02-06-2004, 09:29 PM
kuruvikal Wrote:கொழும்புத் தமிழன் என்று ஒருத்தர் சிறிலங்காவில் இல்லை...இருப்பது சிங்கள நிர்வாகத்தால் வகுக்கப்பட்ட இரண்டு பிரிவுகள்...ஒன்று இலங்கைத் தமிழர் மற்றது இந்தியத்தமிழர்....! இதுவும் தமிழர்களைப் பிரித்தாளவும் தமிழர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் திட்டத்தின் ஒருபகுதியே.....!
எனவே இப்படியாக தமிழர் மத்தியில் மீண்டும் பிரதேச பிரிவினையைத் தூண்ட முயலும் பிற்போக்குவாதக் கருத்துக்களை நாம் மிகவும் அவதானத்துடன் நோக்க வேண்டும்....இப்படியான பிரதேச பிரிவினைகள் முன்னர் பழைய சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு செழிப்புடன் வளர்க்கப்பட்டதும் பின்னர் தமிழர்களின் தேச விடுதலைப் போராட்டதில் எல்லாத்தமிழரும் மலைய மக்கள் உட்பட அனவரும் ஒன்றிணைந்து ஒரு கொள்கையுடன் போராடியதன் வாயிலாக அந்தப் பிற்போக்கான சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டன....!
எனவே யாழ் களம் போன்ற முற்போக்குவாத சிந்தனைக் களமொன்றில் இப்படியான பிற்போக்குச் சிந்தனைகள் அறிந்தோ அறியாமலோ புகுத்தப்படுவதை தமிழர்கள் என்ற வகையில் நாம் வருத்தத்துடன் நோக்குகின்றோம்.....! இன்று கொழும்பு வாழ் மனோ கணேசனும் மலையகம் வாழ் சந்திரசேகரனும் மற்றும் பலரும் வடக்குக் கிழக்கு மக்களுக்கும் வழிகாட்டிகளாக உள்ளதை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும்...இப்படியான ஒரு ஒருநிலைப்பட்ட தமிழர்களின் ஒற்றுமையை கடந்தகால வரலாறுகளில் நாம் காண முடிந்திருக்கவில்லை...இந்த ஒற்றுமை என்றும் வளர்க்கப்பட வேண்டும் என்று நாம் காத்திருக்கும் வேளையில் இப்படியான பிரதேசவாதக் கருத்துக்கள் யாழில் விதைக்கப்படுவது வருத்தமளிக்கிறது....!
இப்படியான பிரதேசவாதக் கருத்துக்கள் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் தமிழ் காங்கிரசாலும் தமது அரசியல் நலன்களுக்காக வளர்க்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.....இவற்றிற்கு சில மலையகத் தலைமைகளும் தமது அரசியல் சுயநலம் கருதி உடந்தையாக இருந்தன....! மீண்டும் அப்படியான ஒரு நிலை எமக்கு வேண்டுமா...??? அதுவும் எமது தாய் மொழி தொடர்பில் புகுத்தப்படும் இவ்வாறன பிற்போக்குச் சிந்தனைகள் தேவையா.....???????!
:twisted: :evil: :?::twisted: :evil:
ஆனா இன்னிக்கு வரைக்கும் மலையக மக்களை இந்திய தமிழர்னு சொல்லி பிரிச்சுதான் வைச்சிருக்கம். அதுதான் உண்மை அதுக்கு காரணமும் புலிங்கதான்.


:twisted: :evil: