03-06-2006, 08:44 AM
டிஜே
நீர் சொன்ன பல விடயங்கள் களங்களில் விவாதிக்கப்படாதத்கான ஒரு காரணம் நீர் சொன்ன மாதிரி உமக்கா இப்பிடி நடந்ததா என்ற கேட்பார்களே என்பதும் தான்.
நான் ஒரு வானொலி நாடகத்தயாரிப்பாளருக்கு ஒரு கதை சொன்னேன்..கிட்டத்தட்ட நீர் சொன்ன பெண்ணின் கதைதான்.அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வியும் அதான்…சொந்தக்கதையா ???கடைசியில் அந்தக்கதை நாடகமாக்கப் படவில்லை. நான் அதே கதையை பாடசாலையில் ஆங்கில வகுப்பில் எழுதினேன்.ஆசிரியர் அதை ஒரு விவாதமாகவே மாற்றி விட்டார்.ஆரோக்கியமான ஒரு விவாதமாக.
ஒரு படத்தில் கூட ரகுவரன் தன் மகளையே தாயாக்கி விடுவார்.மனைவி ஆச்சிரமம் நடத்த தொடங்கினார்.(திரைப்படத்தின் பெயர் ஞாபகம் இல்லை-தயா படமோ தெரியவில்லை).
பாடசாலையில் “ஸோ கேஸ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு படம் பாரத்தோம்.அந்தப்படத்தின்ர பெயரும் ஞாபகம் இல்லை.அதில் ஒரு 9 வயதுப்பிள்ளை பாடசாலை ஆசிரியரிடம் தந்தையாரைப் பற்றி முறைப்பாடு செய்து ஆசிரியர் அந்தப்பிள்ளையை ஒரு ஆலோசகரிடம் அழைத்துச்சென்று அதன் பின்னர் வழக்குத் தொடர்வார்.வீட்டில் அந்த ஒன்பது வயதுப்பிள்ளையை அக்கா தங்கை அம்மா எல்லோரும் திட்டுவார்கள்.நீ சொன்னது பொய்யென்று நீதிமன்றத்தில் சொல்லச் சொல்லுவார்கள்.ஆனால் சின்னத்தம்பி மட்டும் அக்கா நீ சொல்றதை நான் நம்புறன் என்பான்.அந்தப்பிள்ளை இறுதிவரை தன் கூற்றில் உறுதியாகவே இருந்தது.
வழக்கு நடைபெறும்போது தந்தையின் வக்கீல் அந்தப்பெண்ணிடம் கேட்பார் நீ ஒரு நாள் உன் தந்தையின் குறியைத் தொட்டுப்பார்க்க கேட்டாயா என்று அதற்கு அந்தச்சிறுமியும் ஆமாம் எனப்பதில் சொல்வாள்.அந்த வக்கீல் நீதானே கேட்டாய் தொட்டுப்பார்க்க வேண்டுமென்று பிறகேன் இப்பிடி ஒரு குற்றச்சாட்டு?அதற்கு அந்தப் பெண் சொல்வாள் அப்பா ஆடை மாற்றும்போது அது வித்தியாசமா இருந்தது அதனால் தான் அப்பிடிக்கேட்டேன். அப்பா நான் குழப்படி செய்யும்போதெல்லாம் என்னை கழிவறையில் பூட்டி வைத்து அடிக்கிறன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு என்னைப் பாலியல் சித்திரவதை செய்வதுண்டு என்பாள்.அக்காவிடமும் விசாரணை நடைபெறும்.அக்கா அப்பா தன்னில நல்ல பாசம் தங்கை சொல்வதில் உண்மையில்லை என்று சொல்வாள்.
ஓருநாள் அக்காவினுடைய பச்சிளங்குழந்தையை அப்பாவிடம் குடுத்துவிட்டு எங்கோயே போய் வரும்போது குழந்தையின் வித்தியாசமான அழுகுரலைக் கேட்பாள்.பிறிதொரு முறை சின்னத்தம்பியை அப்பா பாலியல்; சித்திரவதை செய்வதைக் கண்டு விடுவாள்.பின்னர் நீதிமன்றத்தில் தன்னையும் தந்தையர் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கியதை விபரிப்பாள்.தன் தாயார் தந்தையாரை மிகவும் நேசித்ததால் தன்னால் தந்தையாரின் வக்கிரத்தை யாரிடமும் சொல்ல முடியவில்லை.இப்பொழுது தன் தங்கை தம்பி குழந்தை இப்படி எல்லாரும் பலிக்கடாவாக்கப்பட்டதால் இந்த உண்மையைச் சொல்கிறேன் என்றாள்.
அந்த 9 வயதுச்சிறுமியின் துணிச்சலை அனைவரும் பாராட்டினார்கள்.முக்கியமாக அவளை வெறுத்த பழித்த அவளது தோழியரும் அவளுக்குத் திரும்பக் கிடைத்தனர்.
திரைப்படத்தின் பெயர் ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.
நீர் சொன்ன பல விடயங்கள் களங்களில் விவாதிக்கப்படாதத்கான ஒரு காரணம் நீர் சொன்ன மாதிரி உமக்கா இப்பிடி நடந்ததா என்ற கேட்பார்களே என்பதும் தான்.
நான் ஒரு வானொலி நாடகத்தயாரிப்பாளருக்கு ஒரு கதை சொன்னேன்..கிட்டத்தட்ட நீர் சொன்ன பெண்ணின் கதைதான்.அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வியும் அதான்…சொந்தக்கதையா ???கடைசியில் அந்தக்கதை நாடகமாக்கப் படவில்லை. நான் அதே கதையை பாடசாலையில் ஆங்கில வகுப்பில் எழுதினேன்.ஆசிரியர் அதை ஒரு விவாதமாகவே மாற்றி விட்டார்.ஆரோக்கியமான ஒரு விவாதமாக.
ஒரு படத்தில் கூட ரகுவரன் தன் மகளையே தாயாக்கி விடுவார்.மனைவி ஆச்சிரமம் நடத்த தொடங்கினார்.(திரைப்படத்தின் பெயர் ஞாபகம் இல்லை-தயா படமோ தெரியவில்லை).
பாடசாலையில் “ஸோ கேஸ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு படம் பாரத்தோம்.அந்தப்படத்தின்ர பெயரும் ஞாபகம் இல்லை.அதில் ஒரு 9 வயதுப்பிள்ளை பாடசாலை ஆசிரியரிடம் தந்தையாரைப் பற்றி முறைப்பாடு செய்து ஆசிரியர் அந்தப்பிள்ளையை ஒரு ஆலோசகரிடம் அழைத்துச்சென்று அதன் பின்னர் வழக்குத் தொடர்வார்.வீட்டில் அந்த ஒன்பது வயதுப்பிள்ளையை அக்கா தங்கை அம்மா எல்லோரும் திட்டுவார்கள்.நீ சொன்னது பொய்யென்று நீதிமன்றத்தில் சொல்லச் சொல்லுவார்கள்.ஆனால் சின்னத்தம்பி மட்டும் அக்கா நீ சொல்றதை நான் நம்புறன் என்பான்.அந்தப்பிள்ளை இறுதிவரை தன் கூற்றில் உறுதியாகவே இருந்தது.
வழக்கு நடைபெறும்போது தந்தையின் வக்கீல் அந்தப்பெண்ணிடம் கேட்பார் நீ ஒரு நாள் உன் தந்தையின் குறியைத் தொட்டுப்பார்க்க கேட்டாயா என்று அதற்கு அந்தச்சிறுமியும் ஆமாம் எனப்பதில் சொல்வாள்.அந்த வக்கீல் நீதானே கேட்டாய் தொட்டுப்பார்க்க வேண்டுமென்று பிறகேன் இப்பிடி ஒரு குற்றச்சாட்டு?அதற்கு அந்தப் பெண் சொல்வாள் அப்பா ஆடை மாற்றும்போது அது வித்தியாசமா இருந்தது அதனால் தான் அப்பிடிக்கேட்டேன். அப்பா நான் குழப்படி செய்யும்போதெல்லாம் என்னை கழிவறையில் பூட்டி வைத்து அடிக்கிறன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு என்னைப் பாலியல் சித்திரவதை செய்வதுண்டு என்பாள்.அக்காவிடமும் விசாரணை நடைபெறும்.அக்கா அப்பா தன்னில நல்ல பாசம் தங்கை சொல்வதில் உண்மையில்லை என்று சொல்வாள்.
ஓருநாள் அக்காவினுடைய பச்சிளங்குழந்தையை அப்பாவிடம் குடுத்துவிட்டு எங்கோயே போய் வரும்போது குழந்தையின் வித்தியாசமான அழுகுரலைக் கேட்பாள்.பிறிதொரு முறை சின்னத்தம்பியை அப்பா பாலியல்; சித்திரவதை செய்வதைக் கண்டு விடுவாள்.பின்னர் நீதிமன்றத்தில் தன்னையும் தந்தையர் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கியதை விபரிப்பாள்.தன் தாயார் தந்தையாரை மிகவும் நேசித்ததால் தன்னால் தந்தையாரின் வக்கிரத்தை யாரிடமும் சொல்ல முடியவில்லை.இப்பொழுது தன் தங்கை தம்பி குழந்தை இப்படி எல்லாரும் பலிக்கடாவாக்கப்பட்டதால் இந்த உண்மையைச் சொல்கிறேன் என்றாள்.
அந்த 9 வயதுச்சிறுமியின் துணிச்சலை அனைவரும் பாராட்டினார்கள்.முக்கியமாக அவளை வெறுத்த பழித்த அவளது தோழியரும் அவளுக்குத் திரும்பக் கிடைத்தனர்.
திரைப்படத்தின் பெயர் ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>

