03-20-2006, 03:37 PM
விடுதலைப்புலிகள் குறித்த விமர்சனங்களில் பண்டிதத்தனங்களும் தங்களை பெரும் புத்திஜீவிகளாகவும், வித்தியாசமானவர்களாகவும் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரமும் மேலோங்கியிருந்ததே தவிர, யதார்த்தம் குறித்த புரிதலோ அவதானமோ இருந்ததாகத் தெரியவில்லை.
ஆனால், அந்த மாற்றுக் கருத்து விடுதலையையே மறுதலிப்பதாகவும் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் இருந்து விடக் கூடாது.
(அவரது கண்டுபிடிப்பில்) வரலாற்றுக் குருடர்களான விடுதலைப்புலிகளால் எவ்வாறு இத்தகையதொரு பெரும் விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது? விடுதலைப்புலிகளால் எவ்வாறு பிராந்திய, ஐரோப்பிய ராஜதந்திர அரசியல் காய்நகர்த்தல்களுக்கு ஈடுகொடுத்தவாறு விடுதலை அரசியலை நகர்த்த முடிகிறது. வரலாற்றின் போக்கை சரியாக புரிந்து கொள்ள முடியாத அவரைப் போன்றவர்கள் மாற்றங்களை நோக்கி வருவது நமக்கு மகிழ்ச்சிதான்.
தமிழர் தேசியம் என்பது தனிப்பட்ட நமது பிரச்சனையல்ல. தனிப்பட்ட நமது வாழ்வியல் அனுபவங்களூடாக அதனைப் பரிசீலிக்க முற்படுவது தவறானதும் மிகமோசமான பிழையுமாகும் என்று கருதக் கூடியவர்களில் நானும் ஒருவன். விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு ஒடுக்கபட்ட மக்களின் குரல். அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் மட்டுமல்ல, ஒடுக்குமுறையின் வலியிலிருந்தும் குரூரத்திலிருந்தும் விடுபடு வேண்டுமென்ற ஆவேசத்துடன், ஒரு தேசம் தன்னைத் தானே வருத்தி பிரசவித்த விடுதலை அமைப்பு. உண்மையில் ,இந்த விடுதலைப் போராட்டம் என்பது பல லட்சக் கணக்கான தமிழர்களின் கௌரவமான வாழ்வியல் இருப்போடு சம்பந்தப்பட்டது. தன்னலமற்ற பல்லாயிரக் கணக்கான மாவீரர்களின் கனவுகளோடு சம்பந்தப்பட்டது. நமது தனிப்பட்ட புத்திசாலித்தனப் பிரமைகளை சோதித்துப் பார்ப்பதற்கான சோதனைக்களமல்ல இது. சில வேளைகளில் யதார்த்தம் காலம் கடந்தே தெளிவாகக் கூடும். வரலாற்று ஓட்டத்தில் எல்லாமே சரிக்கும் பிழைக்கும் இடையில்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வெறும் புனித கற்பிதங்களால் எதுவும் ஆகப்போவதில்லை.
சிங்கள தேசம் தமிழர் தேசத்தின் போராட்ட வலுவைச் சிதைக்க எந்த வழிமுறைகளையும் பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை என்பதையே சமீபகால நிகழ்வுகள் கோடிகாட்டுகின்றன. எனவே, நமது நிலையில் இந்தக் காலத்தில் மாற்றுக் கருத்துக்கள் என்பதும் விமர்சனங்கள் என்பதும் வெறும் அர்த்தமற்ற சொற்களாகத்தான் இருக்க முடியும். கடந்த அறுபது வருடங்களிற்கும் மேலாக, தமிழர் தேசம் தனது விடுதலைக்காகப் போராடி வருகிறது. தமிழ் மக்களுக்கு ஒடுக்குமுறையையும் அழிவையும் தவிர, எதையும் வழங்கிவிடும் நிலையில் சிங்கள தேசம் இல்லையென்பது மீண்டும் மீண்டும் யதார்த்தமாக இருக்கிறது. இந்த வரலாற்றை சொல்லிச் சொல்லியே அது நமக்கு மனப்பாடமாகி விட்டது. எனவே, இந்தக் காலத்திற்கான நமது பணியென்பது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலோடு குரலாகக் கலப்பதுதான். நீண்ட நாட்களாக சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்த ஒரு விடயத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. எனது பார்வை தமிழ்த் தேசியத்துள் வாழ விரும்புகின்ற ஒரு சாதாரன குடிமகனின் பார்வையே அன்றி, வேறு ஒன்றுமில்லை. இவ்வாறான பார்வைகளை புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு வேலைதான் என்றும் சிலர் மதிப்படக் கூடும். நீதியின் பக்கம் நிற்பதும் உண்மையின் பக்கமாக நிற்பதும் வக்காலத்து வாங்குதல் என்ற அர்த்தம் பெறுமாக இருந்தால், அந்த வக்காலத்து வாங்கலை தொடர்ந்து செய்வதில் நாம் ஏன் பின்நிற்க வேண்டும்.
யதீந்திரா
ஆனால், அந்த மாற்றுக் கருத்து விடுதலையையே மறுதலிப்பதாகவும் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் இருந்து விடக் கூடாது.
(அவரது கண்டுபிடிப்பில்) வரலாற்றுக் குருடர்களான விடுதலைப்புலிகளால் எவ்வாறு இத்தகையதொரு பெரும் விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது? விடுதலைப்புலிகளால் எவ்வாறு பிராந்திய, ஐரோப்பிய ராஜதந்திர அரசியல் காய்நகர்த்தல்களுக்கு ஈடுகொடுத்தவாறு விடுதலை அரசியலை நகர்த்த முடிகிறது. வரலாற்றின் போக்கை சரியாக புரிந்து கொள்ள முடியாத அவரைப் போன்றவர்கள் மாற்றங்களை நோக்கி வருவது நமக்கு மகிழ்ச்சிதான்.
தமிழர் தேசியம் என்பது தனிப்பட்ட நமது பிரச்சனையல்ல. தனிப்பட்ட நமது வாழ்வியல் அனுபவங்களூடாக அதனைப் பரிசீலிக்க முற்படுவது தவறானதும் மிகமோசமான பிழையுமாகும் என்று கருதக் கூடியவர்களில் நானும் ஒருவன். விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு ஒடுக்கபட்ட மக்களின் குரல். அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் மட்டுமல்ல, ஒடுக்குமுறையின் வலியிலிருந்தும் குரூரத்திலிருந்தும் விடுபடு வேண்டுமென்ற ஆவேசத்துடன், ஒரு தேசம் தன்னைத் தானே வருத்தி பிரசவித்த விடுதலை அமைப்பு. உண்மையில் ,இந்த விடுதலைப் போராட்டம் என்பது பல லட்சக் கணக்கான தமிழர்களின் கௌரவமான வாழ்வியல் இருப்போடு சம்பந்தப்பட்டது. தன்னலமற்ற பல்லாயிரக் கணக்கான மாவீரர்களின் கனவுகளோடு சம்பந்தப்பட்டது. நமது தனிப்பட்ட புத்திசாலித்தனப் பிரமைகளை சோதித்துப் பார்ப்பதற்கான சோதனைக்களமல்ல இது. சில வேளைகளில் யதார்த்தம் காலம் கடந்தே தெளிவாகக் கூடும். வரலாற்று ஓட்டத்தில் எல்லாமே சரிக்கும் பிழைக்கும் இடையில்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வெறும் புனித கற்பிதங்களால் எதுவும் ஆகப்போவதில்லை.
சிங்கள தேசம் தமிழர் தேசத்தின் போராட்ட வலுவைச் சிதைக்க எந்த வழிமுறைகளையும் பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை என்பதையே சமீபகால நிகழ்வுகள் கோடிகாட்டுகின்றன. எனவே, நமது நிலையில் இந்தக் காலத்தில் மாற்றுக் கருத்துக்கள் என்பதும் விமர்சனங்கள் என்பதும் வெறும் அர்த்தமற்ற சொற்களாகத்தான் இருக்க முடியும். கடந்த அறுபது வருடங்களிற்கும் மேலாக, தமிழர் தேசம் தனது விடுதலைக்காகப் போராடி வருகிறது. தமிழ் மக்களுக்கு ஒடுக்குமுறையையும் அழிவையும் தவிர, எதையும் வழங்கிவிடும் நிலையில் சிங்கள தேசம் இல்லையென்பது மீண்டும் மீண்டும் யதார்த்தமாக இருக்கிறது. இந்த வரலாற்றை சொல்லிச் சொல்லியே அது நமக்கு மனப்பாடமாகி விட்டது. எனவே, இந்தக் காலத்திற்கான நமது பணியென்பது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலோடு குரலாகக் கலப்பதுதான். நீண்ட நாட்களாக சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்த ஒரு விடயத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. எனது பார்வை தமிழ்த் தேசியத்துள் வாழ விரும்புகின்ற ஒரு சாதாரன குடிமகனின் பார்வையே அன்றி, வேறு ஒன்றுமில்லை. இவ்வாறான பார்வைகளை புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு வேலைதான் என்றும் சிலர் மதிப்படக் கூடும். நீதியின் பக்கம் நிற்பதும் உண்மையின் பக்கமாக நிற்பதும் வக்காலத்து வாங்குதல் என்ற அர்த்தம் பெறுமாக இருந்தால், அந்த வக்காலத்து வாங்கலை தொடர்ந்து செய்வதில் நாம் ஏன் பின்நிற்க வேண்டும்.
யதீந்திரா

