03-16-2006, 12:18 PM
தீராநதி: இலங்கைக்குத் திரும்பிப் போகவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அது முடியுமா?
சி.புஷ்பராஜா: நான் பிறந்து வளர்ந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாகவே இருக்கிறது. ஆனால் எங்கள் கிராமம் சிங்கள ராணுவத்தினரால் அதிபாதுகாப்பு வலையமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தை இப்போதைக்குப் பார்க்க முடியாது. இலங்கையிலிருந்து வெளியே வந்ததிலிருந்து இன்றைக்கு வரைக்கும் நான் கள்ளு குடித்ததில்லை. உலகத்திலேயே மிகச் சுவையான கள்ளுஇ யாழ்ப்பாணத்துக் கள்ளுதான். அதை நான் இழந்துவிட்டேன். அது பெரிய இழப்புதான். பனைமரத்தின் கீழே உட்கார்ந்து கள்ளைக் குடிக்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவாவது ஒருமுறை யாழ்ப்பாணம் போகவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் இலங்கையில் என்னுடைய பாதுகாப்பு தொடர்பாக எனக்கு அச்சங்கள் இருக்கிறது. அந்த அச்சம் தவறானதாகக் கூட இருக்கலாம். என்றாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் இலங்கைக்கு நான் போவதென்பது முட்டாள்தனமான முடிவாகத்தான் இருக்கும். ஏனெனில் போராளிகளின் கோபத்தை நான் சம்பாதித்துவிட்டேன். இலங்கை அரசின் எதிர்ப்பும் ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கிறது. இரண்டு தரப்பினரிடமும் மண்டியிட்டு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்கவும் நான் தயாராக இல்ல. நான் தவறு செய்துவிட்டதாகவும் நான் கருதவில்லை.
ஆனால்இ அப்படியே சென்றாலும் அங்கே சென்று தங்கி வாழ்வதென்பது சாத்தியமில்லை. எனக்கு மட்டுமல்லஇ புகலிடத்தில் இருக்கும் அனேகம் பேருக்கு மீண்டும் போய் இலங்கையில் வாழ்வது என்பது சாத்தியமற்றது என்பதுதான் என் முடிவு. போராட்டம் முடிவுக்கு வந்தாலும் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் திரும்பி இலங்கைக்கு போகமாட்டார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். இலங்கைக்குத் திரும்பிப்போய் அவர்கள் வாழப்போகும் வாழ்க்கையைவிடஇ வெளிநாடுகளில் அவர்கள் சௌகர்யமாக வாழ்கிறார்கள். நான் சொல்வதை யாராவது மறுப்பார்கள் எனில் அதனை வறட்டுவாதம் என்றுதான் நான் சொல்வேன். இங்கே சம்பாதிக்கும் பணத்தைச் போராட்டத்துக்காகஇ செலவழிப்பார்கள். அங்கேயிருந்து பொருள்களை வரவழைத்துச் சாப்பிடுவார்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலங்கை போய் இங்கே சம்பாதித்த பணத்தை செலவழித்து பந்தா காண்பித்துவிட்டுத் திரும்புவார்கள். ஆனால் அங்கே நிரந்தரமாகத் தங்கி வாழ நிச்சயம் விரும்பமாட்டார்கள்.
தீராநதி: நீங்கள் ஆயுதம் தாங்கிய ஒரு போராளியாகத் தொடங்கிஇ ஒரு அகதியாக இன்று வாழ்ந்து வருகிறீர்கள். இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
சி. புஷ்பராஜா: உரிமைப் போராட்டமாக இருந்த எமது போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக மாற்றிஇ தலைமையை இளைஞர்களின் கைகளில் எடுத்த முன்னோடிகளில் நானும் ஒருவன். இரண்டு இளைஞர்கள் இயக்கத்துக்குத் தலைமை தாங்கியுள்ளேன். இலங்கையின் ஒருமுனையில் இருந்து மறுமுனைவரை குறுக்கவும் நெடுக்கவும் அலைந்து இளைஞர்களை ஒன்று திரட்டி பின்னால் வந்த இயக்கங்களுக்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளேன். இதுகுறித்த நிறைவு எனக்கு உண்டு. ஆனால் எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடப் போகிறோம் எனப் புறப்பட்டோமோ அந்த மக்களை இழப்பதுக்கு எதுவுமற்றும்இ தப்புவதுக்கு வழியுமற்றும்இ தவம்புரியும் ஊமை மக்களாகப் பரிதவிக்க விட்டுவிட்டு தப்பியோடி வந்துவிட்டேன் என்ற குற்றவுணர்வினால் தினமும் நான் வேதனைப்படுகிறேன். ஆனால் என்னால் என்னதான் செய்யமுடியும்? எனது நிலைஇ கைகளைப் பிசைந்து கொண்டிருக்கும் நிலையே.
சந்திப்பு : தளவாய் சுந்தரம்
சி.புஷ்பராஜா: நான் பிறந்து வளர்ந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாகவே இருக்கிறது. ஆனால் எங்கள் கிராமம் சிங்கள ராணுவத்தினரால் அதிபாதுகாப்பு வலையமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தை இப்போதைக்குப் பார்க்க முடியாது. இலங்கையிலிருந்து வெளியே வந்ததிலிருந்து இன்றைக்கு வரைக்கும் நான் கள்ளு குடித்ததில்லை. உலகத்திலேயே மிகச் சுவையான கள்ளுஇ யாழ்ப்பாணத்துக் கள்ளுதான். அதை நான் இழந்துவிட்டேன். அது பெரிய இழப்புதான். பனைமரத்தின் கீழே உட்கார்ந்து கள்ளைக் குடிக்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவாவது ஒருமுறை யாழ்ப்பாணம் போகவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் இலங்கையில் என்னுடைய பாதுகாப்பு தொடர்பாக எனக்கு அச்சங்கள் இருக்கிறது. அந்த அச்சம் தவறானதாகக் கூட இருக்கலாம். என்றாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் இலங்கைக்கு நான் போவதென்பது முட்டாள்தனமான முடிவாகத்தான் இருக்கும். ஏனெனில் போராளிகளின் கோபத்தை நான் சம்பாதித்துவிட்டேன். இலங்கை அரசின் எதிர்ப்பும் ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கிறது. இரண்டு தரப்பினரிடமும் மண்டியிட்டு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்கவும் நான் தயாராக இல்ல. நான் தவறு செய்துவிட்டதாகவும் நான் கருதவில்லை.
ஆனால்இ அப்படியே சென்றாலும் அங்கே சென்று தங்கி வாழ்வதென்பது சாத்தியமில்லை. எனக்கு மட்டுமல்லஇ புகலிடத்தில் இருக்கும் அனேகம் பேருக்கு மீண்டும் போய் இலங்கையில் வாழ்வது என்பது சாத்தியமற்றது என்பதுதான் என் முடிவு. போராட்டம் முடிவுக்கு வந்தாலும் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் திரும்பி இலங்கைக்கு போகமாட்டார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். இலங்கைக்குத் திரும்பிப்போய் அவர்கள் வாழப்போகும் வாழ்க்கையைவிடஇ வெளிநாடுகளில் அவர்கள் சௌகர்யமாக வாழ்கிறார்கள். நான் சொல்வதை யாராவது மறுப்பார்கள் எனில் அதனை வறட்டுவாதம் என்றுதான் நான் சொல்வேன். இங்கே சம்பாதிக்கும் பணத்தைச் போராட்டத்துக்காகஇ செலவழிப்பார்கள். அங்கேயிருந்து பொருள்களை வரவழைத்துச் சாப்பிடுவார்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலங்கை போய் இங்கே சம்பாதித்த பணத்தை செலவழித்து பந்தா காண்பித்துவிட்டுத் திரும்புவார்கள். ஆனால் அங்கே நிரந்தரமாகத் தங்கி வாழ நிச்சயம் விரும்பமாட்டார்கள்.
தீராநதி: நீங்கள் ஆயுதம் தாங்கிய ஒரு போராளியாகத் தொடங்கிஇ ஒரு அகதியாக இன்று வாழ்ந்து வருகிறீர்கள். இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
சி. புஷ்பராஜா: உரிமைப் போராட்டமாக இருந்த எமது போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக மாற்றிஇ தலைமையை இளைஞர்களின் கைகளில் எடுத்த முன்னோடிகளில் நானும் ஒருவன். இரண்டு இளைஞர்கள் இயக்கத்துக்குத் தலைமை தாங்கியுள்ளேன். இலங்கையின் ஒருமுனையில் இருந்து மறுமுனைவரை குறுக்கவும் நெடுக்கவும் அலைந்து இளைஞர்களை ஒன்று திரட்டி பின்னால் வந்த இயக்கங்களுக்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளேன். இதுகுறித்த நிறைவு எனக்கு உண்டு. ஆனால் எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடப் போகிறோம் எனப் புறப்பட்டோமோ அந்த மக்களை இழப்பதுக்கு எதுவுமற்றும்இ தப்புவதுக்கு வழியுமற்றும்இ தவம்புரியும் ஊமை மக்களாகப் பரிதவிக்க விட்டுவிட்டு தப்பியோடி வந்துவிட்டேன் என்ற குற்றவுணர்வினால் தினமும் நான் வேதனைப்படுகிறேன். ஆனால் என்னால் என்னதான் செய்யமுடியும்? எனது நிலைஇ கைகளைப் பிசைந்து கொண்டிருக்கும் நிலையே.
சந்திப்பு : தளவாய் சுந்தரம்

