03-27-2006, 05:53 PM
<b>கனடாவில் ஈழத்தமிழர் குடிவரவு தொடர்ச்சி</b>
1983ஆம் ஆண்டு ஆடித் திங்களில் இலங்கை அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரமும், அவ்வரசின் சிங்களக் கடும்கோட்பாடும் ஈழத்தமிழரைக் கனடாவில். குடியேறுவதற்கு ஊக்குவித்தது. கனடா தமிழீழச்சங்கத்தின் முயற்சியால் கனடிய மைய அரசு உதவியோடு இவர்களுக்குச் சிறப்பு வேலைத்திட்டங்கள் 1983ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் தொடங்கப்பெற்றன், இவ்வேலைத் திட்டமானது ஏற்கனவே கனடாவில் வசித்து வந்த ஈழத்தமிழர், தமது உறவினரைக் கனடாவுக்கு வரவழைப்பதற்கு எளிய வழிமுறைகளைக் கொண்டிருந்தது. கனடாவிற்கு வருவதற்கு காத்திருந்தோர் தாங்கள் எவ்வாறு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டனர் என்பதை ஒருவகையில் வெளிப்படுத்துவதே. இத்திட்டத்தினால் ஈழத்தமிழர் 1983ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் 1985ஆம் ஆண்டுவரை பெருமளவிற் பயனடைந்தனர். இத்திட்டத்தின்கீழ் பத்தாயிரத்திற்கும் இடைப்பட்ட ஈழத்தமிழர் நன்மையடைந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஊடாக அகதியுரிமை கோரிக் கனடாவிற்கு வந்த இளைஞர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களது அகதிக்கோரிக்கை புறந்தள்ளப்பட்டது. கனடாத் தமிழீழச் சங்கம் உள்ளிட்ட பிற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பெறுபேறாக அகதிக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவோர் தொகை படிப்படியாக அதிகரித்தது. 1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் 5 விழுக்காடாக இருந்து 1985ஆம் ஆண்டு 70 விழுக்காடாக அதிகரித்தது. 1989, 1990ஆம் ஆண்டுகளில் அகதி நிலை கோரி வருவேர் தொகை ஆண்டிற்கு 3 500 முதல் 4 000 வரை இருந்து என்று கூறின் அது மிகையாகாது.
1989ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற குடிவரவு மற்றும் அகதிச்சபை அகதி நிலை கோரும் ஈழத்தமிழருக்குப் பெருமளவில் அகதி நிலை வழங்கிப் பாதுகாப்பளித்தது. 1983ஆம் ஆண்டிற்கும் 1989ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதி பெருமளவில் ஈழத்தமிழ் அகதிகளை உருவாக்கிய காலப்பகுதியாகக் கருதப்படுகிறது. இவ்வாறு ஈழத்தமிழர் ஏதிலியர்தொகை பெருமளவில் அதிகரித்ததைக் கவனித்த இலங்கை அரசு, சிங்கள கடுங் கோட்பாடு இயக்கங்கள், மக்கன்சி நிறுவனம், கனடியன் அலையன்சு கட்சி, நசனல் போஸ்டு பத்திரிகை, சண் பத்திரிகை, மக்லீன்ஸ் சஞ்சிகை போன்றவை ஈழத்தமிழ் சமுதாயத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டன.
1983ஆம் ஆண்டு ஆடித் திங்களில் இலங்கை அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரமும், அவ்வரசின் சிங்களக் கடும்கோட்பாடும் ஈழத்தமிழரைக் கனடாவில். குடியேறுவதற்கு ஊக்குவித்தது. கனடா தமிழீழச்சங்கத்தின் முயற்சியால் கனடிய மைய அரசு உதவியோடு இவர்களுக்குச் சிறப்பு வேலைத்திட்டங்கள் 1983ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் தொடங்கப்பெற்றன், இவ்வேலைத் திட்டமானது ஏற்கனவே கனடாவில் வசித்து வந்த ஈழத்தமிழர், தமது உறவினரைக் கனடாவுக்கு வரவழைப்பதற்கு எளிய வழிமுறைகளைக் கொண்டிருந்தது. கனடாவிற்கு வருவதற்கு காத்திருந்தோர் தாங்கள் எவ்வாறு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டனர் என்பதை ஒருவகையில் வெளிப்படுத்துவதே. இத்திட்டத்தினால் ஈழத்தமிழர் 1983ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் 1985ஆம் ஆண்டுவரை பெருமளவிற் பயனடைந்தனர். இத்திட்டத்தின்கீழ் பத்தாயிரத்திற்கும் இடைப்பட்ட ஈழத்தமிழர் நன்மையடைந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஊடாக அகதியுரிமை கோரிக் கனடாவிற்கு வந்த இளைஞர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களது அகதிக்கோரிக்கை புறந்தள்ளப்பட்டது. கனடாத் தமிழீழச் சங்கம் உள்ளிட்ட பிற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பெறுபேறாக அகதிக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவோர் தொகை படிப்படியாக அதிகரித்தது. 1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் 5 விழுக்காடாக இருந்து 1985ஆம் ஆண்டு 70 விழுக்காடாக அதிகரித்தது. 1989, 1990ஆம் ஆண்டுகளில் அகதி நிலை கோரி வருவேர் தொகை ஆண்டிற்கு 3 500 முதல் 4 000 வரை இருந்து என்று கூறின் அது மிகையாகாது.
1989ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற குடிவரவு மற்றும் அகதிச்சபை அகதி நிலை கோரும் ஈழத்தமிழருக்குப் பெருமளவில் அகதி நிலை வழங்கிப் பாதுகாப்பளித்தது. 1983ஆம் ஆண்டிற்கும் 1989ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதி பெருமளவில் ஈழத்தமிழ் அகதிகளை உருவாக்கிய காலப்பகுதியாகக் கருதப்படுகிறது. இவ்வாறு ஈழத்தமிழர் ஏதிலியர்தொகை பெருமளவில் அதிகரித்ததைக் கவனித்த இலங்கை அரசு, சிங்கள கடுங் கோட்பாடு இயக்கங்கள், மக்கன்சி நிறுவனம், கனடியன் அலையன்சு கட்சி, நசனல் போஸ்டு பத்திரிகை, சண் பத்திரிகை, மக்லீன்ஸ் சஞ்சிகை போன்றவை ஈழத்தமிழ் சமுதாயத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டன.
<b> .. .. !!</b>

