03-21-2006, 04:16 PM
அப்படிப் பார்த்தால் யாரையுமே இவ்வுலகத்தில் நம்ப முடியாது. வைகோ செய்வது சந்தர்ப்பவாத அரசியலில்லை. ஏற்கனவே இந்தக்கூட்டணி அறுந்து விழும் நிலையில்தான் தொங்கியது. கருணாநிதியே அதை உடைத்து விடுவார் என்ற ஊகம்தான் மேலோங்கியிருந்தது. அதுதான் நடந்துமிருக்கிறது. ஒரு கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதிக ஆசனங்களைத் தரக் காத்திருக்கும் கூட்டணியில் சேருவது சந்தர்ப்பவாதமாகாது. ஆட்சியிலிருக்கும் ஜெயலலிதாவால் அதிக ஆசனங்களைக் கொடுக்க முடியுமானால் ஏன் கருணாநிதியால் கொடுக்கமுடியாது. மதிமுக தொடர்ந்தும் முட்டுக்கொடுக்கும் கட்சியாக வளர்ச்சியடையாமல் இருந்துகொண்டே இருப்பதை அதன் ஆதரவாளர்கள் ஏற்கமாட்டார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆழும் நிலைக்கு அக்கட்சி வளரவேண்டுமானால் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி வளரவேண்டியது அவசியம். கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணிக் கடசிகள் ஒன்று சேரவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவே சேர்ந்தன. தற்போது நிலைமை மாறிவிட்டது. வைகோவிற்கு உரிய கௌரவம் ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு எதற்காக வைகோ கருணாநிதியுடன் தொங்கிக்கொண்டு இருக்கவேண்டும். மதித்தவருடன் சேர்வதே சரியானது. கருணாநிதியின் கணிப்பீடு தவறானதாகும். வைகோவின் பெறுமதியை அவர் புரிந்துகொள்ளவில்லை. மிகக்குறைவாக மதிப்பிட்டுவிட்டார். வைகோ அவருக்குச் சரியான பாடம் கற்பித்திருக்கிறார்.
S. K. RAJAH

