02-25-2006, 10:45 PM
Jude Wrote:<b> தேசியவாதிகள் </b>
அரசியல் அகதிகள் எல்லோரும் தேசியவாதிகள் அல்ல. உண்மையில் தேசியவாதிகள் இவ்வாறாக அகதிகளாக இடம்பெயரும் பணவதி கொண்டிருந்தாலும், அதை விட்டு விட்டு தாம் நேசிக்கும் தேசத்தில் நின்று போராடிவருகிறார்கள். பெரும்பாலான அரசியல்அகதிகள் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று எந்த நாடானாலும் அமைதியான வசதியான நாடானால் அங்கு மகிழ்வாக வாழ்ந்து வருகிறார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது விஞ்ஞானி ஐயன்ஸ்ரைன் ஜேர்மனியில் இருந்து அகதியாக அமெரிக்காவுக்கு போனார். இசுரேல் உருவாக ஜூயிஷ் காங்கிரஸில் இணைந்து உதவினார். இசுரேல் உருவானவுடன் இவரை அரசில் சேருமாறு அழைத்தார்கள். ஐயன்ரைன் மறுத்துவிட்டார். இறுதிவரை நன்றியுடன் அமெரிக்கனாகவே வாழ்ந்தார். தொடர்ந்து அமெரிக்க - இசுரோல் நல்லுறவு வாழ பாடுபட்டார்.
நீங்கள் தேசியவாதிகள் என்பதுக்கு யூதர்களை உதாரணம் காட்டியது தவறான உதாரணம். யூதர்கள் இஸ்றேலின் பிறப்புக்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் மட்டும் அல்ல. உலகெல்லாம் பரந்து வாழ்ந்த இனம். அங்கு நீங்கள் சொன்னது போல ஜேர்மனியிலும் பிரான்ஸ்சிலும் ரஸ்யா, (ஐரோப்பா எங்கும்) ஏன் அமெரிக்காவில் கூட வாழ்ந்த மக்கள். என்னதான் சொந்தமாக ஒரு நாடு கிடைத்தாலும் அவர்கள் அங்கு வாழப்போக வேண்டுமா.?
இதோடு வசதி வாய்ப்பு என்பது தேவையானது அது இருக்கும் இடத்துக்கு போவார்கள் என்பதை நான் மறுக்கவில்லை, அதேபோலதான் ஒரு தேசியவாதியாக என்னால் தமிழீழத்தை வசதியான வாய்ப்புக்கள் அதிகமான நாடக மாறாது என்பதை ஏற்க முடியாது.
<b>அப்படி போகாமாட்டோம் என்பவர் யாரவது இங்கு தாங்கள் எதிர்கால தமிழீழத்தை சேர்ந்தவர் இல்லை வாழும் நாட்டின் குடிமக்கள் எண்று இனங்காட்ட முடியுமா.?</b> எல்லாரும் முகமூடி போட்டு வாழ்கிறார்கள் எண்று நீங்களும் பொறுப்பில்லாமல் சொல்லாமல். அப்படிச் சொல்வதானால் அப்படி முகமூடி போடவேண்டியதின் அவசியம் என்ன எண்று சொல்லுங்கள். (இது நீங்கள் சொல்வீர்களானால் மட்டும், இல்லையானால் விட்டு விடுங்கள்)
<b>தமிழீழத்தின் எதிர்கால வளர்ச்சி என்பது கனவு அல்ல என்பது உண்மை. ! </b>
:::::::::::::: :::::::::::::::

