03-09-2006, 09:07 PM
<b>ம்ம் இங்கு நிறைய பெண்கள் குறிப்பாக தமிழ்ப் பெண்கள் திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயக ஆனவுடன் "Postpartum Depression" இந்த மனநோய்க்கு ஆளாவதை காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்த நோயை நிவர்த்தி செய்வதற்கு ஒரே வழிமுறை கணவன் மார் கூடியளவு நேரத்தை தனது மனைவியுடனும் குழந்தையுடனும் செலவழிக்க வேண்டும். இங்கு எல்லோரும் உழைக்க வேண்டிய வயதில் விளையாடித் திரிந்து போட்டு குழந்தை குட்டி என்று ஆனப்புறம் தான் விழுந்து விழுந்து உழைக்கிறார்கள். இதனால் அவர்கள் குடும்பமே சிதறிப்போகிறது, இந்த நிலையை தவிர்த்து வேலைக்கு ஒரு நேரம் குடும்பத்துடன் செல்வழிப்பதுக்கு ஒரு நேரம் என்று திட்டமிட்டு குடும்ப நடத்துவார்கள் ஆயின் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளலாம்.</b>

