Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழப் போராட்டமும், தமிழ் தேசியமும்!
#1
Thanks
http://potteakadai.blogspot.com/
ஈழம் பற்றிய இன்றைய தமிழக இளைஞர்களின் புரிதல் பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்று. இதில் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. தமிழைப் பற்றி என்னுடைய புரிதல் என்று நான் ஏதாவது எழுத முடியுமா? நான் பேசத் தொடங்கிய பொழுது தமிழில் தான் அம்மா, அப்பா என்று கூறினேன் அல்ல்து கூற வைக்கப்பெற்றேன். அதே போல் தான் ஈழத்தின் புரிதலும். எனக்கு கருத்து தெரியாத வயதிலிருந்தே எனது வீட்டில் எங்கு நோக்கினாலும் போராளிகளின் படம் தான் இருக்கும். ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த பொழுது ஈழத்துப் போராளிகள் சுதந்திரப் போராட்ட மாவீரர்களாவேத் தெரிந்தார்கள்.

கருவறையிலிருந்து வெளியே வரத் துடிக்கும் குழந்தையின் போராட்டத்திற்கு தாய் தன் வலியை பொருட்படுத்தாமல் குழந்தை வெளியே வர வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான் இருக்குமேயொழிய, வலியாறப் பொறுக்காது கொல்ல நினைப்பாளோ?

தமிழீழமும், ஆயுதப் போராட்டமும் எழுந்ததற்கான நிகழ்வுகளை உற்று நோக்கினால் புரியும் ரணமும் அதனுடைய வேதனையும்!

1983ல் நடந்த ஒட்டுமொத்த இனப்படுகொலை இன்னமும் நெஞ்சினில் இருந்து அகல மறுக்கின்றது.ஒரே நாளில் 1000 பேர் கழுத்தறுபட்டும், உயிரோடும் எரிக்கப்பட்டார்கள். ஆண்களூம் பெண்களும் பொதுவில் நிர்வாணப்படுத்தப் பட்டார்கள். இவையனைத்தும் சிங்கள இனவெறியர்கள் மற்றும் அவர்களின் பேரினவாத ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு நடைபெற்றன. இவ்வளவு அவமானங்களையும் தாண்டி அமைதியான முறையிலா போராட முடியும்?

1987ல் இராஜிவ் அரசிற்கும் & பேரினவாதி ஜெயவர்த்தனே அரசிற்கும் உடன்பாடு கையெழுத்தாகிறது. அதாவது இந்திய இராணுவப் படையினர் இலங்கையில் அமைதி காப்பார்களென்று. பிரபாகரன் எவ்வளவோ முயன்றும் சிங்கள - இந்திய அரசின் பிரகடனம் கையெழுத்தாவதை தடுக்க இயலவில்லை. அதற்கு மாறாக இராஜீவ், இந்தியப் படை புலிகளுக்கு உதவவே இலங்கை வருகிறது என்றும் தமிழ் மக்களின் மானம் காக்கப் படும் என்றும் உறுதியளிக்கின்றார். இதை பிரபாகரனின் யாழ்ப்பானத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் காத்த அமைதி திலீபன் என்ற மாவீரனின் மரணவாக்குமூலத்தினால் உடைந்து இன்றும் ஆயுதப் போராட்டமாகத் தெறிக்கிறது.

பதின்ம வயதில் நான் கண்ட ஆவணப்படங்களும், நேரிடையாய் சந்தித்த இரு போராளிகளின் வாக்குமூலமும் என்னுள்ளே அவ்வயதில் வெறியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. இன்னமும் கூட ஈழத்தில் பிறந்திருக்கக் கூடாதாவென்ற ஏக்கம் அவ்வப்போது எழுவதும் உண்டு. எந்திரத் துப்பாக்கி ஏந்திப் போராடும் எம் சகோதரர்க்கு துணையாய் இருந்திருக்கலாமே என்ற எண்ணமும் எழுந்ததுண்டு. அது ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கு எழும் "பிணப்பெட்டியின் மேல் தேசியக் கொடி" போன்ற எண்ணம். ஆனால் அதற்கு முரணான வாழ்க்கையைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய தமிழக இளைஞர்கள் இதைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதினாலும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும் நம்முடைய அவலத்தை வணிகப்படுத்துவதன் மூலம் எளிதில் சென்றடையச்செய்ய கடமைப்பட்டுள்ளோம். இதற்கான வழிகளை தமிழ்சசியும், நந்தனும் அலசி இருக்கிறார்கள்.

ஆனால் இங்கே நாம் முன்வைப்பது, தற்போதைய புலம் பெயர்ந்தவர்களின் மன நிலையையும், வாழ்க்கைப் போராட்டத்தையும் தான். பெரும்பாலான ஆண்கள் ஈழப் போராட்டத்தையும், போராளிகளின் போரையும் ஆதரிக்கின்ற வேலையிலே பெண்களின் மன நிலையையும் நாம் அறிந்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. இங்கே நான் எனது தோழிகளொடு கதைத்ததை மட்டுமே உதாரணமாக வைக்கிறேன். போராளிகளின் பற்றிய அவர்களின் புரிதல் மிகவும் வித்தியாசமானதாகவே இருந்தது. புலிகளின் ஆய்தப் போராட்டத்திற்கு முன்னர் அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்ததாகவும், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரெ மின்சாரம் முதற்கொண்டு அனைத்து அத்தியாவசியத் தேவைகள் தடைபட்டதாகவும் தெரிவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் அவர்களுடைய பதின்ம வயதின் ஆசைகள் நிராசையாகி நாடோடியாகச் சுற்றுவ(றிய)தற்கு காரணம் ஆயுதப் போராட்டமே என்றும் எண்ணியுள்ளனர். நான் அதை மறுதலித்துப் பேச முற்படும் பொழுது மூக்குடைபட்டே இருக்கிறேன்.(நீ படித்தும், வீடியோவில் பார்த்தும் இருப்பாய், நான் அனுபவித்திருக்கிறேன் என்று)

ஆக இப்பொழுதிருக்கும் இரண்டாம் தலைமுறையினரே இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மூன்றாம் தலைமுறையினருக்கு இது பற்றி தெரிய படுத்த வாய்ப்பு இருக்கிறதா?
செருமனியில் நாஜிப் படையினரால் யூதர்கள் பட்டத் துன்பங்களை (திரைப்படங்களில்) காணும் பொழுது ஏற்படும் பரிதாப உணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே ஈழத்து அவலங்கள் வெளியே தெரிய வாய்ப்புள்ளது. மேலும் இது பற்றியான குறும்படங்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்க வழி செய்ய வேண்டும்.

சமீபத்தில் "பேட்டல் ஆஃப் அல்ஜீர்ஸ்" என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் அல்கீரிய மக்களின் ஃபிரெஞ்சுக் காலணி ஆதிக்கத்திற்கெதிரான சுதந்திர போராட்டத்தைப் பற்றியது. அதில் போராளிக்குழுவின் தலைவனை சிறைபிடித்து நாடு கடத்தி விடுவார்கள். ஆனாலும் இரண்டு அமைதியான ஆண்டுகள் கழித்து நாடே ஸ்தம்ப்பிக்கும் வகையில் மக்களின் போராட்டம் வெடிக்கும். அதுவே 1960 களில் அல்ஜீரிய சுதந்திரத்திற்கு வழி வகுத்தது.ஈழப் போராட்டத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் ஈழத்து மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதில் உள்ள ஆர்வமே இதை உதாரணமாக எடுத்தாள வேண்டியதாயிற்று.

தமிழிழ தேவையும் தமிழ் தேசியமும்

இன்றைய மக்கட்தொகையில் ஏறக்குறைய 81/2 கோடி தமிழ் மக்களைக் கொண்டுள்ள இவ்வுலகில் நமக்கென்று ஒரு அங்கீகாரம் இல்லை...2 மில்லியன் மக்கட்தொகை கொண்ட சுலுவேனிய நாடு உருவானது மொழி, இனத்தின் அடிப்படையிலேயே. ஈராஇய, ஈராக்கிய, சிரிய, துருக்கிய தேசங்களும் இன்று வரை சுயமாக இயங்கிக் கொண்டிருக்கும் சதாமின் அடக்குமுறையில் ஒடுக்கப்பட்ட குர்தீய தேசக் கோரிக்கைகளும் மொழி இனத்தின் அடிப்படையிலேயே. வெரும் 2 மில்லியன் மக்கட்தொகை கொண்ட சுலுவேனிய மக்களின் சார்பாக அவர்களது மொழியில் பேசுவதற்கு அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து ஐநா சபையில் குரலெழுப்பிக் கொண்டிருக்கும் வேலையிலே நமக்கென்று ஒரு தேசமும் அங்கிகாரமும் தேவை என்று குரல் எழுப்புவது தவறா? தமிழ்நாட்டில் இதற்கான குரல் எழும்பொழுது தமிழக உணர்வாளர்களின் குரல்வலை நெறிபடும் வேளையிலே நம் ஈழத்து சகோதரர்கள் சுயமரியாதையோடு வாழ நாம் துணை நிற்க வேண்டாமோ? தமிழன் தலை நிமிர, தனக்கென்று ஒரு கலாச்சாரம், பண்பாடு மற்றும் உலக அளவில் தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தோடு வலம் வர முதல் படியாக தமிழீழம் அவசியமாகிறது.
பின்குறிப்பு: இராஜிவ் கொலையில் புலிகளுக்கெதிரான நிலையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எனக்குப் பட்டதை சொல்ல எனக்கு முழு உரிமையுண்டு.
Dear friends please read
Reply


Messages In This Thread
தமிழீழப் போராட்டமும், தமிழ் தேசியமும்! - by parisian - 03-26-2006, 07:44 PM
[No subject] - by Vaanampaadi - 03-26-2006, 08:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)