03-28-2006, 09:54 PM
பேராசிரியர் கூலும் சைவசமயமும் படும்பாடு. - க.குழந்தைவேல்
Tuesday, 28 March 2006
--------------------------------------------------------------------------------
அண்மைக் காலங்களில் பேராசிரியரைப் பற்றி வெளிவந்த கண்டன அறிக்கைகள், வாதிப் பிரதி வாதங்கள் சுவையாக இருந்தன. பேராசிரியர் அவர்கள் தன்மேல் சுமத்தப்பட்ட நான்கு குற்றச் சாட்டுகளுக்குத் தெரிவித்த மறுப்பும் விளக்கமும் ஆழமாக இருந்தன!
பல வருடங்களுக்கு முன்னர் நான் வெளிநாடொன்றில் ஒரு நண்பனுடைய வீட்டுக்குச் சென்றிருந்த போது, பேராசிரியர் எழுதிய ‘Exile Returned’ ன’ புத்தகம் கைக்குக் கிடைத்தது. ஒரு தமிழர், யாழ்ப்பாணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்ற ஆவலில் அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன்.
புத்தகத்தை எழுதியவர் யார் என்று அந்தநேரம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒரு ஊகத்துக்கு வந்தேன். ஒன்றில், எழுதியவர் மேற்கத்தேய ஏகாதிபத்தைத் திருப்திப்படுத்த சைவத்தை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்திருக்கலாம்-தமிழரையும் இழிமைப்படுத்தியிருக்கலாம். அல்லது எழுதியவர் ஒரு sex pervert (பாலியல் பிறழ்வுகள் நிறைந்த ஒருவர்) ஆக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். சைவத்தை, சைவம் காட்டிய தியான, யோக, பரதக்கலைகளையும், வைத்தியத்தில் விஞ்ஞானத்தில் எமது முன்னோருக்கிருந்த ஞானத்தையும் மேற்கத்தேய உலகம் வியந்து அரவணைத்து அறிய முன்வர, ஒரு தமிழர் சைவத்தையும் அதன் பாரம்பரியத்தையும்; கொச்சைப்படுத்தி எழுதியதை எவ்வகையில் நியாயப்படுத்தமுடியும்?
யாழ்ப்பாணத்தில் நடந்ததாக அவர் கூறும் எல்லாவிதமான பாலியல் கூத்துகளும். சில்மிஷங்களும், உபநிஷதங்கள், புராணங்கள் என்பவற்றில் அவர் தேடி எடுத்து அலசும் விஷயங்களும், சொல்லும் விதமும், பழையநாளைய மஞ்சள் புத்தகத்தை அல்லது இன்றைய போனோகிராபிக் புத்தகங்களை வாசிப்பதைப் போன்ற எண்ணத்தைத்தான் மேலோங்கவைக்கின்றன. சமூகத்தைப்பற்றி, பாலியலைப்பற்றி இருப்பதாகச் சொல்லப்படுகின்ற அவ்வளவு பிறழ்வுகளையும் கோணங்கித்தனங்களையும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகக்காட்ட முயற்சிப்பதுதான் கவலைக்குரியது. உதாரணத்துக்கு, ஒன்று இரண்டுடன் முடித்திருக்கலாம். ஆனால் புத்தகம் எழுதியதன் முழு நோக்கமுமே இதற்காகத்தான் என்பது போன்ற எண்ணம்தான் வாசித்தபோது ஏற்பட்டது. யுhழ்ப்பாணத் தமிழ் கலாசாரத்திலுள்ள, எண்ணற்ற அழகான, காத்திரமான, மெச்சப்படவேண்டிய வழக்குகள், சட்டதிட்டங்கள், எண்ணக் கருத்துகள் என்பன சொல்லப்படாமல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன! ஆல்லது அதுதான் நோக்கமாக இருந்திருக்குமா என்ற சந்தேகத்தையும் விதைக்கின்றன.
கிறீஸ்தவ, சைவசமயப் போலிகளை உள்ளடக்கிய, எமது மத, கலாச்சார ரீதிகளில் நடக்கின்ற போலிகளை ஆராய்ச்சி செய்ததாக பேராசிரியர் விளக்கம் கொடுத்தாலும்கூடப் புத்தகத்தை வாசிக்கும் போது அவருடைய நோக்கம் என்ன என்பது கூறாமல் தெரியும்.
அவர், தன்னுடைய சமய முறைகளை இறுகப் பேணுவதால், பொட்டு இடுவதில்லை. சேவல்விளக்கு ஏற்றுவதில்லை. மாலை இடுவதில்லை என்று தன்னுடைய நடைமுறைக் கொள்டகைகளுக்கு விளக்கம் தருகிறார். மிகவும் நல்லது. ஒரு மதத்தில் இப்படிச் செய்ய வேணடும் என்று சொல்வதைப் போலி என்று வாதிட்டுக்கொண்டு, தனது மதத்தில் சொல்லப்படுவதாக அவர் கூறும் விடயங்களை மெய் என்று வாதிடுவது எந்தத் தர்க்க நியதிக்குள் அடங்கும் என்பது doctor of science பேராசிரியருக்குத்தான் வெளிச்சம்! பொட்டு வைப்பதும் விளக்கு ஏற்றுவதும் போலி என்றால் பொட்டு வைக்கக்கூடாது, விளக்கு ஏற்றக்கூடாது என்று அர்த்தமற்ற கொள்கை வைத்துப் போராடுவதும் அதே போலிதான். அர்த்தமில்லாத அடிதடி. ஒருமதப்பிரிவினர் செய்வதை தனது மதப் பிரிவினர் செய்யக்கூடாது என்று வற்புறுத்துவதாக, அதை ஒரு பெரிய issue வாக்கிக் கட்சி பிரித்துக் குடுமிபிடிச்சண்டைகளை உருவாக்கிப் பிளவுகளை ஏற்படுத்தல், நாட்டுக்கோ, தமிழனுக்கோ எந்த நல்லதையும் செய்யப்போவதில்லை, மாறாக வேண்டத்தகாத விளைவுகளை உருவாக்கி எல்லாவற்றையும் குட்டிச்சுவராக்கிவிடும் என்பது பேராசிரியருக்கு விளங்காத ஒன்றா?
சமய அனுட்டானங்களை, விதிழுறைகளை ழுற்றுமாக விஞ்ஞான அறிவைக்கொண்டு ஆராய வெளிக்கிடக் கூடாது. அத்திவாரமே ஆட்டம் கண்டு விடும். சமயம் விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டது என்றுவைத்துக்கொள்வதாயின், அவரவர் சமயத்தை, அவரவர், அவரவரால் கொள்ளக்கூடிய அளவு கொள்ளட்டும். இதில் குடுமிபிடிச் சண்டை வரவேண்டிய தேவையில்லை.
மத, கலாச்சார ரீதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்த (இருக்கின்ற?) போலிகளை ஆராயவெளிக்கிட்ட பேராசிரியர், அன்று தொடக்கம் இன்று வரை இருக்கும் மூன்றாவது மதத்தைத் தொடாமல் விட்டுவிட்டுவிட்டாரே? ஈரானிலிருந்த அயத்தொல்லா, லண்டனிலிருந்த சல்மான் ருஷ்டியின் தலைக்கு விலை வைத்தமாதிரியல்லோ ஆகியிருக்கும்! ஆல்லது டென்மார்க்கின் பத்திரிகையில் ஒரு காட்டூன் வந்ததற்காக உலகம் முழுவதும் போராட்டமும், டெனிஷ் தூதரகத்தை எரித்து ஆர்ப்பாட்டம் செய்த மாதிரியுமல்லோ போயிருக்கும்! சைவத்தின் போற்றப்படவேண்டிய கொள்கைகள் தான் பேராசிரியர் இன்று துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட வழிவிட்டிருக்கின்றன!
ஆனாலும் அதிலும் கூட ஒரு குழப்பம். சேவல் குத்து விளக்கும் வேண்டாம். மாலையும் வேண்டாம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசல் தூண்களின் மேல் இரு நந்திகள் நின்கின்றனவே? அதை இடித்து விட்டு உள்ளே போனால் நந்திக்கொடி வேறு காத்துக் கொண்டிருக்கிறதே? அதனையும் ஒரு ‘வழி’ பண்ணி விட்டுச் சென்றால் அடுத்து, நந்தியில் வீற்றிருக்கின்ற சாஷ்;சாத் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கின்றாரே? Useless Asian Values….. ….. Only Barbarism! திருநெல்வேலியின் land value தெரியாமல் இப்படி ஒரு wastageஆ? கோயிலை இடித்துத்தள்ளிவிட்டு அந்த இடத்தில் பொறியியல் பீடத்துக்கு ஒரு Research Centre கட்டிவிடவேண்டும்! பல வருடங்களாக அண்டை அயல்களில் வசித்த, நண்பர்களாயிருந்த, சைவர்களுடைய கொள்கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிக்க முடியவில்லை……. தமிழர்களுக்கு நன்மை செய்வதற்காக-கொள்கைகளில் தெளிவும், பற்றுறுதியும், விட்டுக்கொடுப்புச் செய்யாத வைராக்கியமும் கொண்ட தமிழர் தலைமையான புலிகளோடு ஒத்துழைப்பது முடியிற காரியமா? கூரை ஏறிக் கோழி பிடிக்க வழியில்லை@ வானம் ஏறி வைகுண்டம் போற நினைப்பு!
இதய சுத்தியோடு செய்யப்படுகிற பிரார்த்தனைகளுக்கும், ஜெபங்களுக்கும்தான் ஆண்டவர் அனுக்கிரகம் பண்ணியதாக கதைகளுண்டு!
http://www.sooriyan.com/index.php?option=c...id=3025&Itemid=
Tuesday, 28 March 2006
--------------------------------------------------------------------------------
அண்மைக் காலங்களில் பேராசிரியரைப் பற்றி வெளிவந்த கண்டன அறிக்கைகள், வாதிப் பிரதி வாதங்கள் சுவையாக இருந்தன. பேராசிரியர் அவர்கள் தன்மேல் சுமத்தப்பட்ட நான்கு குற்றச் சாட்டுகளுக்குத் தெரிவித்த மறுப்பும் விளக்கமும் ஆழமாக இருந்தன!
பல வருடங்களுக்கு முன்னர் நான் வெளிநாடொன்றில் ஒரு நண்பனுடைய வீட்டுக்குச் சென்றிருந்த போது, பேராசிரியர் எழுதிய ‘Exile Returned’ ன’ புத்தகம் கைக்குக் கிடைத்தது. ஒரு தமிழர், யாழ்ப்பாணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்ற ஆவலில் அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன்.
புத்தகத்தை எழுதியவர் யார் என்று அந்தநேரம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒரு ஊகத்துக்கு வந்தேன். ஒன்றில், எழுதியவர் மேற்கத்தேய ஏகாதிபத்தைத் திருப்திப்படுத்த சைவத்தை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்திருக்கலாம்-தமிழரையும் இழிமைப்படுத்தியிருக்கலாம். அல்லது எழுதியவர் ஒரு sex pervert (பாலியல் பிறழ்வுகள் நிறைந்த ஒருவர்) ஆக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். சைவத்தை, சைவம் காட்டிய தியான, யோக, பரதக்கலைகளையும், வைத்தியத்தில் விஞ்ஞானத்தில் எமது முன்னோருக்கிருந்த ஞானத்தையும் மேற்கத்தேய உலகம் வியந்து அரவணைத்து அறிய முன்வர, ஒரு தமிழர் சைவத்தையும் அதன் பாரம்பரியத்தையும்; கொச்சைப்படுத்தி எழுதியதை எவ்வகையில் நியாயப்படுத்தமுடியும்?
யாழ்ப்பாணத்தில் நடந்ததாக அவர் கூறும் எல்லாவிதமான பாலியல் கூத்துகளும். சில்மிஷங்களும், உபநிஷதங்கள், புராணங்கள் என்பவற்றில் அவர் தேடி எடுத்து அலசும் விஷயங்களும், சொல்லும் விதமும், பழையநாளைய மஞ்சள் புத்தகத்தை அல்லது இன்றைய போனோகிராபிக் புத்தகங்களை வாசிப்பதைப் போன்ற எண்ணத்தைத்தான் மேலோங்கவைக்கின்றன. சமூகத்தைப்பற்றி, பாலியலைப்பற்றி இருப்பதாகச் சொல்லப்படுகின்ற அவ்வளவு பிறழ்வுகளையும் கோணங்கித்தனங்களையும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகக்காட்ட முயற்சிப்பதுதான் கவலைக்குரியது. உதாரணத்துக்கு, ஒன்று இரண்டுடன் முடித்திருக்கலாம். ஆனால் புத்தகம் எழுதியதன் முழு நோக்கமுமே இதற்காகத்தான் என்பது போன்ற எண்ணம்தான் வாசித்தபோது ஏற்பட்டது. யுhழ்ப்பாணத் தமிழ் கலாசாரத்திலுள்ள, எண்ணற்ற அழகான, காத்திரமான, மெச்சப்படவேண்டிய வழக்குகள், சட்டதிட்டங்கள், எண்ணக் கருத்துகள் என்பன சொல்லப்படாமல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன! ஆல்லது அதுதான் நோக்கமாக இருந்திருக்குமா என்ற சந்தேகத்தையும் விதைக்கின்றன.
கிறீஸ்தவ, சைவசமயப் போலிகளை உள்ளடக்கிய, எமது மத, கலாச்சார ரீதிகளில் நடக்கின்ற போலிகளை ஆராய்ச்சி செய்ததாக பேராசிரியர் விளக்கம் கொடுத்தாலும்கூடப் புத்தகத்தை வாசிக்கும் போது அவருடைய நோக்கம் என்ன என்பது கூறாமல் தெரியும்.
அவர், தன்னுடைய சமய முறைகளை இறுகப் பேணுவதால், பொட்டு இடுவதில்லை. சேவல்விளக்கு ஏற்றுவதில்லை. மாலை இடுவதில்லை என்று தன்னுடைய நடைமுறைக் கொள்டகைகளுக்கு விளக்கம் தருகிறார். மிகவும் நல்லது. ஒரு மதத்தில் இப்படிச் செய்ய வேணடும் என்று சொல்வதைப் போலி என்று வாதிட்டுக்கொண்டு, தனது மதத்தில் சொல்லப்படுவதாக அவர் கூறும் விடயங்களை மெய் என்று வாதிடுவது எந்தத் தர்க்க நியதிக்குள் அடங்கும் என்பது doctor of science பேராசிரியருக்குத்தான் வெளிச்சம்! பொட்டு வைப்பதும் விளக்கு ஏற்றுவதும் போலி என்றால் பொட்டு வைக்கக்கூடாது, விளக்கு ஏற்றக்கூடாது என்று அர்த்தமற்ற கொள்கை வைத்துப் போராடுவதும் அதே போலிதான். அர்த்தமில்லாத அடிதடி. ஒருமதப்பிரிவினர் செய்வதை தனது மதப் பிரிவினர் செய்யக்கூடாது என்று வற்புறுத்துவதாக, அதை ஒரு பெரிய issue வாக்கிக் கட்சி பிரித்துக் குடுமிபிடிச்சண்டைகளை உருவாக்கிப் பிளவுகளை ஏற்படுத்தல், நாட்டுக்கோ, தமிழனுக்கோ எந்த நல்லதையும் செய்யப்போவதில்லை, மாறாக வேண்டத்தகாத விளைவுகளை உருவாக்கி எல்லாவற்றையும் குட்டிச்சுவராக்கிவிடும் என்பது பேராசிரியருக்கு விளங்காத ஒன்றா?
சமய அனுட்டானங்களை, விதிழுறைகளை ழுற்றுமாக விஞ்ஞான அறிவைக்கொண்டு ஆராய வெளிக்கிடக் கூடாது. அத்திவாரமே ஆட்டம் கண்டு விடும். சமயம் விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டது என்றுவைத்துக்கொள்வதாயின், அவரவர் சமயத்தை, அவரவர், அவரவரால் கொள்ளக்கூடிய அளவு கொள்ளட்டும். இதில் குடுமிபிடிச் சண்டை வரவேண்டிய தேவையில்லை.
மத, கலாச்சார ரீதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்த (இருக்கின்ற?) போலிகளை ஆராயவெளிக்கிட்ட பேராசிரியர், அன்று தொடக்கம் இன்று வரை இருக்கும் மூன்றாவது மதத்தைத் தொடாமல் விட்டுவிட்டுவிட்டாரே? ஈரானிலிருந்த அயத்தொல்லா, லண்டனிலிருந்த சல்மான் ருஷ்டியின் தலைக்கு விலை வைத்தமாதிரியல்லோ ஆகியிருக்கும்! ஆல்லது டென்மார்க்கின் பத்திரிகையில் ஒரு காட்டூன் வந்ததற்காக உலகம் முழுவதும் போராட்டமும், டெனிஷ் தூதரகத்தை எரித்து ஆர்ப்பாட்டம் செய்த மாதிரியுமல்லோ போயிருக்கும்! சைவத்தின் போற்றப்படவேண்டிய கொள்கைகள் தான் பேராசிரியர் இன்று துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட வழிவிட்டிருக்கின்றன!
ஆனாலும் அதிலும் கூட ஒரு குழப்பம். சேவல் குத்து விளக்கும் வேண்டாம். மாலையும் வேண்டாம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசல் தூண்களின் மேல் இரு நந்திகள் நின்கின்றனவே? அதை இடித்து விட்டு உள்ளே போனால் நந்திக்கொடி வேறு காத்துக் கொண்டிருக்கிறதே? அதனையும் ஒரு ‘வழி’ பண்ணி விட்டுச் சென்றால் அடுத்து, நந்தியில் வீற்றிருக்கின்ற சாஷ்;சாத் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கின்றாரே? Useless Asian Values….. ….. Only Barbarism! திருநெல்வேலியின் land value தெரியாமல் இப்படி ஒரு wastageஆ? கோயிலை இடித்துத்தள்ளிவிட்டு அந்த இடத்தில் பொறியியல் பீடத்துக்கு ஒரு Research Centre கட்டிவிடவேண்டும்! பல வருடங்களாக அண்டை அயல்களில் வசித்த, நண்பர்களாயிருந்த, சைவர்களுடைய கொள்கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிக்க முடியவில்லை……. தமிழர்களுக்கு நன்மை செய்வதற்காக-கொள்கைகளில் தெளிவும், பற்றுறுதியும், விட்டுக்கொடுப்புச் செய்யாத வைராக்கியமும் கொண்ட தமிழர் தலைமையான புலிகளோடு ஒத்துழைப்பது முடியிற காரியமா? கூரை ஏறிக் கோழி பிடிக்க வழியில்லை@ வானம் ஏறி வைகுண்டம் போற நினைப்பு!
இதய சுத்தியோடு செய்யப்படுகிற பிரார்த்தனைகளுக்கும், ஜெபங்களுக்கும்தான் ஆண்டவர் அனுக்கிரகம் பண்ணியதாக கதைகளுண்டு!
http://www.sooriyan.com/index.php?option=c...id=3025&Itemid=

