03-26-2006, 03:36 AM
<b>கனடாவில் ஈழத்தமிழர் குடிவரவு</b>
சிறீகுகன் சிறிக்கந்தராசா
எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்காவினால் 1955ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிங்களக் கடுங் கோட்பாடு கொண்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு 1956ஆம் ஆண்டில் சிங்கள்ம் மட்டுமே ஆட்சிமொழி என்னும் சட்டத்தை கொண்டுவந்தது. இச்சட்டம் கல்வி கற்ற தமிழரையும், தமிழ் அரச நிருவாக அலுவலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களையும் பெருமளவிற் பாதித்தது. இவர்களைல் பணவசதி உடையோர் இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, கனடா போன்ற நாடுகளுக்குத் தமது கல்வியைத் தொடரும் பொருட்டோ அல்லது தமது தொழில் துறைகளில் நுண்திறமை பெறும் பொருட்டோ புலம்பெயர்ந்தனர். கனடிய நிறுவனங்களில் தொழில் பெற்று ஈழத்தமிழர் சிலர் ஆயிரத்துத்தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் பிற்பகுதியிலும் அறுபதுகளின் முற்பகுதியிலும் கனடாவிற்கு புலம் பெயர்ந்தனர். இவ்வாறு புலம் பெயர்ந்தோர் நூற்றுக்கும் குறைந்த அளவிலேயே காணப்பட்டனர்.
1967ஆம் ஆண்டு கனடிய குடிவரவுச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் விளைவாக ஐரோப்பிய மரபினர் அல்லதோரும் கனடாவிற்குப் புலம்பெயர்வது சிறுது எளிதாக அமைந்தது. 1967ஆம் ஆண்டின் பின்னர் கருதக்கூடியளவு ஈழத்தமிழர் குடிவரவாளரகவோ அல்லது பல்கலைக்கழக மாணவராகவோ தமது திறமையின் அடிப்படையில் கனடாவுக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மாநில அல்லது மைய அரசுப் பணிகளிற் சேர்ந்து கொண்டனர். வேறி சிலர் தமது திறமை அடிப்படையில் மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், படவரைஞர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் பணிகளிற் தனியார் துறையில் சேர்ந்தனர். இன்னும் சிலர் கனடியப் பல்கலைக்கழகங்களில் பணிக்கமர்ந்தனர். இவ்வாறு வந்தோரில் சிலர் குடும்பமாகவும், சிலர் வந்தபின் திருமணமானவராயும் காணப்பட்டனர். 1977ஆம் ஆண்டளவில் கனடாவில் ஈழத்தமிழர் தொகை ஏறத்தாழ 1500 , 2000 ஆகக் காணப்பட்டது. 1977ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம். ஈழத்தமிழர்களை அதிகளவில் கனடாவிற்கு புலம்பெயர வைத்தது. பலர் கல்வித் தகமை, தொழில்சார் பட்டறிவு. வினைத்திறன் ஆகயவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு கனடாவில் நிரந்தரமாகக் குடியேறினர். 1981ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கனடாவில் ஈழத்தமிழர் தொகை 3500- 4000 வரைக் காணப்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
1982ஆம் ஆண்டு இன்னுமொரு பகுதி ஈழத்தமிழர் கனடாவுக்கு ஏதிலியராக வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 18 - 28 அகவைக்கு இடைப்பட்ட ஆண்களாகவும் ஜேர்மனி, பிரான்சு, சுவிற்லாந்து ஆகிய நாடுகளுக்கூடாக வந்தோராயும் காணப்பட்டனர். இவர்கள் இலங்கைக் காவல்துறையாலும். ஆயுதப்படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட கொடிய தாக்குதலாலும் தமிழீழத்தில் வளர்ச்சியடைந்த போராளிக் குழுக்களிற் சேரவிருபாமலும், பாதுகாப்பு, மற்றும் சிறந்த வாழ்க்கை கருதியும் இலங்கையை விட்டுக் குடிபெயர்ந்தவர் ஆவர். இந்த இளைஞர்கள் முன்பு கனடாவில் வாழ்ந்த ஈழத்தமிழ்ச் சமுதாயத்தால் நன்கு வரவேற்கப்படவில்லை. அவ்வேளையில் இவர்களுக்கு கனடாத் தமிழீழச் சங்கமும், சமுதாயச் சிந்தனை உள்ள ஈழத்தமிழர்களுமே பெருமளவைல் உதவினர்.
தொடரும்...
சிறீகுகன் சிறிக்கந்தராசா
எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்காவினால் 1955ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிங்களக் கடுங் கோட்பாடு கொண்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு 1956ஆம் ஆண்டில் சிங்கள்ம் மட்டுமே ஆட்சிமொழி என்னும் சட்டத்தை கொண்டுவந்தது. இச்சட்டம் கல்வி கற்ற தமிழரையும், தமிழ் அரச நிருவாக அலுவலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களையும் பெருமளவிற் பாதித்தது. இவர்களைல் பணவசதி உடையோர் இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, கனடா போன்ற நாடுகளுக்குத் தமது கல்வியைத் தொடரும் பொருட்டோ அல்லது தமது தொழில் துறைகளில் நுண்திறமை பெறும் பொருட்டோ புலம்பெயர்ந்தனர். கனடிய நிறுவனங்களில் தொழில் பெற்று ஈழத்தமிழர் சிலர் ஆயிரத்துத்தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் பிற்பகுதியிலும் அறுபதுகளின் முற்பகுதியிலும் கனடாவிற்கு புலம் பெயர்ந்தனர். இவ்வாறு புலம் பெயர்ந்தோர் நூற்றுக்கும் குறைந்த அளவிலேயே காணப்பட்டனர்.
1967ஆம் ஆண்டு கனடிய குடிவரவுச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் விளைவாக ஐரோப்பிய மரபினர் அல்லதோரும் கனடாவிற்குப் புலம்பெயர்வது சிறுது எளிதாக அமைந்தது. 1967ஆம் ஆண்டின் பின்னர் கருதக்கூடியளவு ஈழத்தமிழர் குடிவரவாளரகவோ அல்லது பல்கலைக்கழக மாணவராகவோ தமது திறமையின் அடிப்படையில் கனடாவுக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மாநில அல்லது மைய அரசுப் பணிகளிற் சேர்ந்து கொண்டனர். வேறி சிலர் தமது திறமை அடிப்படையில் மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், படவரைஞர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் பணிகளிற் தனியார் துறையில் சேர்ந்தனர். இன்னும் சிலர் கனடியப் பல்கலைக்கழகங்களில் பணிக்கமர்ந்தனர். இவ்வாறு வந்தோரில் சிலர் குடும்பமாகவும், சிலர் வந்தபின் திருமணமானவராயும் காணப்பட்டனர். 1977ஆம் ஆண்டளவில் கனடாவில் ஈழத்தமிழர் தொகை ஏறத்தாழ 1500 , 2000 ஆகக் காணப்பட்டது. 1977ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம். ஈழத்தமிழர்களை அதிகளவில் கனடாவிற்கு புலம்பெயர வைத்தது. பலர் கல்வித் தகமை, தொழில்சார் பட்டறிவு. வினைத்திறன் ஆகயவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு கனடாவில் நிரந்தரமாகக் குடியேறினர். 1981ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கனடாவில் ஈழத்தமிழர் தொகை 3500- 4000 வரைக் காணப்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
1982ஆம் ஆண்டு இன்னுமொரு பகுதி ஈழத்தமிழர் கனடாவுக்கு ஏதிலியராக வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 18 - 28 அகவைக்கு இடைப்பட்ட ஆண்களாகவும் ஜேர்மனி, பிரான்சு, சுவிற்லாந்து ஆகிய நாடுகளுக்கூடாக வந்தோராயும் காணப்பட்டனர். இவர்கள் இலங்கைக் காவல்துறையாலும். ஆயுதப்படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட கொடிய தாக்குதலாலும் தமிழீழத்தில் வளர்ச்சியடைந்த போராளிக் குழுக்களிற் சேரவிருபாமலும், பாதுகாப்பு, மற்றும் சிறந்த வாழ்க்கை கருதியும் இலங்கையை விட்டுக் குடிபெயர்ந்தவர் ஆவர். இந்த இளைஞர்கள் முன்பு கனடாவில் வாழ்ந்த ஈழத்தமிழ்ச் சமுதாயத்தால் நன்கு வரவேற்கப்படவில்லை. அவ்வேளையில் இவர்களுக்கு கனடாத் தமிழீழச் சங்கமும், சமுதாயச் சிந்தனை உள்ள ஈழத்தமிழர்களுமே பெருமளவைல் உதவினர்.
தொடரும்...
<b> .. .. !!</b>

