03-16-2006, 04:22 PM
என் உறவுகளோடு மனம் விட்டுப் பேசலாமா?
எனக்குள்ளேயே எழும் கேள்விகள் ஆயிரம் ஆயிரம்.............
வந்த பாதைகள் மறந்திருக்கும்
தாய் கொடுத்த பால் கூட சுவை மாறியிருக்கும்
மனதில் நினைவுகளாய் கூட இருக்காது
காரணம் நாம் குழந்தைகளாய் இருந்தோம்.
மனதில் நினைவுகளாய் நின்றவை
நாம் வளர்ந்த பின்னர் பார்த்தவை - கேட்டவை - அனுபவித்தவை......................
இறந்து போன ஒருவரைப் பற்றி
விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
இப்படிச் சொல்வதால் என்னை வெறுக்கலாம்..............
இருந்தாலும் உண்மையை ஒரு நாள் நேசித்தே ஆக வேண்டும்.
அது மானிட நியதி................
புஸ்பராஜனின் புத்தகம் உண்மையில் பலர் படிக்க வேண்டிய ஒன்று...........
அதில் எத்தனையோ குறைகள் இருந்தாலும்
பலர் எண்ணத் துணியாத ஒன்றை செய்திருக்கிறார்.
அவர் தனது நேர்காணலில்:
"பிரபாகரனைப் பொறுத்தவரை எத்தனையோ சோதனைகளை, மனிதர்களை, களங்களைச் சந்தித்தவர். அவர் எழுத நிறைய இருக்கிறது." என்றும் குறிப்பிடுகிறார்.
இது முற்று முழுதான உண்மை.
அவர் தன்னைப் பற்றி சொல்கிறார்.
தன் வாழ் நாளில் சந்தித்த கடந்து வந்த பாதையைப் பற்றிச் சொல்கிறார்.
இதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
ஆரம்ப கால போராளிகளின் கனவு தமிழீழம் ஒன்றை அடைவது .
சிங்கள அரசுக்கு எதிராகப் போராடுவது
இவையே குறிக் கோளாக இருந்தது.
அது காலப்போக்கில் குழுவிசமாகி திசை மாறியது.
ஒரு துணியை வாங்க நாம் எத்தனையோ
கடைகளுக்கு ஏறி இறங்கி
விலை - தரம் இப்படி எத்தனையோ விடயங்களை அறிந்தே வாங்குகிறோம்.
ஆனால்
அன்று இயக்களில் இணைந்த எவருமே
யாரோடு போகிறோம்
என்ன செய்யப் போகிறோம் என்ற
எந்த ஒரு தேடலும் இல்லாமல்
சிங்கள போலீஸ் மற்றும் இராணுவத்துக்கு எதிராக போராட
சென்றார்களே ஒழிய
இவர்களது தலைவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா? தொடர்ந்து நிற்பார்களா? என்ற எதுவித
கேள்வியோ பார்வையோ இல்லாமல்
உணர்ச்சி மேலீட்டால் இணைந்தவர்கள்தான்............அதிகம்.
யாருக்கும் எந்த இயக்கத்துக்கு போகிறோம் என்பது கூட
போய் சேரும் வரை தெரியாமல் இருந்ததை விபரம் தெரிந்தவர்கள் கதை கதையாய் சொல்வார்கள்.
ஒன்றாய் வெளியேறிய நண்பர்களும் சரி கூடவே பிறந்த சகோதரர்களும் சரி
ஆள் மாறி இடம் மாறி
வேறு வேறு இயக்கங்களுக்குப் போய்
இறுதியில் கூடப் பிறந்த சகோதரனையே கொன்ற நிகழ்வுகளும் இங்கே நடைபெறாமல் இல்லை.
நாம் கூட வெளிநாடு போவதென்ற முடிவோடு மட்டும்தான்
நாட்டை விட்டு வெளியேறினோம்.
நாம் வந்த நாடுகள் நாம் நினைத்த விதத்திலான நாடுகள் இல்லை.
வந்து விழுந்த பின்னர் இங்கே வீழ்ந்து கிடக்கிறோம்.
இப்படித்தான் அன்றைய போராட்டத்துக்காக சென்ற அனைவரும்..................
இதில் மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கிறேன்.
இன்றைய நிலை வேறு.............
இன்று யார் பலமானவர்கள்
தொடர்ந்து போராடப் போறவர்கள் என்று
சிறு குழந்தையைக் கேட்டால் கூட சொல்லும்.
எதிரிகள் கூட என்ன
உலகமே விடுதலைப் புலிகளோடுதான்
பேசவேண்டும் என்ற நிலை.................
<b>நமது போராட்டம் யாருக்காக?</b>
நமது இனத்துக்காக என்றால்
நமது இனத்தின் ஒருவன் நமக்கு எதிரியானாலும்
அவனது இறப்பில் அவனை மதிப்பது நமது கடமை...........
இது ஒரு பாரம்பரிய முறை.........
எதிர் கருத்து கொண்ட ஒருவர் கூட
நம்மை ஏற்றுக் கொள்வதற்கு அது நிச்சயம் வழி வகுக்கும்.
நாமே நமது இனத்தின் நம்பிக்கையை பெறுவதை விட்டு விட்டு
நம் மேல் அச்சம் ஏற்பட வழி வகுக்க வைப்பது பொது எதிரிக்குத்தான் பலத்தை கொடுக்கும்.
இன்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்பவர்கள்
மனம் மாறியிருந்தாலும்
மேல் கூறும் அச்சங்களே
விலகி நிற்பதற்கு வித்திட்டுள்ளது.
இவை அகன்று நமது இனம் ஒன்று பட வேண்டும்.
அன்று உலகத் தமிழினத்தின் முரசம் உலகெங்கும் பறையாய் முழங்கும்.
அன்புடன்
அஜீவன்
<b>அவர் பற்றிய குறிப்பொன்று:-</b>
எனக்குள்ளேயே எழும் கேள்விகள் ஆயிரம் ஆயிரம்.............
வந்த பாதைகள் மறந்திருக்கும்
தாய் கொடுத்த பால் கூட சுவை மாறியிருக்கும்
மனதில் நினைவுகளாய் கூட இருக்காது
காரணம் நாம் குழந்தைகளாய் இருந்தோம்.
மனதில் நினைவுகளாய் நின்றவை
நாம் வளர்ந்த பின்னர் பார்த்தவை - கேட்டவை - அனுபவித்தவை......................
இறந்து போன ஒருவரைப் பற்றி
விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
இப்படிச் சொல்வதால் என்னை வெறுக்கலாம்..............
இருந்தாலும் உண்மையை ஒரு நாள் நேசித்தே ஆக வேண்டும்.
அது மானிட நியதி................
புஸ்பராஜனின் புத்தகம் உண்மையில் பலர் படிக்க வேண்டிய ஒன்று...........
அதில் எத்தனையோ குறைகள் இருந்தாலும்
பலர் எண்ணத் துணியாத ஒன்றை செய்திருக்கிறார்.
அவர் தனது நேர்காணலில்:
"பிரபாகரனைப் பொறுத்தவரை எத்தனையோ சோதனைகளை, மனிதர்களை, களங்களைச் சந்தித்தவர். அவர் எழுத நிறைய இருக்கிறது." என்றும் குறிப்பிடுகிறார்.
இது முற்று முழுதான உண்மை.
அவர் தன்னைப் பற்றி சொல்கிறார்.
தன் வாழ் நாளில் சந்தித்த கடந்து வந்த பாதையைப் பற்றிச் சொல்கிறார்.
இதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
ஆரம்ப கால போராளிகளின் கனவு தமிழீழம் ஒன்றை அடைவது .
சிங்கள அரசுக்கு எதிராகப் போராடுவது
இவையே குறிக் கோளாக இருந்தது.
அது காலப்போக்கில் குழுவிசமாகி திசை மாறியது.
ஒரு துணியை வாங்க நாம் எத்தனையோ
கடைகளுக்கு ஏறி இறங்கி
விலை - தரம் இப்படி எத்தனையோ விடயங்களை அறிந்தே வாங்குகிறோம்.
ஆனால்
அன்று இயக்களில் இணைந்த எவருமே
யாரோடு போகிறோம்
என்ன செய்யப் போகிறோம் என்ற
எந்த ஒரு தேடலும் இல்லாமல்
சிங்கள போலீஸ் மற்றும் இராணுவத்துக்கு எதிராக போராட
சென்றார்களே ஒழிய
இவர்களது தலைவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா? தொடர்ந்து நிற்பார்களா? என்ற எதுவித
கேள்வியோ பார்வையோ இல்லாமல்
உணர்ச்சி மேலீட்டால் இணைந்தவர்கள்தான்............அதிகம்.
யாருக்கும் எந்த இயக்கத்துக்கு போகிறோம் என்பது கூட
போய் சேரும் வரை தெரியாமல் இருந்ததை விபரம் தெரிந்தவர்கள் கதை கதையாய் சொல்வார்கள்.
ஒன்றாய் வெளியேறிய நண்பர்களும் சரி கூடவே பிறந்த சகோதரர்களும் சரி
ஆள் மாறி இடம் மாறி
வேறு வேறு இயக்கங்களுக்குப் போய்
இறுதியில் கூடப் பிறந்த சகோதரனையே கொன்ற நிகழ்வுகளும் இங்கே நடைபெறாமல் இல்லை.
நாம் கூட வெளிநாடு போவதென்ற முடிவோடு மட்டும்தான்
நாட்டை விட்டு வெளியேறினோம்.
நாம் வந்த நாடுகள் நாம் நினைத்த விதத்திலான நாடுகள் இல்லை.
வந்து விழுந்த பின்னர் இங்கே வீழ்ந்து கிடக்கிறோம்.
இப்படித்தான் அன்றைய போராட்டத்துக்காக சென்ற அனைவரும்..................
இதில் மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கிறேன்.
இன்றைய நிலை வேறு.............
இன்று யார் பலமானவர்கள்
தொடர்ந்து போராடப் போறவர்கள் என்று
சிறு குழந்தையைக் கேட்டால் கூட சொல்லும்.
எதிரிகள் கூட என்ன
உலகமே விடுதலைப் புலிகளோடுதான்
பேசவேண்டும் என்ற நிலை.................
<b>நமது போராட்டம் யாருக்காக?</b>
நமது இனத்துக்காக என்றால்
நமது இனத்தின் ஒருவன் நமக்கு எதிரியானாலும்
அவனது இறப்பில் அவனை மதிப்பது நமது கடமை...........
இது ஒரு பாரம்பரிய முறை.........
எதிர் கருத்து கொண்ட ஒருவர் கூட
நம்மை ஏற்றுக் கொள்வதற்கு அது நிச்சயம் வழி வகுக்கும்.
நாமே நமது இனத்தின் நம்பிக்கையை பெறுவதை விட்டு விட்டு
நம் மேல் அச்சம் ஏற்பட வழி வகுக்க வைப்பது பொது எதிரிக்குத்தான் பலத்தை கொடுக்கும்.
இன்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்பவர்கள்
மனம் மாறியிருந்தாலும்
மேல் கூறும் அச்சங்களே
விலகி நிற்பதற்கு வித்திட்டுள்ளது.
இவை அகன்று நமது இனம் ஒன்று பட வேண்டும்.
அன்று உலகத் தமிழினத்தின் முரசம் உலகெங்கும் பறையாய் முழங்கும்.
அன்புடன்
அஜீவன்
<b>அவர் பற்றிய குறிப்பொன்று:-</b>
Quote:<b>ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான திரு புஸ்பராசா அவர்கள் பிரான்ஸ் நாட்டில் காலமானார்</b>
<img src='http://thenee.com/assets/images/Pushparajah1.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான திரு புஸ்பராசா அவர்கள் (54) இலங்கை வடமாகாணத்தின் கடலோரக் கிராமமான மயிலிட்டியில் பிறந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியில் 1969 ம் ஆண்டு இணைந்து ஈழமக்களின் அரசியலில் பிரவேசித்த அவர், பின்னர் தமிழ் மாணவர் பேரவையின் தீவிர செயற்பாட்டாளராகவும் இயங்கினார். தமிழ் பேசும் மக்களின் அரசியல் விடுதலை முன்னெடுப்புக்களில் தீவிர அக்கறையும் பெரும் தாக்கத்தையும் உருவாக்கி ஆயதம் தாங்கிய போராட்டத்திற்கு வழிவகுத்து தமிழ் இளைஞர் பேரவையை ஆரம்பித்த இவர் அதன் முதலாவது தலைவராகவும் செயலாற்றினார். ஈழத்து மிதவாத அரசியல் தலைமையை நிராகரித்து தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினையில் தீவிரவாதத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபர்களில் ஒருவரும் அதன் செயலாளராகவும் விளங்கினார்;
1974-1980 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் சிறைக்கூடங்களான யாழ் சிறைச்சாலை, கொழும்பு வெலிக்கடை ஆகியவற்றிலும் மற்றும் பனாகொடை ராணுவத் தடுப்பு முகாமிலும் பல வருடங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார் இடது சாரிக் கருத்துக்களில் மிக்க ஈடுபாடும் அக்கறையும்கொண்ட இவர் பிரான்ஸ் நாட்டில் அரசியல் அந்தஸ்துப்பெற்று அகதியாக வாழ்ந்த போதும் இலக்கிய செயற்பாடுகளோடு இறுதி வாழ்க்கை வரை தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தார்

