03-27-2006, 11:59 PM
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக: மதுரை மாநாட்டில் தீர்மானம்
[திங்கட்கிழமை, 27 மார்ச் 2006, 10:49 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு மதுரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார். களப் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி வரவேற்று பேசினார்.
இம்மாநாட்டில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கலந்து கொண்டு தீர்மானங்களை வாசித்தார்.
தீர்மான விவரங்கள்:
- பாலஸ்தீனத்தின் விடுதலை போராட்டத்தை அங்கீகரிப்பது போல தமிழீழ விடுதலை போராட்டத்தையும் இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.
- இலங்கையில் தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்றுள்ள விடுதலை புலிகளின் மீதான தடையை இந்திய அரசு விலக்கி கொள்ள வேண்டும்.
- சிங்கள அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இராணுவ உதவிகளை வழங்க கூடாது.
- ஈழத்தமிழர் அகதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.
- தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள இடதுசாரி இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் மனித உரிமை அமைப்புகளும் தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் தமிழர் இயக்க பொது செயலாளர் தியாகு, உலகத் தமிழர் பேரமைப்பு பொது செயலாளர் பரந்தாமன், பெரியார் திராவிடக் கழகப் பொது செயலாளர்கள் கோவை ராமகிருட்டிணன், விடுதலை ராஜேந்திரன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.
-புதினம்
[திங்கட்கிழமை, 27 மார்ச் 2006, 10:49 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு மதுரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார். களப் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி வரவேற்று பேசினார்.
இம்மாநாட்டில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கலந்து கொண்டு தீர்மானங்களை வாசித்தார்.
தீர்மான விவரங்கள்:
- பாலஸ்தீனத்தின் விடுதலை போராட்டத்தை அங்கீகரிப்பது போல தமிழீழ விடுதலை போராட்டத்தையும் இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.
- இலங்கையில் தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்றுள்ள விடுதலை புலிகளின் மீதான தடையை இந்திய அரசு விலக்கி கொள்ள வேண்டும்.
- சிங்கள அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இராணுவ உதவிகளை வழங்க கூடாது.
- ஈழத்தமிழர் அகதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.
- தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள இடதுசாரி இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் மனித உரிமை அமைப்புகளும் தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் தமிழர் இயக்க பொது செயலாளர் தியாகு, உலகத் தமிழர் பேரமைப்பு பொது செயலாளர் பரந்தாமன், பெரியார் திராவிடக் கழகப் பொது செயலாளர்கள் கோவை ராமகிருட்டிணன், விடுதலை ராஜேந்திரன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.
-புதினம்
,
,
,

