03-21-2006, 03:01 PM
வைகோ பற்றி எழுதியவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. மதிமுக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றால் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறவேண்டியது மிக அவசியம். அம்மா கொடுக்கிறார் வைகோ பெற்றுக்கொள்கிறார். இதில் என்ன வந்தது. தடா பொடாவின் கீழெல்லாம் அடைத்து வைக்கப்பட்டது பழைய கதை. அதிமுக மதிமுகவின் அடிப்படை உணர்வுகளை ஏற்றுக்கொண்டுதான் அதைக் கூட்டுச்சேர்த்திருக்கின்றது. இதனால் ஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் செல்வாக்குள்ள அரசியல் கட்சியின் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுமேயொழியக் குறையாது. திமுக கூட்டணியில் வைகோ இருந்திருந்தால் தற்போதைய கணிப்பீடுகளின்படி இந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை. ஜெயலலிதாவின் புலி எதிர்ப்புக் கொள்கை வைகோவின் கூட்டினால் தணிய வாய்ப்பேற்படுவதோடு எதிர்காலத்தில் இலங்கை அரசின் வாலாட்டத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்புக்குரலை பகிரங்கமாக எழுப்பவும் கூடும். மத்திய அரசோடு சேர்ந்து கொண்டு குடும்ப நலனைத் தவிர வேறெதையும் நோக்காது இரட்டைவேடம் போடும் கருணாநிதியை நம்புவது மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகவே முடியும். மொத்தத்தில் இன்றைய நிலையில் ஜெயா வைகோ கூட்டை விமர்சிக்காது தமது தார்மீக ஆதரவை ஈழத்தமிழாகள் அளிப்பதே சரியான ராஜதந்திரமாகும்.
S. K. RAJAH

