03-30-2006, 08:13 PM
<b>கனடாவில் ஈழத்தமிழர் குடிவரவு தொடர்ச்சி</b>
1983ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து 2002 ஆடி 28ஆம் நாள் வரைத் திருமணத்திற்கு மணவுறுதி செய்யப் பெற்ற வாழ்க்கைத் துணையை அல்லது ஏற்கனவே திருமணமான வாழ்க்கைத் துணையை பொறுப்பேற்கும் முறை நடைமுறையில் இருந்தது. திருமணத்திற்கு மணவுறுதி செய்யப் பெற்ற வாழ்க்கைத் துணையை பொறுப்பேற்போர் 90 நாட்களுள் திருமணப்பதிவு செய்யாமல் வேறு ஒருவரைத் திருமணம் செய்தபடியால் இவ்வாறு பொறுப்பேற்கும் திட்டத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
2002 ஆடி திங்களிலிருந்து பொறுப்பேற்பவர் தனது பணிமூலம் பெறும் வருமானத் தொகையை காட்டத் தேவையில்லை. ஆனால் பொறுப்பேற்பவர் தான் செய்யும் வேலையை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. இப்புதிய பொறுப்பேற்புத் திட்டத்தின் கீழ் உள்ள நன்மை யாதெனில்; பொறுப்பேற்பபர் பொறுப்பேற்கப்படும் வாழ்க்கைத் துணையை மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். இத்திட்டத்திலுள்ள தீமை யாதெனில்; முடிவரவு அலுவலர்கள் ஏற்கனவே மணவுறுதி செய்யப் பெற்ற திருமணங்கள் நம்பத்தக்கவை அல்ல என்று கருத இடமுண்டு. இதன் விளைவாக நுழைவிசைவு வழங்கும் அலுவலர்களுக்கு எமது பண்பாடு சமய சடங்கு ஒழுக்க முறைகளை விளக்க வேண்டிய நிலை புதிதாக திருமணம் செய்தோருக்கு ஏற்பட்டுள்ளது,
மிகவும் குறைந்தளவு ஈழத்தமிழரே அவர்களது கல்வித்தகைமை, தொழில்சார் பட்டறிவுகளின் அடிப்படையில் தன்முனைவாளராகத் தெரிவு செய்யப்பட்டு கனடாவிற்கு வந்துள்ளனர். இதுபோன்றே மிகக்குறைந்தளவு ஈழத்தமிழர்கள் வணிக நோக்கோடு தொழில்முனைவாளராகப் புலம்பெயர்ந்த இறுதி வகுப்பினர் ஆவர். ஒரு புதிய வளர்ச்சியடைந்த பிரிவினர் மாணவ நுழைவிசையோடு கல்வி கற்பதற்காக வந்து, இங்கு வந்த பின்னர் நிரந்தரக் குடிவரவாளராக வருவதை நாடுகின்றனர். கனடாத் தமிழ்ச்ச்முதாயம் வலுவுள்ளதாக உருப்பெற்று வருகின்றது. கட்டுக்கோப்பான சமுதாயமாக விளங்கித் தனது அடையாளத்தை தொலைக்காதிருக்க வேண்டும்.
1983ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து 2002 ஆடி 28ஆம் நாள் வரைத் திருமணத்திற்கு மணவுறுதி செய்யப் பெற்ற வாழ்க்கைத் துணையை அல்லது ஏற்கனவே திருமணமான வாழ்க்கைத் துணையை பொறுப்பேற்கும் முறை நடைமுறையில் இருந்தது. திருமணத்திற்கு மணவுறுதி செய்யப் பெற்ற வாழ்க்கைத் துணையை பொறுப்பேற்போர் 90 நாட்களுள் திருமணப்பதிவு செய்யாமல் வேறு ஒருவரைத் திருமணம் செய்தபடியால் இவ்வாறு பொறுப்பேற்கும் திட்டத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
2002 ஆடி திங்களிலிருந்து பொறுப்பேற்பவர் தனது பணிமூலம் பெறும் வருமானத் தொகையை காட்டத் தேவையில்லை. ஆனால் பொறுப்பேற்பவர் தான் செய்யும் வேலையை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. இப்புதிய பொறுப்பேற்புத் திட்டத்தின் கீழ் உள்ள நன்மை யாதெனில்; பொறுப்பேற்பபர் பொறுப்பேற்கப்படும் வாழ்க்கைத் துணையை மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். இத்திட்டத்திலுள்ள தீமை யாதெனில்; முடிவரவு அலுவலர்கள் ஏற்கனவே மணவுறுதி செய்யப் பெற்ற திருமணங்கள் நம்பத்தக்கவை அல்ல என்று கருத இடமுண்டு. இதன் விளைவாக நுழைவிசைவு வழங்கும் அலுவலர்களுக்கு எமது பண்பாடு சமய சடங்கு ஒழுக்க முறைகளை விளக்க வேண்டிய நிலை புதிதாக திருமணம் செய்தோருக்கு ஏற்பட்டுள்ளது,
மிகவும் குறைந்தளவு ஈழத்தமிழரே அவர்களது கல்வித்தகைமை, தொழில்சார் பட்டறிவுகளின் அடிப்படையில் தன்முனைவாளராகத் தெரிவு செய்யப்பட்டு கனடாவிற்கு வந்துள்ளனர். இதுபோன்றே மிகக்குறைந்தளவு ஈழத்தமிழர்கள் வணிக நோக்கோடு தொழில்முனைவாளராகப் புலம்பெயர்ந்த இறுதி வகுப்பினர் ஆவர். ஒரு புதிய வளர்ச்சியடைந்த பிரிவினர் மாணவ நுழைவிசையோடு கல்வி கற்பதற்காக வந்து, இங்கு வந்த பின்னர் நிரந்தரக் குடிவரவாளராக வருவதை நாடுகின்றனர். கனடாத் தமிழ்ச்ச்முதாயம் வலுவுள்ளதாக உருப்பெற்று வருகின்றது. கட்டுக்கோப்பான சமுதாயமாக விளங்கித் தனது அடையாளத்தை தொலைக்காதிருக்க வேண்டும்.
<b> .. .. !!</b>

