03-03-2006, 12:10 PM
ரமா
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்று கூறுவார்கள். அண்ணியின் "தலையணை மந்திரங்களுக்கு" அண்ணன் அடங்கிப்போவது இயற்கைதான். ஆனால் அண்ணன் அடித்துவிட்டார் என்பதற்காக காதலுடன் ஓடிப்போக முடியுமா? காதலனின் வசதிகளையும் கவனிக்கவேண்டுமல்லவா?
இன்னும் ஒரு பழமொழி "முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்"
சிலவற்றை பெறவேண்டும் என்றால் சிலவற்றை இழக்கத்தான் வேண்டும். அண்ணனின் மனத்தை அவர் வழியில் சென்றுதான் மாற்றவேண்டும். ஒரே இரத்தம்தானே இருவரிலும் ஓடுகிறது. இன்று கோபித்த அண்ணன் நாளை மாறவும்கூடும்தானே.
"திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர்" என்றும் சொல்வார்கள்.
காதல் புனிதமானது. வித்தியாவை அண்ணனுக்குக் கட்டப்பட்டு இருக்கச்சொல்லுங்கள், இல்லையென்றால் கட்டுப்பட்டவள்போல் நடிக்கச் சொல்லுங்கள், படிக்கச் சொல்லுங்கள், என்ன நடக்கின்றது என்பதனையும் காதனுக்கு அடிக்கடி இரகசியமாக தெரியப்படுத்தச் சொல்லுங்கள்.
எதற்குக் கடிதம் எழுதவேண்டும்? இது பழைய காலக்காதல். இப்போதுதான் காதல் செய்வதற்கு கணனி, கைத்தொலைபேசிகள் இருக்கின்றனவே!
"பொறுத்தார் புூமி ஆள்வார்" என்பதும்
"மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருவிப்பாயும்" என்பதும் பொய்யல்ல!
காலம் நிச்சயம் அவர்களை ஒன்று சேர்க்கும்.
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்று கூறுவார்கள். அண்ணியின் "தலையணை மந்திரங்களுக்கு" அண்ணன் அடங்கிப்போவது இயற்கைதான். ஆனால் அண்ணன் அடித்துவிட்டார் என்பதற்காக காதலுடன் ஓடிப்போக முடியுமா? காதலனின் வசதிகளையும் கவனிக்கவேண்டுமல்லவா?
இன்னும் ஒரு பழமொழி "முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்"
சிலவற்றை பெறவேண்டும் என்றால் சிலவற்றை இழக்கத்தான் வேண்டும். அண்ணனின் மனத்தை அவர் வழியில் சென்றுதான் மாற்றவேண்டும். ஒரே இரத்தம்தானே இருவரிலும் ஓடுகிறது. இன்று கோபித்த அண்ணன் நாளை மாறவும்கூடும்தானே.
"திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர்" என்றும் சொல்வார்கள்.
காதல் புனிதமானது. வித்தியாவை அண்ணனுக்குக் கட்டப்பட்டு இருக்கச்சொல்லுங்கள், இல்லையென்றால் கட்டுப்பட்டவள்போல் நடிக்கச் சொல்லுங்கள், படிக்கச் சொல்லுங்கள், என்ன நடக்கின்றது என்பதனையும் காதனுக்கு அடிக்கடி இரகசியமாக தெரியப்படுத்தச் சொல்லுங்கள்.
எதற்குக் கடிதம் எழுதவேண்டும்? இது பழைய காலக்காதல். இப்போதுதான் காதல் செய்வதற்கு கணனி, கைத்தொலைபேசிகள் இருக்கின்றனவே!
"பொறுத்தார் புூமி ஆள்வார்" என்பதும்
"மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருவிப்பாயும்" என்பதும் பொய்யல்ல!
காலம் நிச்சயம் அவர்களை ஒன்று சேர்க்கும்.

