Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்
#9
சித்தாந்தத்திற் காணப்படும் சமயக் கருத்துக்களான "உண்மைகள்" சோழர் கால இலௌகிக - உலகியல் இலக்கியங்களிலும் வேறு வடிவத்திற் காணப்படுகின்றன. சமயத்துறையில் ஆண்டானுக்கு உயர்ச்சி கூறியது சித்தாந்தம், அப்பணியையே சோழர் காலத்தெழுந்த பெரும்பாலான சிற்றிலக்கியங்களும் செய்தன. உதாரணமாகத் தண்டயாசிரியருடைய 'காவ்யாதர்சம்' சோழர் காலத்தின் தொடக்கத்திலே பெயர்க்கப்பட்டது. நாற்பொருளையும் பயக்கும்நீதி நெறிகளையுடைய தாயும் சிறந்த நாயகன் ஒருவனை யுடையதாயும், மலை, கடல், நாடு, நகர், பருவம் என்பவைகளையும் இவை போன்ற பிறவற்றையும் கொண்ட காப்பியங்கள் போன்று இது வழிவகுத்தது. தண்டியலங்காரத்திலே 'தன்னிகரில்லாத் தலைவன் என்றே கூறப்படும். இவ்விலக்கணத்தை விளக்கும் சாகித்திய தர்ப்பணம் என்னும் நூல் 'நாயகனாவான் அழகு, இளமை, புகழ், ஆண்மை, ஆக்கம், ஊக்கம், அருள், பிரதாபம், கொடை, குலம் முதலிய குணங்களுடையவனாய் இருத்தல் வேண்டும் என்று கூறும்63. இத்தகைய இலக்கணங்கள் பொருந்திய "ஒரு இதிகாசபுருஷனை அல்லது சிறந்த நாயகனைக் குறித்துள்ள சரிதத்தைப் பொருளாகக் கொண்டு, உலகினர்க்கு நன்மை புரியும் நோக்குடன் சுவைபட விரிவாகக் கூறிச் செல்லும் நூலே காப்பியமாகும்.64

கோவை பிள்ளைத்தமிழ், உலா, பரணி முதலிய சிற்றிலக்கிய வடிவங்களும், சாசனச் செய்யுட்களும், பெருங்காப்பியங்களும், தேவராயினும், மானுடராயினும் "தலைவர்" புகழே பாடின. நிலமானிய முறையும் பேரரசும் வளருமிடங்களில் இது இயல்பான தோற்றமே. நரலோக வீரனும் கம்பர் மூவேந்த வேளானும், கருணாகரத் தொண்டைமானும், சடையப்பவள்ளலும், திரிபுவனச் சக்கரவர்த்திகளோடு சேர்ந்து நாட்டாட்சி செய்தவர் தாம். அந்த வர்க்கத்திற்குத் துதிபாடவே காப்பியங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவின. žவகசிந்தாமணியானது அடியெடுத்துக் கொடுக்கப் பின்வந்தவர்கள் பெருந்தலைவரைப் பாடினர். வணிகரைப் பாடினர். அவதார புருடர்களைப் பாடினர். தெய்வங்களைப் பாடினர். காவியங்களின் அடிப்படைக் கருத்துக்களம், கதாநாயகரது பண்புகளம் அவன்றின் வர்க்கச்சார்பைத் தெளிவாக்ககின்றன.65 அதுமட்டுமன்று. மெல்ல மெல்லக் காவியங்கள் மக்களின் கருத்துலகையே முற்றுகையிடலாயின. பருப்பொருள்களையும் இயக்கவியலையும் விடுத்து, கருத்துக்களையும் இயக்க மறுப்பியலையும் இக்காப்பியங்கள் கைக்கொண்டன. இதனை வையாபுரிப் பிள்ளையவர்கள் "காவிய நிகழ்ச்சிகளின் நிலைக்களம் செய்கை உலகினின்று, கருத்துலகத்திற்கு மாறிவிடுகிறது" என்கிறார்.66 இதனையே சைவசித்தாந்த நூல்களும் செய்தன என்னும் உண்மையை நாம் உணரும் போது அக்காலக் கருத்துக்களின் வர்க்கச் சார்பு புலனாகின்றது. "ஏர்எழுபது" "திருக்கை விளக்கம்" முதலிய உழவரைச் சிறப்பிக்கும் நூல்கள் தோன்றிய காலம் அது என்பதன் முழுப் பொருளும் நமக்குத் தெளிவாகி விடுகின்றன.

இவ்வாறு தமிழ் நாட்டின் பௌதீக அடிப்படைகளினாற் சிறப்பாகவும், இந்தியா முழுவதிலும் ஏற்பட்ட சில மாற்றங்களினாலே பொதுவாகவும் பாதிக்கப்பட்டுப் பிற்காலச் சோழர் ஆட்சியிலே கனிந்த சைவ சித்தாந்தம், தமிழர் தம் தனிச் சிறப்பின் விளைபொருளாகவும் அமைந்துள்ளது என்பது பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடில்லை67 அனவரத விநாயக பிள்ளையவர்கள் இது குறித்து எழுதுகையில் "சைவ சித்தாந்தம் தமிழ் மரத்தில் காய்த்துக் கனிந்த கனியென்றுரைத்தலே சாலும்" என்றார்.68 தொன்று தொட்டுத் தமிழர் தம் மரபில் வந்த உணர்ச்சிகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் முதலிய யாவற்றையும் ஒட்டியும் வெட்டியுமே சித்தாந்தம் உருப்பெற்றது. அதற்கு ஒரு தார்மீக பலம் இருந்தது. அது முக்கியமான வகையில் இன்னும் செயற்பட்டு வருகின்றது. அதுபற்றி ஐயமில்லை. ஆனால் எந்தத் "தத்துவத்தையும் குறிப்பாக அதன் சகல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு அவை சரித்திரத்தில் என்ன பாத்திரம் வகிக்கின்றன என்று நாம் பார்க்க விரும்பினால், தத்துவத்தைச் சரித்திரத்திலிருந்து பிரித்து வைக்காமல் பரிžலனை செய்ய வேண்டும். தத்துவத்தைச் சரித்திரத்திலிருந்து பிரிக்காமல் பார்ப்பது என்று சொன்னால் தத்துவத்தைச் சமுதாய வாழ்விலிருந்து தொடங்கி, சமுதாயத்துக்குள் நின்று, தத்துவம் வகிக்கும் பாத்திரத்தையும் அதன் காரணப் பொருள்களையும் வடிவங்களையும் நாம் பரிžலிக்க வேண்டும்.69

அதனையே இக்கட்டுரையிலே செய்ய முயன்றுள்ளோம். பிரமஞானமும், மாயாவாதமும், ஏகான்மவாதமும் பிறவும் காட்டும் இயக்க மறுப்பியலையும் கருத்து முதல் வாதத்தையும் சித்தாந்தம் காட்டும் பதிஞானத்தையும், முப்பொருளுண்மை வாதத்தையும், சத்காரிய வாதத்தையும் žவன் மூத்த நிலையையும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது சித்தாந்தம் குறிப்பிடத்தக்க அளவு மெய்ம்மை வாதப் பண்பு பொருந்தியது என்பது உறுதியாகும். ஆரியருக்க முற்பட்ட இந்தியாவிலே வாழ்ந்த திராவிடரிடையே நிலவிய புராதனப் பொருள் முதல் வாதமும், பிற்காலத்தின் மெய்ம்மை வாதமும் பன்மை வாதமும் துலங்கப் பலவழிகளில் உதவியுள்ளன. எனினும் அது பற்றி இங்கு ஆராயப்புகுவது வேண்டற் பாலதொன்றன்று. அது மட்டுமன்றி அது நம்மைப் பூரணமான இயக்க மறுப்பு இயல் வாத ஆராய்ச்சியிற் கொண்டு நிறுத்தி விடும்.


அடிக்குறிப்புகள்

1. எஸ்.அனவரதவிநாயகம்பிள்ளை-சைவசித்தாந்த வரலாறு: ம.பாலசப்பிரமணியம்-சித்தாந்த சாத்திரம் (சமாஜ பதிப்பு).

2. கி.லட்சுமணன் - இந்திய தத்துவ ஞானம்.

3. அனவரதவிநாயகமபிள்ளை -Ibid. p-7

4. K.A. Nilakanta Sastri-Cholas. Vol. part 1, p.472-475.

5. க.கைலாசபதி-நாடும் நாயன்மாரும் (இளங்கதிர்) பேராதனைப் பல்கலைக் கழக தமிழ் மாணவர் மன்ற வெளியீடு 1961.

6. பிரெடரிக் ஏங்கெல்ஸ்...குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் பக். 370...371 (தமிழ் மொழிபெயர்ப்பு)

7. K.A. Nilakanta Sastri - A History of South India, p.174.

8. K.A. Nilakanta Sastri - STUDIES IN CHOLA HISTORY AND ADMINISTRATION, P.176.

9. டி.வி. சதாசிவ பண்டாரத்தார்-பிற்காலச் சோழர் சரித்திரம் (மூன்றாம் பகுதி), பக் 17.

10. Nilakanta Sastri, op.cit. பக்78-79

11. எஸ்.ராமகிருஷ்ணன்-மாக்ஸ“யப் பொருளாதாரம் (முதற்பாகம்), பக்,20.

12. சதாசிவபண்டாரத்தார், op,citடக்.78-79

13. FEUDALISM IN HISTORY (ed.) R.Coulbron p.18-20.

14. Ibid. p.20-21.

15. A.L. Morton - A PEOPLES'S HISTORY OF ENGLAND, p.59-61.

16. Marion Gibbs - Feudal Order (past and Present Series p.7.9.

17.Nilakanta Sastri op.cit. p.182

18. CHOLAS Vol.2, part 1, p. 219-20

19. Ibid. p.502

20. A. Appadorai - ECONOMIC CONDITIONS IN SOUTHERN INDIA Vol.p.275

21. S.I.I Vol. II p.66

22. Appadorai - Ibid 283.

23. S.I.I. Vol.VIII No. 244

24. T.v. Mahalingan - SOUTH INDIAN POLITY ; p. 173-80

25. CHOLAS: op cit.p. 502.

26. CHOLAS: Ibid: p.504-505

27. Appadorai: Ibid: p.315

28. CHOLAS, Ibid : p.363

29. 141 of 1922, A.R.E. 1922 part II, para 19.

30. 223 of 1917, A.R.E. 1918, part II, para 49.

31. நா. வானமாமலை -மூடுதிரை-தாமரை; மே 1962

32. சதாசிவ பண்டாரத்தார். op.cit. p. 107.

33. CHOLAS, Ibid. p.294

34. CHOLAS, Ibid p.264

35. Appadorai, Ibid, p.300-1

36. வானமாமலை, Ibid, ப.9.

37. Trav Arch. Series, III P. 164

38. மா.இராசமாணிக்கனார், தமிழக ஆட்சி, பக்.160.

39. சிவஞானபோதம் சூ.12

40. சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்; திருவாவடுதுறை ஆதீனப் பதிப்பு, 1954, பக், 257-67

42. CHOLAS (2nd Ed) p.452?53; THE HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE vol.V. `THE STRUGGLE FOR EMPIRE` p.281.

43. மா.இராசமாணிக்கனார், தமிழக வரலாறு, பக்.139

44. CHOLAS. Ibid. p.462-63

45. ஓளவை,சு. துரைசாமிப் பிள்ளை- மெய்கண்டார், பக்.7

46. க.கைலாசபதி, 'தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி..."(இந்து தர்மம் 1961, பேராதனைப் பல்கலைக் கழக இந்து மாணவர் வெளியீடு) பக்.44

47. D.D. Kosambi- AN INTRODUCTION TO THE STUDY OF INDIAN HISTORY, p.245-46

48. CHOLAS; Ibid. p.642-43.

49. சிவஞானபோதமும், சிவஞானபாடியமும் - (கழகப்பதிப்பு-1963) பக்.416-17.

50. திருக்குறர்: 9 பரிமேலழகர் உரை.

51. சிவஞானபோதமும் சிற்றுரையும் - Ibid. பக். 60-61.

52. சிற்று€டிர - பக்.46.

53. நாடும் நாயன்மாரும் - பக்.21-22

54. ஜோர்ஜ் பொலிட்ஸர்-மார்க்ஸ“ய மெய்ஞானம், (மொழிபெயர்ப்பு), பக் 181-85

55. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்-தமிழா நினைத்துப் பார், 88-89.

56. சிவஞானபோதம், 10-ம் சூத்.

57.சித்தாந்த மாணவன்-சிவஞானபோதாசாரம், பக்.112

58. சிற்றுரை, பக் 223.

59. மாபாடியம், Ibid. பக்.479-81

60. சிவப்பிரகாசம், உண்மை; (திருவிளங்கம், பதிப்பு, 1933) பக். 116-17

61. CHOLAS. Ibid. p. 462

62. CHOLAS. Ibid. p.491

63. தண்டியலங்காரம் மூலமும் உரையும் (குமார சுவாமிப் புலவர் பதிப்பு 1926), பக். 4-5.

64. எஸ்.வையாபுரிப் பிள்ளை, காவியகாலம், பக்.267-68.

65. நா வானமாமலை, காவியக் கதைத்தலைவர்கள் (தாமரை).

66. காவிய காலம், பக். 302-303.

67. V.A. Devasenapathi- SAIVA SIDDHANTA (Madras), 1960, p.2

68. சைவசித்தாந்த வரலாறு, பக்.8.

69. மார்க்ஸ“ய மெய்ஞ்ஞானம், பக்,227.

..........
http://noolaham.net/library/books/01/97/97b.htm
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 03-02-2006, 03:58 PM
[No subject] - by RaMa - 03-04-2006, 05:25 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:51 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:53 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:54 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:55 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:56 PM
[No subject] - by narathar - 03-04-2006, 05:57 PM
[No subject] - by putthan - 03-11-2006, 03:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)