03-05-2006, 10:30 PM
<b>வைகோ அணி மாறியதன் காரணங்களும் விளைவுகளும் - ஓர் ஆய்வு</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/03/20060304172534vaikojaya203.jpg' border='0' alt='user posted image'>
<i> ஜெயலலிதாவுடன் புதிய கூட்டணி அமைத்துள்ளார் வைகோ</i>
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதற்கான காரணங்கள் மற்றும் இதன் காரணமாக அரசியல் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமாகிய ஞானி தமிழோசையில் கருத்துவெளியிட்டார். அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:
'திமுகவில் இருந்து வைகோ வெளியேவர முக்கியக் காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்தான். அதைத் தவிர அவருக்கும் திமுகவுக்கும் பெரிய அளவில் கொள்கை வேறுபாடுகள் இருக்கவில்லை. தற்போது திமுக தலைவருக்கு வயதாகிவிட்டதால் திமுக ஆட்சியைப் பிடித்தால், விரைவில் ஸ்டாலின் முதல்வராக்கப்படுவார் என்பது பகிரங்கமாகவே தெரிவிக்கப்படும் நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வைகோவுக்கு வேறுவழியில்லை.
கடந்த முறை வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இதேநிலை தொடரும் என்று கூறமுடியாது என்றாலும் திமுகவுக்கு சற்றே சரிவு ஏற்படும். அதிமுகவுக்கு இது ஆதாயம்தான். மதிமுகவுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற இந்த கூட்டணி வழிவகை செய்துள்ளது.
மதிமுக தொண்டர்கள் வைகோவை பொடாவில் சிறையில் தள்ளியதைப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. திமுக கூட்டணியில் வைகோவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததைத்தான் பெரிய பிரச்சனையாகக் கருதுகிறார்கள்.
வைகோவும் திருமாவளவனும் தங்களின் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையை தொடர்ந்து மேற்கொள்வார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து எதிர்ப்பார் என்றே எதிர்பார்க்கலாம். தமிழகத் தேர்தலில் ஈழப் பிரச்சனை பிரதான பிரச்சனை கிடையாது. இது தேர்தலை ஒட்டிய கூட்டணி மட்டுமே.'
-பீபீசி தமிழ்
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/03/20060304172534vaikojaya203.jpg' border='0' alt='user posted image'>
<i> ஜெயலலிதாவுடன் புதிய கூட்டணி அமைத்துள்ளார் வைகோ</i>
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதற்கான காரணங்கள் மற்றும் இதன் காரணமாக அரசியல் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமாகிய ஞானி தமிழோசையில் கருத்துவெளியிட்டார். அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:
'திமுகவில் இருந்து வைகோ வெளியேவர முக்கியக் காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்தான். அதைத் தவிர அவருக்கும் திமுகவுக்கும் பெரிய அளவில் கொள்கை வேறுபாடுகள் இருக்கவில்லை. தற்போது திமுக தலைவருக்கு வயதாகிவிட்டதால் திமுக ஆட்சியைப் பிடித்தால், விரைவில் ஸ்டாலின் முதல்வராக்கப்படுவார் என்பது பகிரங்கமாகவே தெரிவிக்கப்படும் நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வைகோவுக்கு வேறுவழியில்லை.
கடந்த முறை வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இதேநிலை தொடரும் என்று கூறமுடியாது என்றாலும் திமுகவுக்கு சற்றே சரிவு ஏற்படும். அதிமுகவுக்கு இது ஆதாயம்தான். மதிமுகவுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற இந்த கூட்டணி வழிவகை செய்துள்ளது.
மதிமுக தொண்டர்கள் வைகோவை பொடாவில் சிறையில் தள்ளியதைப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. திமுக கூட்டணியில் வைகோவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததைத்தான் பெரிய பிரச்சனையாகக் கருதுகிறார்கள்.
வைகோவும் திருமாவளவனும் தங்களின் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையை தொடர்ந்து மேற்கொள்வார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து எதிர்ப்பார் என்றே எதிர்பார்க்கலாம். தமிழகத் தேர்தலில் ஈழப் பிரச்சனை பிரதான பிரச்சனை கிடையாது. இது தேர்தலை ஒட்டிய கூட்டணி மட்டுமே.'
-பீபீசி தமிழ்
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

