03-23-2006, 08:48 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>வரம் தா!</b></span>
<b>எங்கோ இருந்த எம்மை ஒன்றாக்கினாய்
எனை நீ எட்டி அணைக்க மறந்தாலும்- உன்
உச்சி முகர ஒரு வரம் தா!
எட்டு அகவையாச்சா உனக்கு?
எட்டு திசையும் வாழும்
இந்த குஞ்சுகளுக்காய்
எப்போதும் சிறகு விரி - அந்த
கத கதகதப்பில் நாமெல்லாம் வாழ
காலமெல்லாம் ஒரு வரம் தா!
நான்கு மூலைக்குள் முடங்கிய வாழ்வை
நான் இருக்கிறேன் என ஒளி காட்டினாய்
விழியாய் உனை நினைத்தோம்
எமை வென்று போனாய் நீ யாழவளே
உன் இதயத்தில் இடம் தந்தாய் - இனியவளே
உனை எந்நாளும் என் நெஞ்சில்
சுமக்க கேட்கிறேன்... ஒரு வரம் தா!
காலம் ஓடி கண்டம் மாறி
நதி வற்றி போச்சு இனியென்ன
மரங்கள் சாயும் என நினைத்தோம்
மழையாய் தலையில் பொழிந்தாய்
வீணை அழகே - உன்
வேர்களில் நாம் உறங்க ஒரு வரம் தா!
நீ வாழ வரம் கேட்பேன் - நான்
உன்னோடு என்றும் இருக்க
வரம் கேட்பேன்
எட்டு ஆண்டு என்ன?
எண்பது ஆண்டுகள் ஆகட்டும்
நான் இருப்பேனோ இல்லையோ
நீ எம் சந்ததி துயரத்தை
பிறர்க்கு எடுத்து சொல்லு - உன்
தந்தி நரம்புகளை தமிழுக்காகவே
தந்து நில்லு!
இலத்திரனியல் ஊடகத்தில் - எம்
இதயத்தை இறுக்கி தைத்த தாய்
யாழ் நீ வாழியவே என்றென்றும்
வாசம் வீசுகவே! </b>
<b>எங்கோ இருந்த எம்மை ஒன்றாக்கினாய்
எனை நீ எட்டி அணைக்க மறந்தாலும்- உன்
உச்சி முகர ஒரு வரம் தா!
எட்டு அகவையாச்சா உனக்கு?
எட்டு திசையும் வாழும்
இந்த குஞ்சுகளுக்காய்
எப்போதும் சிறகு விரி - அந்த
கத கதகதப்பில் நாமெல்லாம் வாழ
காலமெல்லாம் ஒரு வரம் தா!
நான்கு மூலைக்குள் முடங்கிய வாழ்வை
நான் இருக்கிறேன் என ஒளி காட்டினாய்
விழியாய் உனை நினைத்தோம்
எமை வென்று போனாய் நீ யாழவளே
உன் இதயத்தில் இடம் தந்தாய் - இனியவளே
உனை எந்நாளும் என் நெஞ்சில்
சுமக்க கேட்கிறேன்... ஒரு வரம் தா!
காலம் ஓடி கண்டம் மாறி
நதி வற்றி போச்சு இனியென்ன
மரங்கள் சாயும் என நினைத்தோம்
மழையாய் தலையில் பொழிந்தாய்
வீணை அழகே - உன்
வேர்களில் நாம் உறங்க ஒரு வரம் தா!
நீ வாழ வரம் கேட்பேன் - நான்
உன்னோடு என்றும் இருக்க
வரம் கேட்பேன்
எட்டு ஆண்டு என்ன?
எண்பது ஆண்டுகள் ஆகட்டும்
நான் இருப்பேனோ இல்லையோ
நீ எம் சந்ததி துயரத்தை
பிறர்க்கு எடுத்து சொல்லு - உன்
தந்தி நரம்புகளை தமிழுக்காகவே
தந்து நில்லு!
இலத்திரனியல் ஊடகத்தில் - எம்
இதயத்தை இறுக்கி தைத்த தாய்
யாழ் நீ வாழியவே என்றென்றும்
வாசம் வீசுகவே! </b>
<b> .. .. !!</b>

