Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெனீவாவில் பேச்சுக்கள்
#34
பல விடயங்கள் ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது பேசப்பட்டிருக்கின்றன.. தலைப்புச்செய்தி போட்ட நபர்களாவது அவற்றின் தொகுப்பை போடுவார்களா.. பேச்சுவார்த்தைக்குமுன்னம் கொண்டுவந்துபோட்ட தலைப்புச்செய்திகளை மீண்டும் பதிவுசெய்கிறேன்..

உங்கள் செய்திகளை பதிவுசெய்யுங்கள்.. அல்லாவிடில் உங்கள் தலைப்புச் செய்திகளே பொய்யென்றாகிவிடும்..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

யார் கட்டுப்பாட்டில் சிறிலங்கா இராணுவம்?: ஜெனீவா பேச்சுக்களில் அம்பலமான உண்மைகள்!
ஜெனீவா பேச்சுக்களில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்கு சிறிலங்கா அரசாங்கக் குழு தயக்கம் காட்டியமைக்கு அலரி மாளிகையில் இருந்து அக்குழுவை இயக்கிக் கொண்டிருந்த ஜே.வி.பி.தான் காரணம் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Feb 24, 2006, 12:59

ஏப்ரல் 19 இல் மீண்டும் பேச்சுவார்த்தை: எரிக் சொல்ஹெய்ம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பிலான 2 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் ஏப்ரல் 19 ஆம் நாள் நடைபெறும் என்று நோர்வே சிறப்புத் தூதுவரும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் அறிவித்துள்ளார்.
Feb 23, 2006, 23:30

இணக்கப்பாட்டைச் செயற்படுத்தாமல் இருந்தால் அடுத்த கட்ட முயற்சிகள் எல்லாம் செயலிழந்துவிடும்: சு.ப.தமிழ்ச்செல்வன்
ஜெனீவாவில் நடைபெற்ற இருநாள் பேச்சுக்களின் முடிவில் இணக்கம் காணப்பட்டுள்ள விடயங்களைச் செயற்படுத்தாமல் தட்டிக் கழிக்க அரசாங்கம் முயற்சித்தால் அடுத்த கட்ட முயற்சிகள் எல்லாம் செயலிழந்துவிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Feb 23, 2006, 23:07

படைகளில் சிறார் சேர்ப்பு விவகாரம்: ஜெனீவாவில் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம்
சிறார்களை படைகளில் சேர்ப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
Feb 23, 2006, 14:11

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்: ஜெனீவாவில் அன்ரன் பாலசிங்கம் வலியுறுத்தல்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துகளை சிறிலங்கா அரசாங்கம் இனியும் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும் தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
Feb 22, 2006, 14:49

புலிகள் பெறப் போகும் விடுதலை தமிழருக்கு மட்டுமின்றி சிங்களவருக்கும் இதர தமிழ்க் குழுக்களுமான விடுதலை: க.வே.பாலகுமாரன்
தமிழீழ விடுதலைப் புலிகள் பெறப் போகும் விடுதலையானது தமிழருக்கு மட்டுமன்றி சிங்களவருக்கும் இதர தமிழ்க் குழுக்களுமான விடுதலையும் கூடத்தான் என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
Feb 21, 2006, 11:43

அரசு நல்லெண்ணத்துடன் செயற்பட முன்வருமா?
தேசியத் தலைவரின் பணிப்புரைக்கமைய தடுப்புக்காவலில் இருந்து மற்றுமொரு சிறிலங்கா பொலிஸ் கான்ஸ்டபிளை தமிழீழ நீதிமன்று விடுதலை செய்துள்ளது.
Feb 20, 2006, 08:00

யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறை குறித்தே ஜெனீவாப் பேச்சுக்களில் முக்கிய கருப்பொருள்: சு.ப.தமிழ்ச்செல்வன்
யுத்த நிறுத்த ஒப்பந்தம் செம்மையாக நடைமுறைப்படுத்துவதுதான் ஜெனீவாப் பேச்சுக்களில் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Feb 17, 2006, 11:00

அனுபவமற்ற அரசாங்கக் குழுவை அனுப்புவது பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கவா?: தமிழர் மனித உரிமைகள் மையம் கேள்வி
ஜெனீவா பேச்சுக்களுக்கு அனுபவமற்ற அரசாங்கக் குழுவை அனுப்புவது என்பது பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கவா? என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் கேள்வி எழுப்பியுள்ளது.
Feb 17, 2006, 00:54

சண்டையா? சமாதானமா? ஜெனீவா பேச்சுக்கள் தீர்மானிக்கும்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு!
இலங்கையில் தொடரப்போவது சண்டையா? சமாதானமா? என்பதை ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தீர்மானிக்கப் போகிறது என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
Feb 16, 2006, 15:09

மகிந்தவுக்கு ஒற்றையாட்சிதான் நிலைப்பாடு எனில் புலிகளுக்கு தனியரசுதான் நிலைப்பாடு: விடுதலைப் புலிகள் எச்சரிக்கை!
தமிழருக்குத் தாயக நிலம் இல்லை, ஒற்றையாட்சிக்குள்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசு அரசியல் நிலைப்பாடெடுத்தால், தமிழரின் தனியரசுக் கோரிக்கையை நடைமுறைப்படுத்தத் தீவிரமாக முயற்சிப்பதைத் தவிர வேற்று மாற்று வழிகள் இல்லாதுபோகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
Feb 15, 2006, 13:52

ஜெனீவாவில் அரசு கூறப் போகும் பதில் என்ன?
கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்களை விடுவிக்கின்ற நடவடிக்கை எதனையும் இதுவரை சிறிலங்கா அரசு மேற்கொள்ளாது இருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றது.
Feb 14, 2006, 07:49

யுத்த சூழலை உருவாக்குகிறது சிறிலங்கா அரசு: சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு
சிறிலங்கா அரசாங்கம் யுத்தச் சூழலை உருவாக்குகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். ரைம் ஏசியா சஞ்சிகைக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்துள்ள நேர்காணல்:
Feb 13, 2006, 16:24

தமிழர் தாயகக் கோட்பாடு நிராகரிப்பு- ஒற்றையாட்சியில்தான் தீர்வு: மகிந்த மீண்டும் அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கிற தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்க முடியாது என்றும் ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச இன்று திங்கட்கிழமை அளித்த நேர்காணல்:
Feb 13, 2006, 16:22

தீர்வுக்கும் தயார்- தீர்த்துக் கட்ட விரும்பினால் முகம் கொடுக்கவும் தயார்: க.வே.பாலகுமாரன்
சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களினூடே தீர்வு காண முன்வந்தாலும், பேச்சுவார்த்தையை இழுத்தடித்து தீர்த்து கட்ட முனைந்தாலும் முகம் கொடுக்க தயாராக உள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரித்துள்ளார்.
Feb 13, 2006, 10:04

சிங்கள அரசை நம்பிப் பயனில்லை
ஜெனீவாப் பேச்சுக்கு முன்னர் அரசாங்க தரப்பில் பங்கு பற்றும் குழுவுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றது. பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகள் சம்டி என்றால் என்ன? ஒற்றையாட்சி என்றால் என்ன? என்பது போன்ற கருத்தூட்டல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
Feb 12, 2006, 11:30

ஜெனீவா நகரில் அம்பலப்படுத்துவோம்
துணைக்குழு விடயத்தில் அரசு அசமந்தப்போக்குக் காட்டி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏன், எதற்காகப் போகவேண்டும் என்ற கேள்வி தமிழ் மக்களிடையே எழுகின்றது. சிங்கள இனவாதம் தமிழினத்தின் உரிமைகளை வழங்கப் போவதில்லை. கடந்த ஐம்பத்து எட்டு வருடங்களாக பேரினவாத அச்சில் தான் அவர்கள் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
Feb 10, 2006, 07:48

தமிழர்கள் எதிர்கொள்ளும் கெடுபிடிகளைப் புரிந்து கொண்டு பேச்சுக்கு வருவதுதான் நல்லது: சு.ப.தமிழ்ச்செல்வன்
தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களும் தற்போது சந்தித்து வருகின்ற கெடுபிடிகள் பற்றி போதியளவில் புரிந்து கொண்டு சிறிலங்கா அரசாங்கக் குழு பேச்சுவார்த்தைக்கு வருவதுதான் நல்லது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Feb 9, 2006, 14:32

பயிற்சி பெறும் அரச குழுவினர்
ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு செல்கின்ற அரச குழுவினருக்கு இப்போது சிறிலங்காவின் ஜனாதிபதி அவர்கள் பயிற்சி அளிப்பதற்கான தடல்புடல் ஏற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றார்.
Feb 9, 2006, 07:12

கௌசல்யனின் இலட்சிய கனவுகள் நனவாகும்
ஆண்டு ஒன்றுக்கு முன் ஒரு தடவை நினைத்துப் பார்ப்போம். தமிழர் தாயகம் பதறித் துடித்தது. அதுதான் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று போராளிகள் படுகொலை செய்யப்பட்ட துயரச் செய்தி அது.
Feb 7, 2006, 12:50

சமாதானப் பேச்சுக்கான திறவுகோல் போர்நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கமே: 'விடுதலைப் புலிகள்'
சமாதானப் பேச்சுக்கான திறவுகோல் போர்நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கமே என்று 'விடுதலைப் புலிகள்' இதழின் ஆசிரியர் தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.
Feb 5, 2006, 11:14

பேச்சுக்கு ஏன் அவசரத் தனம்
சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான நேரடிப் பேச்சுக்களை எங்கே நடாத்துவது என்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளின் விட்டுக் கொடுப்புடன் தீர்வு காணப்பட்ட போதும், எப்போது நடாத்துவது என்பதற்கான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு சிங்கள தேசத்திடமேயுள்ளது.
Feb 5, 2006, 11:12
8
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 02-22-2006, 10:42 AM
[No subject] - by நர்மதா - 02-22-2006, 10:44 AM
[No subject] - by Mathan - 02-22-2006, 03:20 PM
[No subject] - by Shankarlaal - 02-22-2006, 04:30 PM
[No subject] - by jsrbavaan - 02-22-2006, 05:34 PM
[No subject] - by Sukumaran - 02-22-2006, 11:56 PM
[No subject] - by வினித் - 02-23-2006, 12:15 AM
[No subject] - by Sukumaran - 02-23-2006, 12:21 AM
[No subject] - by வர்ணன் - 02-23-2006, 12:23 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-23-2006, 12:25 AM
[No subject] - by கந்தப்பு - 02-23-2006, 12:34 AM
[No subject] - by Sukumaran - 02-23-2006, 12:44 AM
[No subject] - by Sukumaran - 02-23-2006, 01:05 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-23-2006, 01:40 AM
[No subject] - by நர்மதா - 02-23-2006, 06:47 PM
[No subject] - by நர்மதா - 02-23-2006, 06:49 PM
[No subject] - by Sukumaran - 02-23-2006, 07:38 PM
[No subject] - by Sukumaran - 02-23-2006, 07:49 PM
[No subject] - by வினித் - 02-23-2006, 08:07 PM
[No subject] - by வினித் - 02-23-2006, 08:07 PM
[No subject] - by Sukumaran - 02-24-2006, 12:04 AM
[No subject] - by வினித் - 02-24-2006, 12:28 AM
[No subject] - by Birundan - 02-24-2006, 12:33 AM
[No subject] - by வினித் - 02-24-2006, 12:38 AM
[No subject] - by Birundan - 02-24-2006, 12:43 AM
[No subject] - by கந்தப்பு - 02-24-2006, 12:44 AM
[No subject] - by Birundan - 02-24-2006, 12:46 AM
[No subject] - by Sukumaran - 02-24-2006, 12:54 AM
[No subject] - by வினித் - 02-24-2006, 12:55 AM
[No subject] - by வினித் - 02-24-2006, 12:59 AM
[No subject] - by Sukumaran - 02-24-2006, 01:10 AM
[No subject] - by வினித் - 02-24-2006, 01:13 AM
[No subject] - by Sukumaran - 02-25-2006, 01:50 AM

Forum Jump:


Users browsing this thread: