03-11-2006, 06:16 PM
ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 3)
அமெரிக்காவும் மேற்குலகமும் விடுதலைப்புலிகளின் பலத்தினாலேயே ஈழத்துக்குள் இராணுவரீதியாக தலையிட தயங்குகின்றன. ஆனால் மேற்குல நாடுகளை எப்படியாவது தலையிட வைக்க வேண்டும் என்று பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஜெயதேவனும்இ அவரை சார்ந்தவர்களும் விரும்புகின்றனர். இதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தும் விட்டனர்.
ஜெயதேவன் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் மட்டும் அல்ல. அவர் பிரித்தானியாவின் ஆளுங் கட்சியான தொழிற் கட்சியில் அங்கம் வகிப்பிவர். பல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ராஜதந்திரிகளுடனும் தொடர்பை வைத்திருப்பவர். ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றிருக்கும் இவருக்கு வரக்கூடாத ஆசை ஒன்று வந்திருக்கின்றது. அதுதான் தமிழர் தாயகத்தின் முதலமைச்சர் ஆவது. அவருக்கு இவ்வாறான ஒரு ஆசை இருப்பது அவரை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு விளங்கும்.
இதை விளங்கப்படுத்தும் முன்பு இன்னொரு செய்தியையும் பார்க்க வேண்டும். ஈராக்கில் சதாமின் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் அமெரிக்காவின் கைப் பொம்மையாக இருந்து ஆட்சி நடத்திய இயாட் அலாவி என்பவர் நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்தவர். இப்ராகிம் அல் ஜவாரி என்கின்ற இன்றைய ஈராக்கிய பிரதமரும் முன்பு லண்டனில் வாழ்ந்தவரே. இவர்கள் லண்டனில் வாழ்ந்த பொழுது அங்கே கட்சிகளை நடத்திக் கொண்டு சதாமிற்கு எதிராக ஊர்வலங்களை நடத்திக் கொண்டு பொழுதை கழித்துக் கொண்டிருந்தவர்கள். அமெரிக்க பிரித்தானிய ராஜதந்திர வட்டாரங்களுடன் நெருங்கிய உறவை பேணி வந்தவர்கள். இன்று அமெரிக்கஇ பிரித்தானியா நாடுகளின் துணையோடு அதிகாரத்தை சுவைத்தபடி இருக்கின்றனர்
இவர்களைப் போன்று லண்டனில் வாழும் ஜெயதேவனும் தமிழ் ஜனநாயக காங்கிரஸ் என்னும் ஒரு கட்சியை உருவாக்கியுள்ளார். (அந்தக் கட்சியின் முக்கிய தளபதி இப்பொழுது உள்ளே இருப்பது வேறு விடயம்) இந்தக் கட்சியின் மூலம் விடுதலைப்புலிகளை ஐரோப்பிவில் விமர்சிப்பவகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்பதற்கு முனைகின்றார். இவர் கட்சியை ஆரம்பித்ததும் பல இடங்களில் கைக்கூலிகளின் துணையுடன் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான ஊர்வலங்களை நடத்துகின்றார். என்றும் இல்லாதவாறு விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து செல்வதற்கு ஓடியாடி வேலை செய்கின்றார். அதன் மூலம் மேற்குலகை ஈழத்தில் "மேலதிக" பங்கினை வழங்கும்படி வலியுறுத்துகின்றார். தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை துன்புறுத்துவதாக பொய்யான பிரச்சாரம் செய்துஇ மேற்குலகை ஈழத்தில் தலையிடுவதற்கு அழுத்தம் கொடுக்கின்றார்.
விடுதலைப்புலிகளை விமர்சிப்பதை தொழிலாக கொண்டிருக்கும் ரிபிசி வானொலியில் ஜெயதேவன் முற்று முழுதான செல்வாக்கை செலுத்துகின்றார். இந்த வானொலி மூலம் தன்னுடைய ஈழத்தின் முதலமைச்சர் ஆவதற்கான பிரச்சாரத்தை செய்து வருகின்றார். அவர் அந்த வானொலியில் அடிக்கடி சொல்வதை கவனியுங்கள்
கண்காணிப்புக் குழுவுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - மேற்குலக நாடுகள் அதிக அக்கறை காட்ட வேண்டும் - விடுதலைப்புலிகள் பலமிழந்து போய் விட்டார்கள் - விடுதலைப்புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை - தமிழீழத்தில் இருப்பவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் - தமிழ் புத்திஜீவிகள் வெளிநாட்டிலேயே வாழ்கிறார்கள்
இந்த பிரச்சாரத்தை அவர் மேற்குலக ராஜதந்திரிகள் மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றார். மேற்குலக நாடுகளை குறிப்பாக அமெரிக்காவை முழுமையாக ஈழத்தில் தலையிடுமாறு வலியுறுத்தும் ஜெயதேவன்இ விடுதலைப்புலிகள் மக்கள் ஆதவரவு அற்று பலமிழந்து போய்விட்டார்கள் என்கின்ற பிரச்சாரத்தின் மூலம்இ விடுதலைப்புலிகளின் பலம் பற்றி அமெரிக்கா கொண்டிருக்கும் அச்சத்தை போக்க முனைகின்றார். அவ்வாறு அமெரிக்கா தலையிட்டு விடுதலைப்புலிகளை விரட்டியடித்து விட்டுஇ ஈழத்தில் உள்ளவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்பதால் புத்திஜீவியான தன்னிடம் தமிழ்மாநிலத்தின் அதிகாரத்தை தரவேண்டும் என்று மறைமுகமாக அமெரிக்காவை கெஞ்சுகின்றார். ஈராக்கில் செய்ததை ஈழத்தில் செய்யும்படி கேட்கின்றார்.
ஜெயதேவனிடம் அதிகார ஆசை இல்லையெனில்இ அவர் "காங்கிரஸ்" என்னும் பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்க மாட்டார். வெறுமனே ஒரு அமைப்பை தொடங்கியிருக்கலாம். ஆனால் ஜெயதேவன் அமெரிக்காவின் துணையுடன் ஈழத்துக்குள் ஜனநாயகத்தின் பெயரில் நுளையும் திட்டத்தில் இருக்கின்றார். அதனாலேயே தான் மீண்டும் வன்னிக்கு போவேன் என்று கொக்கரிக்கின்றார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய ஜெயதேவன் விடுதலைப்புலிளையும் அவர்களின் பின்னால் அணி திரண்டு நிற்கும் மக்களையும் பழி வாங்கத் துடிக்கின்றார். ஈழத்திலும் ஈராக் போன்று அபுகாறிப் சித்திரவதை முகாம்களை உருவாக்க கங்கணம் கட்டி நிற்கின்றார்.
அமெரிக்கஇ பிரித்தானிய நாடுகளும் எதற்கும் இருக்கட்டும் என்று ஜெயதேவனுடன் உறவுகளை பேணி வருகின்றனர். என்றாவது ஒரு நாள் ஈழத்தில் தலையிடும் பொழுது ஜெயதேவன் பயன்படுவார் என்பது இந்த நாடுகளுக்கு தெரியும். தற்பொழுது ஈழத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான மற்றைய குழுக்களும்இ அதன் தலைவர்களும் தமிழ் மக்களின் முற்று முழுதான வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறகள். ஆகவே இந்தக் குழுக்களை மாற்றுத் தலைமையாக தமிழர்களிடம் திணிப்பது கடினமாக இருக்கும். அது மட்டுமன்றி ஆயுதக் குழுக்களாக மட்டுமே செயற்படத் தெரிந்த இந்தக் குழுக்களை வைத்துக் கொண்டு அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் ஜனநாயக நாடகத்தை அரங்கேற்ற முடியாது. ரத்தக் கறை படியாத புதுமுகமான ஜெயதேவனுக்கு "வெளிநாட்டில் படித்த ஒரு நல்ல ஜனநாயகவாதி" என்னும் வேடத்தை கொடுத்து ஈழத்தில் வாழும் தமிழர்களினதும் மற்றைய நாடுகளினதும் கண்களையும் கட்ட முடியும் என்று மேற்குலகம் கருதுகின்றது.
ஆகவே ஜேயதேவனுக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதையிட்டும்இ எரிக்சொல்ஹைம் போன்றவர்கள் ஜெயதேவனுக்கு பதில் போடுவதையிட்டும் யாரும் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. ஜெயதேவன் கட்சி ஆரம்பித்ததன் பின்னணியிலும்இ தற்பொழுது அடிக்கடி நடக்கும் விடுதலைக்கு எதிரான ஊர்வலங்களின் பின்னணியிலும் மேற்குலக சக்திகள் இருப்பது உண்மை. விடுதலைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் அதற்கு சாட்சி.
ஈழத்தை தளமாக உபயோகிக்கும் அமெரிக்காவின் ஆசைக்கும்இ ஈழத்தின் முதலமைச்சராக ஆகும் ஜெயதேவனின் ஆசைக்கும் தற்பொழுது ஈரான் விவகாரமும் விடுதலைப்புலிகளின் பலமும் ஒரு இடைஞ்சலாக இருக்கின்றன. ஈரான் பிரச்சனையே அமெரிக்காவிற்கு இப்பொழுது முக்கிய தலைவலி. அதை தீர்க்காமல் அமெரிக்கா வேறு தலைவலிகளை வரவழைத்துக் கொள்ளாது. ஆகவே தற்போதைக்கு என்ன நடந்தாலும் அமெரிக்கா ஈழத்தில் தலையிடப் போவதில்லை. ஜெயதேவனின் ஆசை நிறைவேறப் போவதும் இல்லை. மீறி அமெரிக்கா தலையிட்டாலும் கவலைப்படத் தேவயில்லை. எங்களின் விடுதலைப்புலிகள் தமிழீழத்தை பாதுகாப்பார்கள்.
ஆயினும் புலம்பெயர் வாழ் மக்கள் தமிழினத்திற்கு எதிரான மேற்குலகின் சதிவலையில் ஜெயதேவனும் ஒரு அங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயதேவனை சில சக்திகள் பயன்படுத்துகின்றன. தன்னுடைய ஆசைக்கு இந்த சக்திகளை ஜெயதேவனும் பயன்படுத்துகின்றார். இந்தக் கூட்டணி விடுதலைப்புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல. இவர்கள் தமிழ் இனத்தின் பொது எதிரிகள். விடுதலைப்புலிகள் பற்றி மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகள் தொடக்கம் ஈழத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பை விரும்பாத அனைவரும் இந்தக் கூட்டணியின் சதித் திட்டத்தை முறியடிக்கும் வேலையில் இறங்க வேண்டும். ஈராக்கிய இளைஞர்களினதும் பெண்களினதும் நிலை தமிழ் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வர வேண்டாம். எங்கள் தமிழீழம் அமெரிக்க சப்பாத்துக்களால் நசிபட வேண்டாம். ஆகவே கருத்து வேற்றுமைகளை மறந்து அனைத்து தமிழரும் ஒன்றிணைவோம்.
-வி.சபேசன் (10.03.06)
சுட்டது:http://www.webeelam.com/EealmIranUsaJeya%203.htm
அமெரிக்காவும் மேற்குலகமும் விடுதலைப்புலிகளின் பலத்தினாலேயே ஈழத்துக்குள் இராணுவரீதியாக தலையிட தயங்குகின்றன. ஆனால் மேற்குல நாடுகளை எப்படியாவது தலையிட வைக்க வேண்டும் என்று பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஜெயதேவனும்இ அவரை சார்ந்தவர்களும் விரும்புகின்றனர். இதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தும் விட்டனர்.
ஜெயதேவன் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் மட்டும் அல்ல. அவர் பிரித்தானியாவின் ஆளுங் கட்சியான தொழிற் கட்சியில் அங்கம் வகிப்பிவர். பல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ராஜதந்திரிகளுடனும் தொடர்பை வைத்திருப்பவர். ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றிருக்கும் இவருக்கு வரக்கூடாத ஆசை ஒன்று வந்திருக்கின்றது. அதுதான் தமிழர் தாயகத்தின் முதலமைச்சர் ஆவது. அவருக்கு இவ்வாறான ஒரு ஆசை இருப்பது அவரை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு விளங்கும்.
இதை விளங்கப்படுத்தும் முன்பு இன்னொரு செய்தியையும் பார்க்க வேண்டும். ஈராக்கில் சதாமின் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் அமெரிக்காவின் கைப் பொம்மையாக இருந்து ஆட்சி நடத்திய இயாட் அலாவி என்பவர் நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்தவர். இப்ராகிம் அல் ஜவாரி என்கின்ற இன்றைய ஈராக்கிய பிரதமரும் முன்பு லண்டனில் வாழ்ந்தவரே. இவர்கள் லண்டனில் வாழ்ந்த பொழுது அங்கே கட்சிகளை நடத்திக் கொண்டு சதாமிற்கு எதிராக ஊர்வலங்களை நடத்திக் கொண்டு பொழுதை கழித்துக் கொண்டிருந்தவர்கள். அமெரிக்க பிரித்தானிய ராஜதந்திர வட்டாரங்களுடன் நெருங்கிய உறவை பேணி வந்தவர்கள். இன்று அமெரிக்கஇ பிரித்தானியா நாடுகளின் துணையோடு அதிகாரத்தை சுவைத்தபடி இருக்கின்றனர்
இவர்களைப் போன்று லண்டனில் வாழும் ஜெயதேவனும் தமிழ் ஜனநாயக காங்கிரஸ் என்னும் ஒரு கட்சியை உருவாக்கியுள்ளார். (அந்தக் கட்சியின் முக்கிய தளபதி இப்பொழுது உள்ளே இருப்பது வேறு விடயம்) இந்தக் கட்சியின் மூலம் விடுதலைப்புலிகளை ஐரோப்பிவில் விமர்சிப்பவகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்பதற்கு முனைகின்றார். இவர் கட்சியை ஆரம்பித்ததும் பல இடங்களில் கைக்கூலிகளின் துணையுடன் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான ஊர்வலங்களை நடத்துகின்றார். என்றும் இல்லாதவாறு விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து செல்வதற்கு ஓடியாடி வேலை செய்கின்றார். அதன் மூலம் மேற்குலகை ஈழத்தில் "மேலதிக" பங்கினை வழங்கும்படி வலியுறுத்துகின்றார். தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை துன்புறுத்துவதாக பொய்யான பிரச்சாரம் செய்துஇ மேற்குலகை ஈழத்தில் தலையிடுவதற்கு அழுத்தம் கொடுக்கின்றார்.
விடுதலைப்புலிகளை விமர்சிப்பதை தொழிலாக கொண்டிருக்கும் ரிபிசி வானொலியில் ஜெயதேவன் முற்று முழுதான செல்வாக்கை செலுத்துகின்றார். இந்த வானொலி மூலம் தன்னுடைய ஈழத்தின் முதலமைச்சர் ஆவதற்கான பிரச்சாரத்தை செய்து வருகின்றார். அவர் அந்த வானொலியில் அடிக்கடி சொல்வதை கவனியுங்கள்
கண்காணிப்புக் குழுவுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - மேற்குலக நாடுகள் அதிக அக்கறை காட்ட வேண்டும் - விடுதலைப்புலிகள் பலமிழந்து போய் விட்டார்கள் - விடுதலைப்புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை - தமிழீழத்தில் இருப்பவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் - தமிழ் புத்திஜீவிகள் வெளிநாட்டிலேயே வாழ்கிறார்கள்
இந்த பிரச்சாரத்தை அவர் மேற்குலக ராஜதந்திரிகள் மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றார். மேற்குலக நாடுகளை குறிப்பாக அமெரிக்காவை முழுமையாக ஈழத்தில் தலையிடுமாறு வலியுறுத்தும் ஜெயதேவன்இ விடுதலைப்புலிகள் மக்கள் ஆதவரவு அற்று பலமிழந்து போய்விட்டார்கள் என்கின்ற பிரச்சாரத்தின் மூலம்இ விடுதலைப்புலிகளின் பலம் பற்றி அமெரிக்கா கொண்டிருக்கும் அச்சத்தை போக்க முனைகின்றார். அவ்வாறு அமெரிக்கா தலையிட்டு விடுதலைப்புலிகளை விரட்டியடித்து விட்டுஇ ஈழத்தில் உள்ளவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்பதால் புத்திஜீவியான தன்னிடம் தமிழ்மாநிலத்தின் அதிகாரத்தை தரவேண்டும் என்று மறைமுகமாக அமெரிக்காவை கெஞ்சுகின்றார். ஈராக்கில் செய்ததை ஈழத்தில் செய்யும்படி கேட்கின்றார்.
ஜெயதேவனிடம் அதிகார ஆசை இல்லையெனில்இ அவர் "காங்கிரஸ்" என்னும் பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்க மாட்டார். வெறுமனே ஒரு அமைப்பை தொடங்கியிருக்கலாம். ஆனால் ஜெயதேவன் அமெரிக்காவின் துணையுடன் ஈழத்துக்குள் ஜனநாயகத்தின் பெயரில் நுளையும் திட்டத்தில் இருக்கின்றார். அதனாலேயே தான் மீண்டும் வன்னிக்கு போவேன் என்று கொக்கரிக்கின்றார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய ஜெயதேவன் விடுதலைப்புலிளையும் அவர்களின் பின்னால் அணி திரண்டு நிற்கும் மக்களையும் பழி வாங்கத் துடிக்கின்றார். ஈழத்திலும் ஈராக் போன்று அபுகாறிப் சித்திரவதை முகாம்களை உருவாக்க கங்கணம் கட்டி நிற்கின்றார்.
அமெரிக்கஇ பிரித்தானிய நாடுகளும் எதற்கும் இருக்கட்டும் என்று ஜெயதேவனுடன் உறவுகளை பேணி வருகின்றனர். என்றாவது ஒரு நாள் ஈழத்தில் தலையிடும் பொழுது ஜெயதேவன் பயன்படுவார் என்பது இந்த நாடுகளுக்கு தெரியும். தற்பொழுது ஈழத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான மற்றைய குழுக்களும்இ அதன் தலைவர்களும் தமிழ் மக்களின் முற்று முழுதான வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறகள். ஆகவே இந்தக் குழுக்களை மாற்றுத் தலைமையாக தமிழர்களிடம் திணிப்பது கடினமாக இருக்கும். அது மட்டுமன்றி ஆயுதக் குழுக்களாக மட்டுமே செயற்படத் தெரிந்த இந்தக் குழுக்களை வைத்துக் கொண்டு அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் ஜனநாயக நாடகத்தை அரங்கேற்ற முடியாது. ரத்தக் கறை படியாத புதுமுகமான ஜெயதேவனுக்கு "வெளிநாட்டில் படித்த ஒரு நல்ல ஜனநாயகவாதி" என்னும் வேடத்தை கொடுத்து ஈழத்தில் வாழும் தமிழர்களினதும் மற்றைய நாடுகளினதும் கண்களையும் கட்ட முடியும் என்று மேற்குலகம் கருதுகின்றது.
ஆகவே ஜேயதேவனுக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதையிட்டும்இ எரிக்சொல்ஹைம் போன்றவர்கள் ஜெயதேவனுக்கு பதில் போடுவதையிட்டும் யாரும் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. ஜெயதேவன் கட்சி ஆரம்பித்ததன் பின்னணியிலும்இ தற்பொழுது அடிக்கடி நடக்கும் விடுதலைக்கு எதிரான ஊர்வலங்களின் பின்னணியிலும் மேற்குலக சக்திகள் இருப்பது உண்மை. விடுதலைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் அதற்கு சாட்சி.
ஈழத்தை தளமாக உபயோகிக்கும் அமெரிக்காவின் ஆசைக்கும்இ ஈழத்தின் முதலமைச்சராக ஆகும் ஜெயதேவனின் ஆசைக்கும் தற்பொழுது ஈரான் விவகாரமும் விடுதலைப்புலிகளின் பலமும் ஒரு இடைஞ்சலாக இருக்கின்றன. ஈரான் பிரச்சனையே அமெரிக்காவிற்கு இப்பொழுது முக்கிய தலைவலி. அதை தீர்க்காமல் அமெரிக்கா வேறு தலைவலிகளை வரவழைத்துக் கொள்ளாது. ஆகவே தற்போதைக்கு என்ன நடந்தாலும் அமெரிக்கா ஈழத்தில் தலையிடப் போவதில்லை. ஜெயதேவனின் ஆசை நிறைவேறப் போவதும் இல்லை. மீறி அமெரிக்கா தலையிட்டாலும் கவலைப்படத் தேவயில்லை. எங்களின் விடுதலைப்புலிகள் தமிழீழத்தை பாதுகாப்பார்கள்.
ஆயினும் புலம்பெயர் வாழ் மக்கள் தமிழினத்திற்கு எதிரான மேற்குலகின் சதிவலையில் ஜெயதேவனும் ஒரு அங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயதேவனை சில சக்திகள் பயன்படுத்துகின்றன. தன்னுடைய ஆசைக்கு இந்த சக்திகளை ஜெயதேவனும் பயன்படுத்துகின்றார். இந்தக் கூட்டணி விடுதலைப்புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல. இவர்கள் தமிழ் இனத்தின் பொது எதிரிகள். விடுதலைப்புலிகள் பற்றி மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகள் தொடக்கம் ஈழத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பை விரும்பாத அனைவரும் இந்தக் கூட்டணியின் சதித் திட்டத்தை முறியடிக்கும் வேலையில் இறங்க வேண்டும். ஈராக்கிய இளைஞர்களினதும் பெண்களினதும் நிலை தமிழ் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வர வேண்டாம். எங்கள் தமிழீழம் அமெரிக்க சப்பாத்துக்களால் நசிபட வேண்டாம். ஆகவே கருத்து வேற்றுமைகளை மறந்து அனைத்து தமிழரும் ஒன்றிணைவோம்.
-வி.சபேசன் (10.03.06)
சுட்டது:http://www.webeelam.com/EealmIranUsaJeya%203.htm
vasan

