Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துரியோதனன் கதிதான் ஜெ.க்கு ஏற்படும்": வைகோ ஆவேசம்
#1
துரியோதனன் கதிதான் ஜெ.க்கு ஏற்படும்": வைகோ ஆவேசம்

நாகப்பட்டினம்:

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத்தின் வீடு இடிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.


மயிலாடுதுறையில் கடந்த 1984ல் ஸ்ரீவில்லிபுத்துõர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் வரும் 28ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி மீனாட்சி சுந்தரம் வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,

ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் பண்பாடு மிக்க நாஞ்சில் சம்பத்தின் குடும்பத்தினர் கதறக் கதற இரக்கமின்றி அவருடைய வீட்டை இடித்து மண்மேடாக்கியுள்ளது தமிழக அரசு. வீட்டிலிருந்த பொருட்களைக் கூட எடுக்க விடவில்லை.

இப்படி ஆக்கிரமிப்பு என்று கூறும் ஜெயலலிதாதான் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, பகல் கொள்ளையடித்தார். நீதிமன்றத்திலேயும் அந்தக் குற்றம் நிரூபணமாகிவிட்டது.

ஆனால் தற்போது சங்கடத்தில் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து கொள்ளையடித்த பொருட்களை மீண்டும் அரசிடமே ஒப்படைக்கிறோம் என்று கூறுகிறார் ஜெயலலிதா.

<b>சிறைக்குள் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் கொடுமையை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மகாபாரதத்தில் அரக்கு மாளிகைக்குத் தீ வைத்த துரியோதனனுக்கு ஏற்பட்ட கதிதான் ஜெயலலிதாவுக்கு ஏற்படும்</b>.
தமிழக அரசின் அலட்சியப் போக்கு காரணமாகத்தான் காவிரி டெல்டா விவசாயிகள் அல்லல் பட்டு வருகின்றனர். காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 9ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் பந்த் போராட்டத்தில் மதிமுகவும் கலந்து கொள்ளும்.

எதிர்க் கட்சிகளை ஒடுக்க நினைத்து பாசிஸ வெறி பிடித்து ஆடுகிறது ஜெயலலிதா அரசு என்று வைகோ ஆவேசத்துடன் கூறினார்.

மதிமுக கண்டன அறிக்கை:

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி நாஞ்சில் சம்பத்தின் வீடு இடிக்கப்பட்டதற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாஞ்சில் சம்பத்தின் வீடு நாகர்கோவில் அருகே உள்ள மனகாவிளை என்ற இடத்தில் உள்ளது. சமீபத்தில் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது நாஞ்சில் சம்பத்தின் வீடும் இடித்துத் தள்ளப்பட்டது.

போலீஸார் வேண்டும் என்றே நாஞ்சில் சம்பத்தின் வீட்டை இடித்துத் தள்ளியுள்ளதாக மதிமு¬க அவைத் தலைவர் எல். கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்.

இதில் நாஞ்சில் சம்பத் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனால்தான் அதிமுகவினரும், ஆட்சியாளர்களும் அவர் மீது காட்டம் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் விதி¬றைப்படி கட்டப்பட்டிருந்த நாஞ்சில் சம்பத்தின் வீட்டை, ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக கூறி அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இது அரசியல் ரீதியான பழி வாங்கும் செயலாகும்.

ஜெயலலிதா ஆட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதையே இது காட்டுகிறது என்று கூறியுள்ளார் எல்.கணேசன்.


¿ýÈ¢-¾ðоÁ¢ú- ƒÉÅâ 8 /2003
<b>
±ýÉ¡ò¨¾ ¦º¡øÅÐí¸ !</b>
!




-
Reply


Messages In This Thread
துரியோதனன் கதிதான் ஜெ.க்கு ஏற்படும்&quot;: வைகோ ஆவேசம் - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-22-2006, 02:49 PM
[No subject] - by matharasi - 03-22-2006, 03:08 PM
[No subject] - by aathipan - 03-22-2006, 09:42 PM
[No subject] - by Luckyluke - 03-23-2006, 06:56 AM
[No subject] - by கந்தப்பு - 03-23-2006, 07:06 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-23-2006, 07:13 AM
[No subject] - by rajathiraja - 03-23-2006, 07:48 AM
[No subject] - by Luckyluke - 03-23-2006, 09:18 AM
[No subject] - by பிறேம் - 03-23-2006, 10:23 AM
[No subject] - by Thala - 03-23-2006, 11:06 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-23-2006, 11:07 AM
[No subject] - by பிறேம் - 03-23-2006, 11:28 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-23-2006, 11:35 AM
[No subject] - by Luckyluke - 03-23-2006, 11:56 AM
[No subject] - by பிறேம் - 03-23-2006, 12:52 PM
[No subject] - by Luckyluke - 03-23-2006, 01:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)