03-23-2006, 10:23 AM
கூடுமானவரை உங்களின் தமிழ்நாட்டுத் தேர்தல் தொடர்பான உங்கள் விவாதங்களில் பங்கெடுக்காது பார்த்து வருகின்றோம். தொடர்ந்து உணர்வுகளைச் சீண்டும் விதமான கருத்துக்களை இடவேண்டாம் என ஒரு சக களஉறுப்பினராகக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இப்போது நடப்பது தேர்தல் கூத்துக்கள். ஆயின் எம் நாட்டில் நடப்பது எமது <b>இருப்பிற்கான போராட்டம்</b>. இரண்டிற்குமான வித்தியாசம் தெளிவாக அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.
மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். இவ்வமைப்பு பல கூறுகளாக ஏற்கனவே பிரிவுபட்டு இருந்தது. அதன் பின்னரும் இரண்டாகப் பிளவு பட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஸ் அணி, ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி என இரண்டாக இயங்குகிறது. இதில் சுரேஸ் அணி தமிழரின் தேசியக்போட்பாட்டை ஏற்று இன்று தமிழரின் நலன் சார்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இயங்குகிறார்கள். வரதர் அணி இன்னும் இராணுவத்துடன் இணைந்து தமது பழைய செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொள்கிறார்கள்.
மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். இவ்வமைப்பு பல கூறுகளாக ஏற்கனவே பிரிவுபட்டு இருந்தது. அதன் பின்னரும் இரண்டாகப் பிளவு பட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஸ் அணி, ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி என இரண்டாக இயங்குகிறது. இதில் சுரேஸ் அணி தமிழரின் தேசியக்போட்பாட்டை ஏற்று இன்று தமிழரின் நலன் சார்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இயங்குகிறார்கள். வரதர் அணி இன்னும் இராணுவத்துடன் இணைந்து தமது பழைய செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொள்கிறார்கள்.

