03-30-2006, 12:03 PM
sathiri Wrote:இவரது இந்த சாட்சி புத்தகத்தில் இவரது சகாக்களிற்கே உடனபாடு இல்லை அதைபடித்துவிட்டு அவரது நண்பர்களான கோவைநந்தன் மற்றும் உமாகாந்தன் போன்றவர்களே எதிர்ப்பு அறிக்கை விட்டனர் அதைவிட அவரது புத்தகத்தில் முதல் தற்கொலைபோராளி சிவகுமாரன் தனது மடியில்தான் உயிரை விட்டார் என்று ஒரு புளுகைவேறு அள்ளி விட்டிருக்கிறார் இவரது புளுகை பக்கம் பக்கமாக விபரிக்கலாம் ஆனால் அது இப்ப தேவையில்லாதது அதைவிட்டு என்றை இங்கு விளங்கபடுத்த விரும்புகிறேன் மாணவர் பேரவை என்பது தமிழீழ விடுதலையை நோக்காக கொண்டோ அல்லது ஈழவிடுதலைக்கான ஆயதபோராட்டத்திற்கான ஆரம்ப அமைப்போ அல்ல அது அன்று இலங்கை அரசின் தரபடுத்துதல் மற்றும் மாணவரது உரிமைகளிற்காக மட்டுமே சாத்வீக போராட்டங்கள் நடத்துவதற்காய் தொடங்கபட்டது அது தொடங்கி சில காலங்களிலேயே சிலர் கூட்டணி பின்னால் சிலர் தனியாக சிலர் ஆயுதபோராட்ட அமைப்புகள் என்று பிரிந்து போய் விட்டனர் அதில் இந்த புஸ்பராசா ஈபிஆர் எல் எவ் அமைப்பின் முழுஆதரவாளராய் செயற்பட்டாரே தவிர இவர் அந்த அமைப்பின் ஆயுதபயிற்சிபெற்ற ஒருவர்அல்ல பிரானன்சில் வந்து பின்னர்அந்த அமைப்பிறகாக வேலைகள் செய்தார் அதேநேரம் கூட்டணிக்கு கொடி பிடித்ததும் கோசம் போட்டதும் இவரது போராட்ட வடிவங்களில் ஒண்று
மன்னிக்க வேண்டும். உண்மைக்கு புறம்பான ஒன்றை கண்டும் காணாதமாதிரி விட மனம் வராததனால் எழுதுகிறேன். புஸ்பராஜாவை நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆனால் அவரது இளைய சகோதரியான ஜெயராணியை யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்திருக்கிறேன். தமிழீழ விடுதலைப்புலிகள் மாவீரர் குடும்பத்தை சேர்ந்த மன்னார் பிரதேசத்து மாணவியுடன் அகதிகளுக்கான புனர்வாழ்வு பணிகளில் ஜெயராணி அப்போது ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். பிரபலமான மண்சுமந்த மேனியர் நாடகத்திலும் நடித்திருந்தார்.
அவர்களது இன்னுமொரு சகோதரியான புஸ்பராணி பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். புலோலி வங்கி விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் நிதித்தேவைகளுக்காக கொள்ளையிட்ப்பட்ட போது, அந்த வங்கியில் காசாளராக இருந்து பணப்பேளையை திறந்து கொடுத்தவர் புஸ்பராணி. அவரை சி.ஐ.டி இன்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை பொலிஸ்நிலையம் கொண்டு சென்று, பெற்றவர்கள் முன்பாக ஆடைகளை களைய வைத்து உள்ளாடையுடன் நிறுத்தி அந்த உள்ளாடைகளும் கிழிந்து விழும்வரை தாக்கினார் என்றும், இவ்வாறாகவே புலோலி வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் புஸ்பராணியிடம் இருந்து பெறப்பட்டன என்றும், அன்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது.
பின்னர் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை மன்னார் காட்டில் புஸ்பராஜா மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு, அழைத்துவரப்பட்டு, கடத்திச்செல்லப்படடு, சித்திரவதை செய்யபப்பட்டு, ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
புலோலி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றியவர்களில் இன்னும் ஒரு முக்கியமானவர் பாலகுமார். இவர் அப்போது புலோலி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றினார். பின்னர் ஈரோஸ் பாலகுமார் என்று அறியப்பட்டு இன்று விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினராக இருக்கிறார்.
விடுதலைப்புலிகள் என்றால் போற்றுவதையும் விடுதலைப்புலிகள் அல்ல என்றால் தூற்றுவதையும் வழக்காக கொண்டிருப்பவர்கள், எத்தனை அறியப்படாத "மாத்தையாக்களுக்கும்", "கருணாக்களுக்கும்" மாவீரர் அஞ்சலிகள் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும்..
''
'' [.423]
'' [.423]

