்ற உறவுகளும் உண்டு
ஓரிரு வரிகளோடு ஒழிபவரும் உண்டு
ஆய்வாளர் அறிஞர்கள் கவிஞர்கள் ஆர்வலர்கள்
ஓய்வாகி உலகெங்கும் உறவாடும் இணையம்.
களம் கவிதை கலைகள் கலைஞர்கள்
கருத்து கணனி சிறுகதை குறும்படங்கள்
தளம் முகவரிகள் தத்துவம் தமிழீழம்
தமிழ் தமிழர் தகவலோடு துயர்பகிர்தல்
புலம் பாராட்டு பிறமொழி ஆக்கங்கள்
போட்டி நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்கள்
நலம் விளையாட்டு விஞ்ஞானம் மருத்துவம்
இலக்கியம் சமையல் இன்னும் பலபல.
பட்டி மன்றங்கள் அடிக்கடி நடக்கும்
பட்சிகள் பாதகர் பெயர்களில் தொடரும்
வெட்டி வெட்டி வாதங்கள் வளரும்
வேடிக்கை யாகவும் வாசிக்க இனிக்கும்
கட்டி அணைத்தும் கருத்துக்கள் சொல்வார்
எட்டி உதைப்பையும் எழுத்தினில் செய்வார்
முட்டி மோதி முறைத்து வெறுத்தாலும்
குட்டிப் புூனைபோல் குழைந்து பின்மகிழ்வார்.
அகவை எட்டினை அடைந்து அன்னைக்கு
அழகு தமிழெடுத்து ஆசிகள் சொல்வேன்
உவகை கொண்டிங்கு உள்நுழைந்தோர் எல்லாம்
உனைவிட்டு அகலாது உறவாக உள்ளார்
தகமை உனக்குண்டு தரத்தில் உயர்வுண்டு
தமிழர் வளம்பேண துணையாய் பலருண்டு
மகிமை பலபெற்று மண்ணின் மரபுஏந்தி
மகுடம் தலைசுூடி மகிழ்வோடு மலர்கவே!
வாழ்த்துக் கவிதை
தாயகத்தை விட்டகன்ற தமிழ் உறவுக்கெல்லாம்
தாய்போன்று வழிகாட்டும் ஓர் இணையம்
சேய்போன்று சேர்ந்துவரும் உறவுகளை எல்லாம்
வாயார வாழ்த்தி வரவேற்கும் இணையம்
ஓயாது எழுதுகின்ற உறவுகளும் உண்டு
ஓரிரு வரிகளோடு ஒழிபவரும் உண்டு
ஆய்வாளர் அறிஞர்கள் கவிஞர்கள் ஆர்வலர்கள்
ஓய்வாகி உலகெங்கும் உறவாடும் இணையம்.
களம் கவிதை கலைகள் கலைஞர்கள்
கருத்து கணனி சிறுகதை குறும்படங்கள்
தளம் முகவரிகள் தத்துவம் தமிழீழம்
தமிழ் தமிழர் தகவலோடு துயர்பகிர்தல்
புலம் பாராட்டு பிறமொழி ஆக்கங்கள்
போட்டி நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்கள்
நலம் விளையாட்டு விஞ்ஞானம் மருத்துவம்
இலக்கியம் சமையல் இன்னும் பலபல.
பட்டி மன்றங்கள் அடிக்கடி நடக்கும்
பட்சிகள் பாதகர் பெயர்களில் தொடரும்
வெட்டி வெட்டி வாதங்கள் வளரும்
வேடிக்கை யாகவும் வாசிக்க இனிக்கும்
கட்டி அணைத்தும் கருத்துக்கள் சொல்வார்
எட்டி உதைப்பையும் எழுத்தினில் செய்வார்
முட்டி மோதி முறைத்து வெறுத்தாலும்
குட்டிப் புூனைபோல் குழைந்து பின்மகிழ்வார்.
அகவை எட்டினை அடைந்து அன்னைக்கு
அழகு தமிழெடுத்து ஆசிகள் சொல்வேன்
உவகை கொண்டிங்கு உள்நுழைந்தோர் எல்லாம்
உனைவிட்டு அகலாது உறவாக உள்ளார்
தகமை உனக்குண்டு தரத்தில் உயர்வுண்டு
தமிழர் வளம்பேண துணையாய் பலருண்டு
மகிமை பலபெற்று மண்ணின் மரபுஏந்தி
மகுடம் தலைசுூடி மகிழ்வோடு மலர்கவே!

