Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கறுவல் நான்!!
#1
<b>முற்றத்து மல்லிகையே
முற்றத்து மல்லிகையே
நான் எங்கே என்று தேடினாயா?

வேலியோர மாதுளையே
நான் விரும்பி நீர் வார்த்த
குறோட்டன் செடியே
நான் இல்லையென்றே
நீ வாடினாயா?

கிணற்றடி துலாவே
கிணற்றடி துலாவே
உன் கழுத்தில் கயிறு மாட்டி
நாளும் இழுத்தவன்
காணலயே என்று தேடினாயா?

வேப்ப மரமே வேப்ப மரமே
உன் தோழ்வலிக்க ஊஞ்சலாடி
தொல்லை தந்தவன்
இப்போ எங்கேயென்று
எப்போதாவது எண்ணினாயா?

குயிலக்கா - குயிலக்கா
நீ ...............கூவ
மறைந்திருந்து நான் குரலெழுப்ப
உன் - உறவுதான் அதுவென்று எண்ணி
ஓயாமல் கூவினாயே

இந்த ஏமாற்றுகாரன்
எங்கே என்று எண்ணி
எபோதாவது ஏங்கினாயா?

கருங்குயிலென்று ஆனாலும்
சொந்த நாட்டிலிருந்தாய்
சுத்த வெள்ளை - நீ!

வெள்ளையர் நாட்டிலிருக்கிறேன்
வெள்ளையர் ஆட்சிசெய்ய
வாக்கும் செலுத்துறேன்
இருந்தும் -என்ன
என்றைக்கும் அவர்க்கு கறுவல் நான்!! 8) </b>[/b]
-!
!
Reply


Messages In This Thread
கறுவல் நான்!! - by வர்ணன் - 03-28-2006, 02:31 AM
[No subject] - by Rasikai - 03-28-2006, 02:34 AM
[No subject] - by Nitharsan - 03-28-2006, 03:28 AM
[No subject] - by sOliyAn - 03-28-2006, 05:05 AM
[No subject] - by Snegethy - 03-28-2006, 06:49 AM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 09:00 AM
[No subject] - by narathar - 03-28-2006, 09:40 AM
[No subject] - by RaMa - 03-29-2006, 06:30 AM
[No subject] - by sathiri - 03-29-2006, 07:57 AM
[No subject] - by Niththila - 03-29-2006, 01:57 PM
[No subject] - by வர்ணன் - 03-30-2006, 12:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)