03-29-2006, 03:56 PM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! (பாகம் 1)</span>
கருணாவின் துரோகம் அரங்கேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார். கருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெனீவா பேச்சுவார்த்தைகளை அடுத்து கருணா குழுவின் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு ஓரளவாவது கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசம் அடைந்திருக்கிறது. கருணா குழு தற்பொழுது வெளிப்படையாக தென்தமிழீழத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் முகாம்களை திறந்து வருகின்றது. சிறுவர்களையும் இளைஞர்களையும் பலவந்தமாக படையில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. கொலைகளையும் செய்து வருகின்றது. ஆனால் சிறிலங்காவின் அமைச்சர்களும், இராணுவத் தளபதிகளும் கருணா குழுவிற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லையென்றும், கருணா குழு சுதந்திரமாக இயங்குகிறது என்றும் கூறி வருகின்றார்கள்.
அண்மைக் காலங்களில் கருணா குறித்த மாயைகள் சிறிலங்கா அரசாலும் தமிழினத் துரோகிகளாலும் சிறிது அதிகமாகவே பரப்பப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமானது கருணாவின் இராணுவ ஆற்றல் குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் மாயை. கருணாவே முன்பு விடுதலைப்புலிகளின் வெற்றிகள் அனைத்துக்கும் காரணமாக இருந்ததாகவும், கருணா இல்லாத காரணத்தால் விடுதலைப்புலிகளால் இனி போர் புரிய முடியாது என்றும் இந்த மாயை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை துரோகக்குழுக்களுக்கு துணை போகின்றவர்கள் நம்பவும் வேறு செய்கின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களில் ஒரு சிலரிடம் கூட கருணா குறித்த அச்சம் இருக்கிறது. ஆனால் கருணாதான் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு காரணம் என்று நம்புபவர்கள் இராணுவரீதியான அறிவோ, ஆய்வு செய்யும் திறனோ இம்மியளவும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.
ஒரு போர் நடக்கின்ற பொழுது, இயல்பாகவே தளபதிகள் மீது மக்களின் கவனம் திரும்பும். அந்த தளபதிகளைப் பற்றிய பல வீரசாகசக் கதைகள் உலாவும். இது உலகம் முழுவதும் நடக்கக்கூடிய ஒரு சாதரண நிகழ்வு. தமிழர் வரலாற்றிலும் தளபதிகளுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு. சங்க கால பாடல்களில் கூட பல தளபதிகள் போற்றிப் புகழப்பட்டிருக்கின்றார்கள். இதே போன்று ஈழப் போரிலும் பல தளபதிகள் தங்களின் வீரமும் அறிவும் மிகுந்த செயற்பாடுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார்கள்.
இந்திய ஈழப் போரை தவிர்த்து, ஈழப் போர் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஈழப் போர் 1 இல் மக்களால் அதிகம் சிலாகிக்கப்பட்டவர் தளபதி கிட்டு. அதே போன்று ஈழப் போர் 2இல் நடந்த பல சமர்களிற்கு தளபதியாக இருந்தவர் கேணல் பால்ராஜ். தளபதி கிட்டுவின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் எப்படி யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோ, அதே போன்று தளபதி பால்ராஜின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் வன்னி மண்ணை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
பல போரியல் சாதனைகளைப் படைத்த ஈழப் போர் 1இலும் சரி, ஈழப்போர் 2இலும் சரி, கருணா என்னும் பெயர் பெரிதாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. இடையில் தென்தமிழீழத்தில் நடந்த இந்திய இராணுவத்தின் துணைப்படைகளான தமிழ் தேசிய இராணுவத்திற்கு எதிரான சண்டைகளும், அப்போதைய தளபதியாக இருந்த கரிகாலன் தலைமையில் நடந்ததாகவே அறியப்படுகின்றது. அன்றைய ஊடகங்களிலும் கருணாவின் பெயரைக் காண முடியவில்லை. ஈழப் போர் 3இன் ஆரம்பங்களில் நடந்த சமர்களில் கருணாவின் பங்கு மிகச் சிறுதளவிலேயே இருந்தது. ஆனால் ஈழப் போர் 3இல் நடந்த சமர்களில் மிக நீண்ட சமராகிய ஜெயசிக்குறுவின் முறியடிப்புச் சமருக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்ட பிறகே, கருணா பிரபல்யம் அடையத் தொடங்கினார். அதன் பிறகு ரணில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஒருவராக கருணா இடம்பெற்றவுடன் அனைத்து தமிழர்களும் அறிந்த ஒரு மனிதனாக மாறி விட்டார். இவைகளினால் ஈழப்போர் 3 இன் தளபதி கருணாவே என்கின்ற மாயையும் உருவாகி விட்டது.
ஈழப் போர் 3 இல் கருணா கட்டளைத் தளபதியாக செயற்பட்டதாக கூறப்படும் மிக முக்கிய சமர்களாக ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3 ஆகியவை கருதப்படுகின்றன. ஆனால் கருணாவும், கருணாவைச் சார்ந்தவர்களும் ஜெயசிக்குறுவைப் பற்றி மட்டுமே வாய் கிழியப் பேசுவார்கள். ஓயாத அலைகள் 2 மற்றும் 3 பற்றி வாய் திறப்பதில்லை. இந்த இரண்டு சமர்களின் வெற்றிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது கருணாவிற்கு தெரியும்.
ஆனால் இவர்கள் ஜெயசிக்குறு சமரைப் பற்றி பேசுகின்ற விடயங்களிலாவது உண்மை இருக்கின்றதா என்றால், அதிலும் இல்லை என்பதுதான் பதில். அண்மைக் காலமாக இன எதிரிகள் சிலரால் ஒரு புதிய கதை பரப்பப்பட்டு வருகிறது. தேசியத் தலைவர் ஜெயசிக்குறுவை எதிர் கொள்ளாது, சிறிலங்கா இராணுவத்தை உள் நுளைய அனுமதிக்கும் திட்டத்தில் இருந்தார் என்றும், ஆனால் கருணா பொறுப்பை தன்னிடம் விடும்படியும், தான் ஜெயசிக்குறுவை முறியடித்துக் காட்டுவேன் என்று அடம்பிடித்து கூறி அவ்வாறு செய்தும் காட்டினார் என்று கதை பரப்பி வருகிறார்கள். இதை ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், தலைவர் அவர்கள் உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு, உள்நுளைய விட்டு பின் தாக்குகின்ற திட்டத்தை போட, கருணாவோ கிழக்கு மாகாண போராளிகளை பலி கொடுக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை போட்டதாக அல்லவா அர்த்தம் வரகின்றது. இராணுவத்தை வன்னியை விட்டு விரட்டியடித்த ஓயாத அலைகள் 3ஐ விட ஜெயசிக்குறு சண்டையில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே தன்னுடைய புகழுக்காக கிழக்கு மாகாண போராளிகளை கருணா பலி கொடுத்ததாகவே இவர்களின் இந்த புதிய கதை அர்த்தம் கற்பிக்கின்றது. ஆனால் உண்மையில் ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கு பொறுப்பாக ஆரம்பத்தில் கருணா நியமிக்கப்படவில்லை. கிட்டு பீரங்கிப் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் பானுவே பொறுப்பாக இருந்தார்.
ஜெயசிக்குறு ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து தாண்டிக்குளத்தில் இருந்த வழங்கல் முகாம் மீது "செய் அல்லது செத்துமடி 1 " என்னும் பெயரில் ஒரு ஊடறுப்புத் தாக்குதல் நடைபெற்றது. ஜெயந்தன் படையணி முக்கிய பங்காற்றிய இந்தச் சண்டை கருணாவின் தலைமையில் நடந்தது. இந்தச் சண்டை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கான கட்டளைத் தளபதியாக கருணா நியமிக்கப்பட்டார். காடுகளில் சண்டை செய்யக் கூடிய வல்லமை படைத்த ஜெயந்தன் படையணி ஜெயசிக்குறு சண்டைகளில் முக்கிய பங்கினை வகிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நியமனம் இடம் பெற்றது.
உண்மையில் ஜெயசிக்குறுவில் ஜெயந்தன் படையணி நிகழ்த்திய சாதனைகள் மயிர் சிலிர்க்க வைப்பவை. ஜெயந்தன் படையணியோடு விடுதலைப்புலிகளின் மற்றைய படையணிகளும் இணைந்து சிறிலங்கா படைகளின் நகர்வை தடுத்துபடி இருந்தன. ஆயினும் பலத்த சேதங்களிற்கு மத்தியிலும் சிறிலங்கா படைகளால் மெதுமெதுவாக மாங்குளம் வரை நகர முடிந்தது.
விடுதலைப்புலிகள் தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. போர் நீண்டு கொண்டு போவது விடுதலைப்புலிகளுக்கும் பாதகமாக முடியலாம். ஆகவே ஜெயசிக்குறுவை உடனடியாக நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக நடத்தப்பட்டதே ஓயாத அலைகள் 2. ஜெயசிக்குறு படையினர் சென்றடைய திட்டமிட்டிருந்த கிளிநோச்சி இராணுவத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இந்த ஓயாத அலைகள் 2 ஜெயசிக்குறுவை நிறுத்தியது.
ஜெயசிக்குறுவை நிறுத்திய ஓயாத அலைகள் 2 இல் கருணாவின் பங்கு என்ன?
தொடரும்
-வி.சபேசன்
(இக் கட்டுரைக்கு சில தகவல்களை தந்து உதவிய தமிழீழத்தில் வாழும் பெயர் குறிப்பிட முடியாத நண்பர்களுக்கு நன்றி)
கருணாவின் துரோகம் அரங்கேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார். கருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெனீவா பேச்சுவார்த்தைகளை அடுத்து கருணா குழுவின் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு ஓரளவாவது கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசம் அடைந்திருக்கிறது. கருணா குழு தற்பொழுது வெளிப்படையாக தென்தமிழீழத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் முகாம்களை திறந்து வருகின்றது. சிறுவர்களையும் இளைஞர்களையும் பலவந்தமாக படையில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. கொலைகளையும் செய்து வருகின்றது. ஆனால் சிறிலங்காவின் அமைச்சர்களும், இராணுவத் தளபதிகளும் கருணா குழுவிற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லையென்றும், கருணா குழு சுதந்திரமாக இயங்குகிறது என்றும் கூறி வருகின்றார்கள்.
அண்மைக் காலங்களில் கருணா குறித்த மாயைகள் சிறிலங்கா அரசாலும் தமிழினத் துரோகிகளாலும் சிறிது அதிகமாகவே பரப்பப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமானது கருணாவின் இராணுவ ஆற்றல் குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் மாயை. கருணாவே முன்பு விடுதலைப்புலிகளின் வெற்றிகள் அனைத்துக்கும் காரணமாக இருந்ததாகவும், கருணா இல்லாத காரணத்தால் விடுதலைப்புலிகளால் இனி போர் புரிய முடியாது என்றும் இந்த மாயை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை துரோகக்குழுக்களுக்கு துணை போகின்றவர்கள் நம்பவும் வேறு செய்கின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களில் ஒரு சிலரிடம் கூட கருணா குறித்த அச்சம் இருக்கிறது. ஆனால் கருணாதான் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு காரணம் என்று நம்புபவர்கள் இராணுவரீதியான அறிவோ, ஆய்வு செய்யும் திறனோ இம்மியளவும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.
ஒரு போர் நடக்கின்ற பொழுது, இயல்பாகவே தளபதிகள் மீது மக்களின் கவனம் திரும்பும். அந்த தளபதிகளைப் பற்றிய பல வீரசாகசக் கதைகள் உலாவும். இது உலகம் முழுவதும் நடக்கக்கூடிய ஒரு சாதரண நிகழ்வு. தமிழர் வரலாற்றிலும் தளபதிகளுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு. சங்க கால பாடல்களில் கூட பல தளபதிகள் போற்றிப் புகழப்பட்டிருக்கின்றார்கள். இதே போன்று ஈழப் போரிலும் பல தளபதிகள் தங்களின் வீரமும் அறிவும் மிகுந்த செயற்பாடுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார்கள்.
இந்திய ஈழப் போரை தவிர்த்து, ஈழப் போர் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஈழப் போர் 1 இல் மக்களால் அதிகம் சிலாகிக்கப்பட்டவர் தளபதி கிட்டு. அதே போன்று ஈழப் போர் 2இல் நடந்த பல சமர்களிற்கு தளபதியாக இருந்தவர் கேணல் பால்ராஜ். தளபதி கிட்டுவின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் எப்படி யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோ, அதே போன்று தளபதி பால்ராஜின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் வன்னி மண்ணை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
பல போரியல் சாதனைகளைப் படைத்த ஈழப் போர் 1இலும் சரி, ஈழப்போர் 2இலும் சரி, கருணா என்னும் பெயர் பெரிதாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. இடையில் தென்தமிழீழத்தில் நடந்த இந்திய இராணுவத்தின் துணைப்படைகளான தமிழ் தேசிய இராணுவத்திற்கு எதிரான சண்டைகளும், அப்போதைய தளபதியாக இருந்த கரிகாலன் தலைமையில் நடந்ததாகவே அறியப்படுகின்றது. அன்றைய ஊடகங்களிலும் கருணாவின் பெயரைக் காண முடியவில்லை. ஈழப் போர் 3இன் ஆரம்பங்களில் நடந்த சமர்களில் கருணாவின் பங்கு மிகச் சிறுதளவிலேயே இருந்தது. ஆனால் ஈழப் போர் 3இல் நடந்த சமர்களில் மிக நீண்ட சமராகிய ஜெயசிக்குறுவின் முறியடிப்புச் சமருக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்ட பிறகே, கருணா பிரபல்யம் அடையத் தொடங்கினார். அதன் பிறகு ரணில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஒருவராக கருணா இடம்பெற்றவுடன் அனைத்து தமிழர்களும் அறிந்த ஒரு மனிதனாக மாறி விட்டார். இவைகளினால் ஈழப்போர் 3 இன் தளபதி கருணாவே என்கின்ற மாயையும் உருவாகி விட்டது.
ஈழப் போர் 3 இல் கருணா கட்டளைத் தளபதியாக செயற்பட்டதாக கூறப்படும் மிக முக்கிய சமர்களாக ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3 ஆகியவை கருதப்படுகின்றன. ஆனால் கருணாவும், கருணாவைச் சார்ந்தவர்களும் ஜெயசிக்குறுவைப் பற்றி மட்டுமே வாய் கிழியப் பேசுவார்கள். ஓயாத அலைகள் 2 மற்றும் 3 பற்றி வாய் திறப்பதில்லை. இந்த இரண்டு சமர்களின் வெற்றிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது கருணாவிற்கு தெரியும்.
ஆனால் இவர்கள் ஜெயசிக்குறு சமரைப் பற்றி பேசுகின்ற விடயங்களிலாவது உண்மை இருக்கின்றதா என்றால், அதிலும் இல்லை என்பதுதான் பதில். அண்மைக் காலமாக இன எதிரிகள் சிலரால் ஒரு புதிய கதை பரப்பப்பட்டு வருகிறது. தேசியத் தலைவர் ஜெயசிக்குறுவை எதிர் கொள்ளாது, சிறிலங்கா இராணுவத்தை உள் நுளைய அனுமதிக்கும் திட்டத்தில் இருந்தார் என்றும், ஆனால் கருணா பொறுப்பை தன்னிடம் விடும்படியும், தான் ஜெயசிக்குறுவை முறியடித்துக் காட்டுவேன் என்று அடம்பிடித்து கூறி அவ்வாறு செய்தும் காட்டினார் என்று கதை பரப்பி வருகிறார்கள். இதை ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், தலைவர் அவர்கள் உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு, உள்நுளைய விட்டு பின் தாக்குகின்ற திட்டத்தை போட, கருணாவோ கிழக்கு மாகாண போராளிகளை பலி கொடுக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை போட்டதாக அல்லவா அர்த்தம் வரகின்றது. இராணுவத்தை வன்னியை விட்டு விரட்டியடித்த ஓயாத அலைகள் 3ஐ விட ஜெயசிக்குறு சண்டையில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே தன்னுடைய புகழுக்காக கிழக்கு மாகாண போராளிகளை கருணா பலி கொடுத்ததாகவே இவர்களின் இந்த புதிய கதை அர்த்தம் கற்பிக்கின்றது. ஆனால் உண்மையில் ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கு பொறுப்பாக ஆரம்பத்தில் கருணா நியமிக்கப்படவில்லை. கிட்டு பீரங்கிப் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் பானுவே பொறுப்பாக இருந்தார்.
ஜெயசிக்குறு ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து தாண்டிக்குளத்தில் இருந்த வழங்கல் முகாம் மீது "செய் அல்லது செத்துமடி 1 " என்னும் பெயரில் ஒரு ஊடறுப்புத் தாக்குதல் நடைபெற்றது. ஜெயந்தன் படையணி முக்கிய பங்காற்றிய இந்தச் சண்டை கருணாவின் தலைமையில் நடந்தது. இந்தச் சண்டை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கான கட்டளைத் தளபதியாக கருணா நியமிக்கப்பட்டார். காடுகளில் சண்டை செய்யக் கூடிய வல்லமை படைத்த ஜெயந்தன் படையணி ஜெயசிக்குறு சண்டைகளில் முக்கிய பங்கினை வகிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நியமனம் இடம் பெற்றது.
உண்மையில் ஜெயசிக்குறுவில் ஜெயந்தன் படையணி நிகழ்த்திய சாதனைகள் மயிர் சிலிர்க்க வைப்பவை. ஜெயந்தன் படையணியோடு விடுதலைப்புலிகளின் மற்றைய படையணிகளும் இணைந்து சிறிலங்கா படைகளின் நகர்வை தடுத்துபடி இருந்தன. ஆயினும் பலத்த சேதங்களிற்கு மத்தியிலும் சிறிலங்கா படைகளால் மெதுமெதுவாக மாங்குளம் வரை நகர முடிந்தது.
விடுதலைப்புலிகள் தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. போர் நீண்டு கொண்டு போவது விடுதலைப்புலிகளுக்கும் பாதகமாக முடியலாம். ஆகவே ஜெயசிக்குறுவை உடனடியாக நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக நடத்தப்பட்டதே ஓயாத அலைகள் 2. ஜெயசிக்குறு படையினர் சென்றடைய திட்டமிட்டிருந்த கிளிநோச்சி இராணுவத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இந்த ஓயாத அலைகள் 2 ஜெயசிக்குறுவை நிறுத்தியது.
ஜெயசிக்குறுவை நிறுத்திய ஓயாத அலைகள் 2 இல் கருணாவின் பங்கு என்ன?
தொடரும்
-வி.சபேசன்
(இக் கட்டுரைக்கு சில தகவல்களை தந்து உதவிய தமிழீழத்தில் வாழும் பெயர் குறிப்பிட முடியாத நண்பர்களுக்கு நன்றி)
[b]

