03-04-2006, 10:40 PM
<b>அதிமுக அணிக்கு மாறியது மதிமுக</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/03/20060304172534vaikojaya203.jpg' border='0' alt='user posted image'>
அஇஅதிமுக முகாமிற்கு அணி மாறியிருக்கிறது மதிமுக. அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 35 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சி சகாக்களுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து ஏறத்தாழ 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதற்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது
அஇஅதிமுக - மதிமுக கூட்டணி பெரும் வெற்றிபெறும் என வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
இருகட்சிகளுக்குமிடையே தொகுதிப்பங்கீடு ஏற்பட்டுவிட்டது என்ற செய்திவெளியானவுடன் மதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். வைகோவை பொடா சட்டத்தின் கீழ்கைது செய்து ஒன்றரை ஆண்டு காலம் சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா என்பதைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை.
செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயலலிதா, வைகோ இருவருமே நடந்ததைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது, எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்போம் எனக் கூறினர்.
<b>தனியாக மாலையில் நிருபர்களிடம் பேசியபோதும் வைகோ ஈழத்தைப் பொறுத்தவரை தன் நிலையில் மாற்றமில்லை என்றும் களத்தில் நிற்கும் போராளிகளுக்கு தங்கள் ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.</b>
நூறு இடங்கள் கொடுத்தாலும் என் மகன் ஜெயலலிதா பக்கம் போகமாட்டான் என்று சமீபத்தில் வைகோவின் தாய் பேட்டி அளித்திருந்தார். வைகோவும் சிலவாரங்ள் ஊசலாடிவிட்டு திமுகவுடன்தான் என அறிக்கை விடுத்தார்.
ஆனால் இப்போது திமுக அளிக்க முன்வந்த இடங்கள் போதாது என்கிறார் வைகோ. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தொடரும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
<b>திமுக மாநாட்டில் கொந்தளிப்பு - வைகோ அணிமாற்றம் எதிரொலி</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/03/20060304172406vaikocutoutremoval203.jpg' border='0' alt='user posted image'>
களையப்படுகிறது வைகோ கட்-அவுட்
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விலகிய செய்தி, திருச்சியில் நடைபெற்றுவரும் திமுக மாநில மாநாட்டில் கலந்து கொண்டுவரும் திமுக தொண்டர்கள் மத்தியில் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
திமுக மாநாட்டு பந்தலை ஒட்டிவைக்கப்பட்டிருந்த வைகோவின் கட்-அவுட்கள் அகற்றப்பட்டன. அவரின் படங்கள் கிழித்தெறியப்பட்டன.
வைகோவின் முடிவை தாங்கள் எதிர்பார்த்திருந்ததாக சில திமுக தொண்டர்கள் கூறினார்கள். வைகோ துரோகம் செய்து விட்டார், தவறான பாதையில் சென்றுவிட்டார் போன்ற கருத்துக்களையும் திமுக தொண்டர்கள் வெளிப்படுத்தினர்.
<b>வைகோ மத்திய கூட்டணியில் நீடிப்பதை அனுமதிக்க மாட்டோம்: கருணாநிதி</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/06/20040628130856040628_karuna_203.jpg' border='0' alt='user posted image'>
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய வைகோ மத்திய அரசில் ஆட்சி செய்யும் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் காரணமாக வைகோ அதிமுக கூட்டணிக்குப் போகவில்லை என்று தெரிவித்த திமுக தலைவர், அதே சமயம் வைகோ எதனால் அணி மாறினார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நூறு இடங்கள் கொடுத்தாலும் என் மகன் அதிமுக கூட்டணிக்குப் போக மாட்டான் என்று வைகோவின் தாயார் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியை சுட்டிக்காட்டிய திமுக தலைவர் மு.கருணாநிதி, தாய் சொல்லியே கேட்காத வைகோ இந்தத் தனயன் சொல்லிக் கேட்பாரா என்று செய்தியாளர்களிடம் வினவினார்.
-BBC tamil
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/03/20060304172534vaikojaya203.jpg' border='0' alt='user posted image'>
அஇஅதிமுக முகாமிற்கு அணி மாறியிருக்கிறது மதிமுக. அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 35 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சி சகாக்களுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து ஏறத்தாழ 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதற்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது
அஇஅதிமுக - மதிமுக கூட்டணி பெரும் வெற்றிபெறும் என வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
இருகட்சிகளுக்குமிடையே தொகுதிப்பங்கீடு ஏற்பட்டுவிட்டது என்ற செய்திவெளியானவுடன் மதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். வைகோவை பொடா சட்டத்தின் கீழ்கைது செய்து ஒன்றரை ஆண்டு காலம் சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா என்பதைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை.
செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயலலிதா, வைகோ இருவருமே நடந்ததைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது, எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்போம் எனக் கூறினர்.
<b>தனியாக மாலையில் நிருபர்களிடம் பேசியபோதும் வைகோ ஈழத்தைப் பொறுத்தவரை தன் நிலையில் மாற்றமில்லை என்றும் களத்தில் நிற்கும் போராளிகளுக்கு தங்கள் ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.</b>
நூறு இடங்கள் கொடுத்தாலும் என் மகன் ஜெயலலிதா பக்கம் போகமாட்டான் என்று சமீபத்தில் வைகோவின் தாய் பேட்டி அளித்திருந்தார். வைகோவும் சிலவாரங்ள் ஊசலாடிவிட்டு திமுகவுடன்தான் என அறிக்கை விடுத்தார்.
ஆனால் இப்போது திமுக அளிக்க முன்வந்த இடங்கள் போதாது என்கிறார் வைகோ. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தொடரும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
<b>திமுக மாநாட்டில் கொந்தளிப்பு - வைகோ அணிமாற்றம் எதிரொலி</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/03/20060304172406vaikocutoutremoval203.jpg' border='0' alt='user posted image'>
களையப்படுகிறது வைகோ கட்-அவுட்
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விலகிய செய்தி, திருச்சியில் நடைபெற்றுவரும் திமுக மாநில மாநாட்டில் கலந்து கொண்டுவரும் திமுக தொண்டர்கள் மத்தியில் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
திமுக மாநாட்டு பந்தலை ஒட்டிவைக்கப்பட்டிருந்த வைகோவின் கட்-அவுட்கள் அகற்றப்பட்டன. அவரின் படங்கள் கிழித்தெறியப்பட்டன.
வைகோவின் முடிவை தாங்கள் எதிர்பார்த்திருந்ததாக சில திமுக தொண்டர்கள் கூறினார்கள். வைகோ துரோகம் செய்து விட்டார், தவறான பாதையில் சென்றுவிட்டார் போன்ற கருத்துக்களையும் திமுக தொண்டர்கள் வெளிப்படுத்தினர்.
<b>வைகோ மத்திய கூட்டணியில் நீடிப்பதை அனுமதிக்க மாட்டோம்: கருணாநிதி</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/06/20040628130856040628_karuna_203.jpg' border='0' alt='user posted image'>
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய வைகோ மத்திய அரசில் ஆட்சி செய்யும் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் காரணமாக வைகோ அதிமுக கூட்டணிக்குப் போகவில்லை என்று தெரிவித்த திமுக தலைவர், அதே சமயம் வைகோ எதனால் அணி மாறினார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நூறு இடங்கள் கொடுத்தாலும் என் மகன் அதிமுக கூட்டணிக்குப் போக மாட்டான் என்று வைகோவின் தாயார் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியை சுட்டிக்காட்டிய திமுக தலைவர் மு.கருணாநிதி, தாய் சொல்லியே கேட்காத வைகோ இந்தத் தனயன் சொல்லிக் கேட்பாரா என்று செய்தியாளர்களிடம் வினவினார்.
-BBC tamil

