03-29-2006, 03:59 PM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! (பாகம் 2)</span>
ஒரு படைத்தளம் மீதான தாக்குதல் என்பது நீண்ட கால தயாரிப்புக்களை கொண்ட ஒன்று. குறிப்பிட்ட படைத்தளம் நீண்ட காலமாக வேவு பார்க்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் தரவுகளின் அடைப்படையில் தாக்குதல் ஒத்திகைகள் பார்க்கப்பட்டு பின்பு தாக்குதல் நடைபெறும். ஆகவே ஒரு தாக்குதலின் வெற்றிக்கு அடிப்படையாக வேவுப் படையணிகளின் செயற்பாடுகளும், தாக்குதலுக்கான திட்டமிடலும் அமைகின்றன.
ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கான வேவு பார்த்தலை கேணல் ஜெயத்தின் தலைமையிலான விசேட வேவுப் படையணி மேற்கொண்டிருந்தது. வேவு மூலமாக பெறப்பட்ட தரவுகளை வைத்துக் கொண்டு தேசியத் தலைவர் ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கான திட்டத்தை வரைந்தார். பொதுவாகவே ஒரு பெரும் தளத்தின் தாக்குதல் திட்டம் வரையப்படும் பொழுது அது மிகவும் இரகசியமாகவே வைக்கப்படும். அதுவும் மணலாற்றில் நடந்த இதயபூமி 2 நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இரகசியங்கள் காக்கப்படுவது என்பது மிக மிக இறுக்கமான ஒன்றாக மாறியிருந்தது. ஒரு தளத்தின் மீதான தாக்குதல் திட்டமும், தாக்குதல் நடப்பதற்கான நேரமும் தேசியத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள். அனைத்து தயார்படுத்தலும் முழுமை பெற்ற பின்னர் தளபதிகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் ஒதுக்கப்படும்.
கிளிநொச்சி தளத்தை தாக்கி அழிப்பதற்கு தேசியத் தலைவர் முடிவெடுத்த பின்பு, ஜெயசிக்குறு படைகளை தடுத்து நிறுத்தியபடி மாங்குளத்தில் சண்டை புரிந்து கொண்டிருந்த அணிகளுக்கு பொறுப்பாக இருந்த கேணல் தீபனை கிளிநொச்சி தளத்தின் மீதான முற்றுகையை இறுக்கும்படி உத்தரவிட்டார். சில மாதங்கள் கழித்து தாக்குதலுக்கான உத்தரவை பிறப்பித்தார்.
கிளிநொச்சி தளம் மீதான ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கு ஜெயசிக்குறுவை எதிர்த்து போரிட்ட பெரும்பாலான அணிகள் ஈடுபடுத்தப்பட்டன. உள் நுளைந்து தளத்தை தாக்கி அழிப்பதற்கு கேணல் தீபன் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். முன்பு ஒரு முறை கிளிநொச்சி தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முழுமையான வெற்றியை பெறவில்லை. அப்பொழுது ஆனையிறவுத் தளத்தில் இருந்து கிளநொச்சி இராணுவத் தளத்திற்கு உதவிகள் கிடைத்ததே அதற்கு காரணம். அதைக் கருத்தில் கொண்டு இம் முறை ஆனையிறவில் இருந்து உதவிக்கு வரும் படைகளை தடுக்கும் பொறுப்பு கேணல் பால்ராஜுக்கு வழங்கப்பட்டது. கேணல் பால்ராஜ் தலைமையிலான படையணிகள் ஆனையிறவில் இருந்து உதவிக்கு வந்த இராணுவத்தினர் மீது கடும் தாக்குதலை தொடுத்து பலத்த இழப்பை எதிரிக்கு ஏற்படுத்தி விரட்டி அடித்தன. ஆனால் உள் நுளைந்த படையணிகள் மிகக் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. ஒரு நாள் முழுவதும் போரிட்டும் தளத்தை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இதையடுத்து கிளிநொச்சி தளத்தின் மீது ஆட்லறித் தாக்குதல் கடுமையாக்கப்பட்டது. கிட்டு பீரங்கிப் படையணியின் முழு வலுவும் ஒரு சேரப் பிரயோகிக்கப்பட்டது. சண்டையும் முடிவுக்கு வந்தது. ஓயாத அலைகள் 2 நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகள் பெரும் பாங்காற்றி இருந்தன. கிளிநொச்சி தளம் வெற்றி கொள்ளப்பட்டதன் அடையாளமாக கேணல் விதுசா புலிக் கொடியை ஏற்றினார். இந்தச் சமரில் கருணாவின் பங்கு சொல்லிக் கொள்ளும்படி இருக்கவில்லை என்பதே உண்மை.
இந்த ஓயாத அலைகள் 2 மூலமே தமிழர் தாயகத்தை கூறு போட முனைந்த ஜெயசிக்குறு நிறுத்தப்பட்டது. ஓயாத அலைகள் 2 நடவடிக்கையின் வெற்றிக்கு விசேட வேவுப் படையணிகள் ஒரு காரணம். ஆனையிறவில் இருந்த வந்த படைகளை விரட்டியடித்த கேணல் பால்ராஜ் தலைமையிலான படையணிகள் ஒரு காரணம். உள் நுளைந்து மிகக் கடும் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுத்து கைப்பற்றிய பகுதிகளை தக்க வைத்திருந்த கேணல் தீபனின் தலைமையிலான படையணிகள் ஒரு காரணம். சண்டையில் அளப்பரிய தியாகங்கள் புரிந்த மகளிர் படையணிகள் ஒரு காரணம். சண்டைய முடிவுக்கு கொண்டு வந்த கிட்டு பீரங்கிப் படையணி ஒரு காரணம்.
இதில் யாரவது ஒரு பகுதி சரியாக செயற்படவில்லையென்றாலும் சண்டையின் போக்கு மாறியிருக்கும். ஆகவே ஒரு சமரின் வெற்றி;க்கு யாரும் உரிமை கோர முடியாது. கரந்தடித் தாக்குதல்களாக ஆரம்பித்த ஈழ விடுதலைப் போராட்டம் பெரும்தளங்களை தாக்கி அழிக்கின்ற பெரும் சமர்களாக பரிமாண வளர்ச்சி பெற்ற பின்னர், எந்த ஒரு சமரின் வெற்றிக்கும் யாரும் உரிமை கோர முடியாது. விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு தான்தான் காரணம் என்று ஒரு தளபதி சொன்னால், அவருக்கு புத்தி பேதலித்து விட்டது என்றுதான் அர்த்தம்.
ஆனால் கருணாவும், அவரை சார்ந்தவர்களும் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு கருணாவே காரணம் என்று உளறுகிறார்கள். தென்தமிழீழத்தை சேர்ந்த போராளிகளின் வீரத்திலும் தியாகத்திலும் இவர்கள் குளிர் காய முனைகின்றார்கள்.
கருணாவின் இராணுவ வல்லமை என்பது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. காட்டுச் சண்டைகளில் நீண்ட கால தற்காப்புச் சண்டைகளை செய்யக் கூடிய அனுபவம் கொண்ட கருணா ஒரு பெரும் இராணுவத் தளத்தின் மீதான வலிந்து தாக்குதலின் யுக்திகளை சரியாக அறிந்தவர் அல்ல. கிழக்கில் வவுணதீவு போன்ற இராணுவ முகாம்கள் மீதான கருணாவின் திட்டமிடலுடன் கூடிய தாக்குதல்கள் விடுதலைப்புலிகள் தரப்பில் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தின. சரியான திட்டமிடல் இன்றி கிழக்கின் போராளிகளை பல முறை அநியாயமாக பலி கொடுத்தவர்தான் கருணா. பெரும் தளங்கள் மீதான வலிந்த சமர்களில் விடுதலைப்புலிகளின் பல தளபதிகளை விட மிகக் குறைந்த அனுபவம் கொண்டவர் கருணா. கருணாவிற்கு அடத்த இடத்தில் இருந்த கேணல் ரமேஸ் கருணாவை விரட்டியடித்த தாக்குதலை வழி நடத்தியதை நினைத்துப் பார்க்க வேண்டும். தனக்கு நன்கு பரிச்சயாமான பாதுகாப்பான ஒரு பிரதேசத்தில் போரிட முடியாமல் தப்பி ஓடியவர் கருணா. முக்கியமாக இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். விடுதலைப்புலிகளுடன் இருந்த காலத்தில் கருணாவின் தலைமையில் நடந்த சண்டைகளை கவனித்தால் ஒன்று விளங்கும். நகர்புறங்களில் படை நடத்திய அனுபவம் கருணாவிற்கு கிடையாது. அதற்கான திறனும் கருணாவிடம் இல்லை.
ஆனால் வரவிருக்கும் ஈழப் போர் 4 நகர்ப்புறங்களிலேயே நடைபெறும். வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி பெரும்பாலான காட்டுப் பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. கிழக்கைப் பொறுத்தவரை திருகோணமலை நகரமும் மட்டக்களப்பு நகரமும் விடுதலைப்புலிகளின் முக்கிய இலக்குகளாக இருக்கும். இவைகளை கருத்தில் கொண்டே நகர்ப்புற சண்டைகளில் மிகவும் அனுபவம் கொண்ட கேணல் பானு கிழக்கின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என நம்பலாம். அதாவது இனி வரப் போகும் சண்டைகளில் கருணாவின் விலகல் சிறிய அளவு கூட தாக்கத்தினைக் ஏற்படுத்தாது என துணிந்து கூறலாம்.
இனி விடுதலைப்புலிகள் மரபு வழிச் சண்டையில் உச்ச திறனை வெளிப்படுத்திய ஓயாத அலைகள் 3 பற்றி பார்ப்போம். சிறிலங்கா அரசு 18 மாதங்கள் சண்டை செய்து பிடித்த இடங்களை 3 நாட்களில் விடுவித்த அற்புதம் அது. அப்படியே தமிழர் தாயகத்தின் தொண்டையில் முள்ளாக இருந்த ஆனையிறவையும் கைப்பற்றிய பெரும் சமர் அது.
ஓயாத அலைகள் 3 நடவடிக்கையானது பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகளின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் பற்றி மட்டுமே தளபதிகளுக்கு தெரிந்திருந்தது. ஒட்டிசுட்டானில் தொடங்கிய சண்டைகள் ஆனையிறவில் தான் முடியும் என்று எந்த தளபதியும் அறிந்திருக்கவில்லை.
இவ்வளவையும் விடுங்கள். விடுதலைப்புலிகளுக்கு மரபுவழிச் சண்டைகளை கற்றுக் கொடுத்த கர்த்தாவாக தன்னைக் காட்டிக் கொள்ளும் கருணாவுக்கு ஓயாத அலைகள் 3 ஆரம்பித்த விடயமே தெரியாது.
(தொடரும்)
-வி.சபேசன்
(இக் கட்டுரைக்கு சில தகவல்களை தந்து உதவிய தமிழீழத்தில் வாழும் பெயர் குறிப்பிட முடியாத நண்பர்களுக்கு நன்றி)
நன்றி
-வி.சபேசன்
ஒரு படைத்தளம் மீதான தாக்குதல் என்பது நீண்ட கால தயாரிப்புக்களை கொண்ட ஒன்று. குறிப்பிட்ட படைத்தளம் நீண்ட காலமாக வேவு பார்க்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் தரவுகளின் அடைப்படையில் தாக்குதல் ஒத்திகைகள் பார்க்கப்பட்டு பின்பு தாக்குதல் நடைபெறும். ஆகவே ஒரு தாக்குதலின் வெற்றிக்கு அடிப்படையாக வேவுப் படையணிகளின் செயற்பாடுகளும், தாக்குதலுக்கான திட்டமிடலும் அமைகின்றன.
ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கான வேவு பார்த்தலை கேணல் ஜெயத்தின் தலைமையிலான விசேட வேவுப் படையணி மேற்கொண்டிருந்தது. வேவு மூலமாக பெறப்பட்ட தரவுகளை வைத்துக் கொண்டு தேசியத் தலைவர் ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கான திட்டத்தை வரைந்தார். பொதுவாகவே ஒரு பெரும் தளத்தின் தாக்குதல் திட்டம் வரையப்படும் பொழுது அது மிகவும் இரகசியமாகவே வைக்கப்படும். அதுவும் மணலாற்றில் நடந்த இதயபூமி 2 நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இரகசியங்கள் காக்கப்படுவது என்பது மிக மிக இறுக்கமான ஒன்றாக மாறியிருந்தது. ஒரு தளத்தின் மீதான தாக்குதல் திட்டமும், தாக்குதல் நடப்பதற்கான நேரமும் தேசியத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள். அனைத்து தயார்படுத்தலும் முழுமை பெற்ற பின்னர் தளபதிகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் ஒதுக்கப்படும்.
கிளிநொச்சி தளத்தை தாக்கி அழிப்பதற்கு தேசியத் தலைவர் முடிவெடுத்த பின்பு, ஜெயசிக்குறு படைகளை தடுத்து நிறுத்தியபடி மாங்குளத்தில் சண்டை புரிந்து கொண்டிருந்த அணிகளுக்கு பொறுப்பாக இருந்த கேணல் தீபனை கிளிநொச்சி தளத்தின் மீதான முற்றுகையை இறுக்கும்படி உத்தரவிட்டார். சில மாதங்கள் கழித்து தாக்குதலுக்கான உத்தரவை பிறப்பித்தார்.
கிளிநொச்சி தளம் மீதான ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கு ஜெயசிக்குறுவை எதிர்த்து போரிட்ட பெரும்பாலான அணிகள் ஈடுபடுத்தப்பட்டன. உள் நுளைந்து தளத்தை தாக்கி அழிப்பதற்கு கேணல் தீபன் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். முன்பு ஒரு முறை கிளிநொச்சி தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முழுமையான வெற்றியை பெறவில்லை. அப்பொழுது ஆனையிறவுத் தளத்தில் இருந்து கிளநொச்சி இராணுவத் தளத்திற்கு உதவிகள் கிடைத்ததே அதற்கு காரணம். அதைக் கருத்தில் கொண்டு இம் முறை ஆனையிறவில் இருந்து உதவிக்கு வரும் படைகளை தடுக்கும் பொறுப்பு கேணல் பால்ராஜுக்கு வழங்கப்பட்டது. கேணல் பால்ராஜ் தலைமையிலான படையணிகள் ஆனையிறவில் இருந்து உதவிக்கு வந்த இராணுவத்தினர் மீது கடும் தாக்குதலை தொடுத்து பலத்த இழப்பை எதிரிக்கு ஏற்படுத்தி விரட்டி அடித்தன. ஆனால் உள் நுளைந்த படையணிகள் மிகக் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. ஒரு நாள் முழுவதும் போரிட்டும் தளத்தை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இதையடுத்து கிளிநொச்சி தளத்தின் மீது ஆட்லறித் தாக்குதல் கடுமையாக்கப்பட்டது. கிட்டு பீரங்கிப் படையணியின் முழு வலுவும் ஒரு சேரப் பிரயோகிக்கப்பட்டது. சண்டையும் முடிவுக்கு வந்தது. ஓயாத அலைகள் 2 நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகள் பெரும் பாங்காற்றி இருந்தன. கிளிநொச்சி தளம் வெற்றி கொள்ளப்பட்டதன் அடையாளமாக கேணல் விதுசா புலிக் கொடியை ஏற்றினார். இந்தச் சமரில் கருணாவின் பங்கு சொல்லிக் கொள்ளும்படி இருக்கவில்லை என்பதே உண்மை.
இந்த ஓயாத அலைகள் 2 மூலமே தமிழர் தாயகத்தை கூறு போட முனைந்த ஜெயசிக்குறு நிறுத்தப்பட்டது. ஓயாத அலைகள் 2 நடவடிக்கையின் வெற்றிக்கு விசேட வேவுப் படையணிகள் ஒரு காரணம். ஆனையிறவில் இருந்த வந்த படைகளை விரட்டியடித்த கேணல் பால்ராஜ் தலைமையிலான படையணிகள் ஒரு காரணம். உள் நுளைந்து மிகக் கடும் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுத்து கைப்பற்றிய பகுதிகளை தக்க வைத்திருந்த கேணல் தீபனின் தலைமையிலான படையணிகள் ஒரு காரணம். சண்டையில் அளப்பரிய தியாகங்கள் புரிந்த மகளிர் படையணிகள் ஒரு காரணம். சண்டைய முடிவுக்கு கொண்டு வந்த கிட்டு பீரங்கிப் படையணி ஒரு காரணம்.
இதில் யாரவது ஒரு பகுதி சரியாக செயற்படவில்லையென்றாலும் சண்டையின் போக்கு மாறியிருக்கும். ஆகவே ஒரு சமரின் வெற்றி;க்கு யாரும் உரிமை கோர முடியாது. கரந்தடித் தாக்குதல்களாக ஆரம்பித்த ஈழ விடுதலைப் போராட்டம் பெரும்தளங்களை தாக்கி அழிக்கின்ற பெரும் சமர்களாக பரிமாண வளர்ச்சி பெற்ற பின்னர், எந்த ஒரு சமரின் வெற்றிக்கும் யாரும் உரிமை கோர முடியாது. விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு தான்தான் காரணம் என்று ஒரு தளபதி சொன்னால், அவருக்கு புத்தி பேதலித்து விட்டது என்றுதான் அர்த்தம்.
ஆனால் கருணாவும், அவரை சார்ந்தவர்களும் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு கருணாவே காரணம் என்று உளறுகிறார்கள். தென்தமிழீழத்தை சேர்ந்த போராளிகளின் வீரத்திலும் தியாகத்திலும் இவர்கள் குளிர் காய முனைகின்றார்கள்.
கருணாவின் இராணுவ வல்லமை என்பது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. காட்டுச் சண்டைகளில் நீண்ட கால தற்காப்புச் சண்டைகளை செய்யக் கூடிய அனுபவம் கொண்ட கருணா ஒரு பெரும் இராணுவத் தளத்தின் மீதான வலிந்து தாக்குதலின் யுக்திகளை சரியாக அறிந்தவர் அல்ல. கிழக்கில் வவுணதீவு போன்ற இராணுவ முகாம்கள் மீதான கருணாவின் திட்டமிடலுடன் கூடிய தாக்குதல்கள் விடுதலைப்புலிகள் தரப்பில் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தின. சரியான திட்டமிடல் இன்றி கிழக்கின் போராளிகளை பல முறை அநியாயமாக பலி கொடுத்தவர்தான் கருணா. பெரும் தளங்கள் மீதான வலிந்த சமர்களில் விடுதலைப்புலிகளின் பல தளபதிகளை விட மிகக் குறைந்த அனுபவம் கொண்டவர் கருணா. கருணாவிற்கு அடத்த இடத்தில் இருந்த கேணல் ரமேஸ் கருணாவை விரட்டியடித்த தாக்குதலை வழி நடத்தியதை நினைத்துப் பார்க்க வேண்டும். தனக்கு நன்கு பரிச்சயாமான பாதுகாப்பான ஒரு பிரதேசத்தில் போரிட முடியாமல் தப்பி ஓடியவர் கருணா. முக்கியமாக இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். விடுதலைப்புலிகளுடன் இருந்த காலத்தில் கருணாவின் தலைமையில் நடந்த சண்டைகளை கவனித்தால் ஒன்று விளங்கும். நகர்புறங்களில் படை நடத்திய அனுபவம் கருணாவிற்கு கிடையாது. அதற்கான திறனும் கருணாவிடம் இல்லை.
ஆனால் வரவிருக்கும் ஈழப் போர் 4 நகர்ப்புறங்களிலேயே நடைபெறும். வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி பெரும்பாலான காட்டுப் பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. கிழக்கைப் பொறுத்தவரை திருகோணமலை நகரமும் மட்டக்களப்பு நகரமும் விடுதலைப்புலிகளின் முக்கிய இலக்குகளாக இருக்கும். இவைகளை கருத்தில் கொண்டே நகர்ப்புற சண்டைகளில் மிகவும் அனுபவம் கொண்ட கேணல் பானு கிழக்கின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என நம்பலாம். அதாவது இனி வரப் போகும் சண்டைகளில் கருணாவின் விலகல் சிறிய அளவு கூட தாக்கத்தினைக் ஏற்படுத்தாது என துணிந்து கூறலாம்.
இனி விடுதலைப்புலிகள் மரபு வழிச் சண்டையில் உச்ச திறனை வெளிப்படுத்திய ஓயாத அலைகள் 3 பற்றி பார்ப்போம். சிறிலங்கா அரசு 18 மாதங்கள் சண்டை செய்து பிடித்த இடங்களை 3 நாட்களில் விடுவித்த அற்புதம் அது. அப்படியே தமிழர் தாயகத்தின் தொண்டையில் முள்ளாக இருந்த ஆனையிறவையும் கைப்பற்றிய பெரும் சமர் அது.
ஓயாத அலைகள் 3 நடவடிக்கையானது பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகளின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் பற்றி மட்டுமே தளபதிகளுக்கு தெரிந்திருந்தது. ஒட்டிசுட்டானில் தொடங்கிய சண்டைகள் ஆனையிறவில் தான் முடியும் என்று எந்த தளபதியும் அறிந்திருக்கவில்லை.
இவ்வளவையும் விடுங்கள். விடுதலைப்புலிகளுக்கு மரபுவழிச் சண்டைகளை கற்றுக் கொடுத்த கர்த்தாவாக தன்னைக் காட்டிக் கொள்ளும் கருணாவுக்கு ஓயாத அலைகள் 3 ஆரம்பித்த விடயமே தெரியாது.
(தொடரும்)
-வி.சபேசன்
(இக் கட்டுரைக்கு சில தகவல்களை தந்து உதவிய தமிழீழத்தில் வாழும் பெயர் குறிப்பிட முடியாத நண்பர்களுக்கு நன்றி)
நன்றி
-வி.சபேசன்
[b]

