02-23-2006, 09:26 PM
இங்கு அனைவரையும் பொருளாதார அகதிகள் என்று கூறி உண்மையாக அங்கு பட்ட துன்பங்களில் இருந்து விடுபட்டு வந்து அரசியல் அகதிகளாக வாழும் மக்களின் மனங்களை நோகடிக்காது இருப்பது நலம். நீங்கள் பொருளாதார அகதியாக வந்திருக்கலாம். ஆயினும் துன்பங்களை அனுபவித்தவர்களை நீங்கள் கூறும் வார்த்தைகள் காயப்படுத்தலாம். அவர்களின் துன்பங்களில் குருதிகளில் நீங்கள் பெருளாதார அகதிகளாக வந்து அரசியல் தஞ்சம் கோரியிருக்கலாம். உங்களில் சிலரிற்கு அத்தகைய துன்பங்கள் நேராமல் இருந்திருக்கலாம். ஆயினும் அதை அனுபவித்தவர்களிற்கு தெரியும் எப்படி கொடுமையான நிகழ்வுகள் அவை என்று. எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

