03-14-2006, 01:23 PM
மேலும் ஒரு பல்கலைக் கழகமானது,அது சார்ந்தா சமுதாயத்திற்கு என்ன செய்தது, என்பதைத் தீர்மானிப்பது ,அப் பல்கலைக் கழகம் அது இயங்கும் சமூகத்தில் உள்ள பொருளாதார,சமூக,பண்பாட்டு நிலயை எந்த அளவுக்கு உயர்த்துகிறது என்பதில் தங்கி உள்ளது.அப் பல்கலைக் கழகத்தில் நடை பெறும் ஆராச்சிகள் ,துறைகள்,பாட விதானம் என்பவை அச் சமூகத்தின் ,பொருளாதார இலக்குகளுடன் ஒத்துப் போக வேண்டும்.வெளியேறும் மாணவர்களை அங்கே நிலவும் தொழிற்துறயோ அல்லது நிறுவனங்களோ உள்வாங்கா விட்டால் அவர்கள் பெற்ற கல்வியினால் எதுவித பயனும் இல்லை.அவர்கள் வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்து ,தமது கல்வியை இன்னொரு நாட்டை வளம் படுதுவதற்கே பயன் படுத்துவர். ஆகவே இங்கே பல்கலைக் கழகத்தை அது சூழ உள்ள சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தி அபிவிருத்தி செய்ய முடியாது.சூழ உள்ள அரசியல்,பொருளாதார காரணிகள் அதன் செயற்பாட்டில், நோக்கில் தாக்கம் செலுத்துகின்றன.தமிழர்களின் தேசிய பொருளாதரா வளர்ச்சியானது ,அடிப்படைக் கல்வி,உயர்கல்வி, பொருளாதார இலக்குகள்,உற்பத்தித் துறை வளர்ச்சி,தொழில் நுட்பத் திறன், என்கின்ற பல்வேறு இலக்குகளை ஒருங்கிணைத்து மேற் கொள்ளப் படும் பொருளாதார திட்டமிடலாலெயே சாத்தியப் படும்.ஆகவே யாழ்ப் பல்கலைக் கழகம் தமிழ் மக்களுக்கு பயன் தரும் வண்ணம் செயற்பட, அது தமிழ் தேசிய அரசின் கீழ் நிர்வகிக்கப் பட வேண்டும்.இது யாழ் மண் சிரிலங்கா அரசின் பிடியில் இருந்து விடிவிக்கப் பட்டாலயே சாத்தியப் படும்.
ஆகவே தற்போதய தேவை இராணுவத்தை யாழ் மண்ணில் இருந்து வெளியேற்று வதற்கான ஒருங்கு பட்ட அரசியல் போராட்டங்களும், இராணுவ அடக்குமுறையய் சர்வதேச ரீதியாக அம்பலப் படுத்தும் வெகு ஜனப் போராட்டங்களுமே.இவற்றைத் தடுக்கும் நோக்கிலயே கூலின் நியமனம் இடம் பெறுகிறது. நாம் இதனாலயே இதனை எதிர்க்க வேண்டும்.பூரண அரசியல்,பொருளாதார விடுதலய் இன்றி எமக்கு உண்மயான அபிவிருத்தி கிட்டாது.சிரிலங்கா அரசின் தற்காலிக உதவியானது போராட்டத்தை தணிக்கும் நோக்கில் அமைந்தது, அது அதன் நோக்கம் நிறைவேற்றப் பட்டதும், மீண்டும் பழய நிலைக்கே செல்லும்.உலகளாவிய ரீதியில் தோற்கடிக்கப் பட்ட போராட்டங்களினதும் ,மக்களினதும் அனுபவம் அதுவே.ஆகவே நாம் இந்தச் சதிகளை நன்கு உணர்ந்து என்றும் அரசியல் ரீதியாக விழிப்புள்ள மக்களாக இருப்பது அவசியம்.என்றும் எமது இலக்கில் இருந்து வழுவாது, தெளிவுடன் இருப்போம்.
ஆகவே தற்போதய தேவை இராணுவத்தை யாழ் மண்ணில் இருந்து வெளியேற்று வதற்கான ஒருங்கு பட்ட அரசியல் போராட்டங்களும், இராணுவ அடக்குமுறையய் சர்வதேச ரீதியாக அம்பலப் படுத்தும் வெகு ஜனப் போராட்டங்களுமே.இவற்றைத் தடுக்கும் நோக்கிலயே கூலின் நியமனம் இடம் பெறுகிறது. நாம் இதனாலயே இதனை எதிர்க்க வேண்டும்.பூரண அரசியல்,பொருளாதார விடுதலய் இன்றி எமக்கு உண்மயான அபிவிருத்தி கிட்டாது.சிரிலங்கா அரசின் தற்காலிக உதவியானது போராட்டத்தை தணிக்கும் நோக்கில் அமைந்தது, அது அதன் நோக்கம் நிறைவேற்றப் பட்டதும், மீண்டும் பழய நிலைக்கே செல்லும்.உலகளாவிய ரீதியில் தோற்கடிக்கப் பட்ட போராட்டங்களினதும் ,மக்களினதும் அனுபவம் அதுவே.ஆகவே நாம் இந்தச் சதிகளை நன்கு உணர்ந்து என்றும் அரசியல் ரீதியாக விழிப்புள்ள மக்களாக இருப்பது அவசியம்.என்றும் எமது இலக்கில் இருந்து வழுவாது, தெளிவுடன் இருப்போம்.

